Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kooramal Sanyasam
Kooramal Sanyasam
Kooramal Sanyasam
Ebook99 pages37 minutes

Kooramal Sanyasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த திலகாவின் சந்தேக புத்தியாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் அவளது கணவன் முரளி மற்றும் மகள் அனிதா இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் வெகுண்டெழுந்தவர்களின் திடீர் முடிவுகளையும் கதையை வாசித்து அறியலாம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580155608768
Kooramal Sanyasam

Read more from Lakshmi

Related to Kooramal Sanyasam

Related ebooks

Related categories

Reviews for Kooramal Sanyasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kooramal Sanyasam - Lakshmi

    http://www.pustaka.co.in

    கூறாமல் சன்னியாசம்

    Kooramal Sanyasam

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ஆபீஸ் பையன் மெல்லக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான். பகல் உணவு நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்தியபடி அவன் கையில் சுமந்து வந்த குளிர் நீர் கொண்ட கூஜாவையும் டம்ளரையும் மேஜை மீது வைத்தான்.

    ‘டிபன் ஏதாச்சும்...?’ தலையைச் சொரிந்தபடி கதவைப் பிடித்துக்கொண்டு தயக்கமாக நின்றான் பையன்.

    அம்மா இறந்துபோன பின்னர்... மாதத்தின் முக்கால்வாசி நாட்கள் முரளி தங்கள் அலுவலகத்திற்கு எதிரே இருந்த அந்தப் பெரிய ஹோட்டலிலிருந்து டிபன் வாங்கி வரப் பையனை அனுப்புவது வழக்கம். ஐயா வீட்டின் அவல நிலை பாவம் அந்தப் பையனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே.

    வேண்டாம். இன்னிக்கு வீட்டிலிருந்து டிபன் கொண்டு வந்துவிட்டேன் ஒட்டுமொத்தமாகப் பதிலளித்தான்.

    பையன் கதவைச் சாத்திக்கொண்டு போனதும் எழுந்து, முதலில் டெலிபோன் ரிஸீவரை அதனுடைய பீடத்திலிருந்து இறக்கிக் கீழே வைத்தான்.

    திலகாவிற்கு ஒரு பெரும் கெட்ட பழக்கம்.

    உணவு நேரத்தில் அவன் அலுவலகத்தில் இருக்கிறானா என்று துப்புப் பார்க்க அடிக்கடி போன் செய்துவிடுவாள்.

    மூச்சுவிடாது, ஃபைல்களைக் கவனித்துக் கையெழுத்திட்டு, தொலைபேசியில் வியாபாரிகளுடன் பேசி... மானேஜிங் டைரக்டரின் அறைக்கு நடையாக நடந்து... அப்பாடா என்று உட்காரும் அந்த ஒரு மணிநேர ஓய்வைக்கூட அவன் அனுபவிக்க முடியாதபடி தொலைபேசி மூலம் தொல்லை கொடுப்பாள்.

    அவளது கெட்ட வழக்கம் இப்போது அதிகமாகி... ஒரு பயங்கர நிலையை அடைந்துவிட்டிருந்தது.

    பகல் உணவு நேரத்து மணி கிணுகிணுத்தது. சில நிமிஷங்களுக்குப் பின்னர் மெல்லக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து வராந்தாவிலே நின்றான்.

    அலுவலகத்தின் சந்தடியெல்லாம் அடங்கி... அமைதியில் அது மூழ்கிக் கிடந்தது.

    ஆனால்... கீழே முன்பக்கத்துத் தோட்டத்தில் அங்கு வேலை பார்த்த ஆண்களும் பெண்களும் கும்பல் கும்பலாக இங்குமங்கும் நின்று பேசிச் சிரிப்பதைக் கண்டான்.

    அவரவர்கள் வீட்டில் பிரச்சினைகள் எத்தனையோ?

    ஆனால் அந்த ஒரு மணிநேரமாவது அவர்கள் ஓய்வாக, சந்தோஷமாகக் கழிக்க முடிந்தது.

    அவன்?

    நாள் முழுவதும் ஒரு நரக வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தான்.

    அன்று காலை வீட்டைவிட்டுக் கிளம்பும்போது வழக்கம்போல திலகா சண்டையை ஆரம்பித்துவிட்டிருந்தாள்.

    இன்னிக்கு என்ன இந்தப் புது ஸூட்டில் மாப்பிள்ளையைப் போல கிளம்பிட்டிங்க மிகவும் ஏளனமாகக் கேட்டு அவனது கோபத்தைக் கிளறினாள்.

    கல்யாண மாப்பிள்ளைகள்தான் புது ஸூட் கோட் போடுவார்களா? பதிலளித்தபடி காலைத் தூக்கி முக்காலி மீது வைத்துக்கொண்டு ஷு லேசுகளை வேகமாகக் கட்டிக்கொண்டான்.

    கேட்கிறதுக்கு நேரடியா பதில் சொன்னால் உங்க கௌரவம் குறைஞ்சுடுமோ?

    டைரக்டர் மீட்டிங் இருக்கு... பம்பாயிலிருந்து பெரியவர் வரார்...

    மாசத்துக்கு இரண்டு வாட்டி வராப்பல இருக்கே?

    கோடிக்கணக்கா பணத்தைப் போட்டு வியாபாரம் நடத்துகிறவர்... மாசத்துக்கு முப்பது தடவைகூட வரலாம். அவர் வியாபாரம் எப்படி நடக்கிறதுன்னு அடிக்கடி மேற்பார்வையிட அவருக்கு உரிமை இருக்கில்லையா?

    இவ்வளவு பொறுமையாக அவன் அவளுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

    முன்பெல்லாம் கையாண்ட அந்த மௌனத்தை அவன் இன்றும் மேற்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பி இருக்கலாம்.

    ஆனால் அவர்களது மகள் அனிதாவுக்கு இன்று கல்லூரி விடுமுறை நாள். அவள் வீட்டிலிருந்தாள். அவள் முன்போல் ஒரு சின்னக் குழந்தையல்ல. உணர்வுகளின் பிழம்பாக உருவாகிக்கொண்டிருந்த பதினெட்டு வயதுப் பருவப் பெண். கல்லூரியில் பி.ஏ. முதலாவது ஆண்டில் படித்துக்கொண்டிருந்தாள். இதுவரை அப்பாவும் அம்மாவும் அடிக்கடி போட்டுக்கொண்ட சண்டைகளின் பாதிப்பு அவளது இளம் உள்ளத்தை எவ்வளவு தூரம் அவலப்படுத்தியதோ தெரியாது.

    ஆனால் இனி அவள் முன் அவர்கள் சண்டை போட்டுக்கொள்வது மிகவும் அசிங்கம்.

    இன்னொருவன் வீட்டில் போய் வாழ வேண்டிய பெண்ணுக்கு நல்லதைக் கற்றுக் கொடுக்கத் தெரியாவிட்டாலும் திலகா இப்படி நடந்துகொள்வது மிகவும் தவறு.

    உங்க அருமை மகள் உங்களுக்கு டிபன் கட்டி வச்சிருக்கா. அதை எடுத்துக்கொண்டு போகாம கிளம்பிட்டிங்களே! திலகா பின்னால் வந்தபடியே உரத்துக் கூவினாள்.

    அப்பா...! இந்தாங்கோ... என்று சொல்லியபடி சிட்டுக்குருவி போலப் பறந்து வந்த அனிதா டிபன் டப்பாவுடன் தோட்டத்திற்குள் வந்தாள்.

    புன்முறுவலுடன் வாங்கி தன் பிரிஃப்கேசிற்குள் வைத்துக்கொண்டான். அனிதாவின் கண் இமைகள் வீங்கித் தெரிந்தன. துணுக்குற்றுப் போனான் முரளி. அனிதா அழுது விட்டிருக்கிறாள்.

    எதற்காக?

    ஏம்மா எப்படியோ இருக்கியே! என்ன சங்கதி. அடிக் குரலில் கேட்டபடி காரஜின் கதவைத் திறந்தான்.

    ஷட்டரை மேலே தள்ள உதவியபடி மெல்லிய குரலில் சொன்னாள்.

    அப்பா, இந்த அம்மாவுக்கு என்ன பேசுகிறோம்னு இங்கிதமே தெரியலை...

    உன்னை ஏதாவது திட்டினாளா?

    "நீங்க குளிச்சுக் கொண்டிருந்தபோது எனக்கு என் தோழிகிட்டேயிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1