Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andhi Nera Pookkal
Andhi Nera Pookkal
Andhi Nera Pookkal
Ebook89 pages28 minutes

Andhi Nera Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தி நேரப் பூக்கள். தலைப்பே அழகு. மாலையில் மலரத் தொடங்கும் பூக்கள் தனி அழகு. முன்னிருட்டில் அதன் வாசம் வா வா என்று அழைக்கும். இத்தொடரும் இப்படித்தான்.

கதையின் கரு இக்கால அத்தியாவசியம். அதைப் பிரச்சார நெடியில் தராமல் இயல்பான சம்பவங்களில் சொல்லிப் போன விதம் நெஞ்சை அள்ளுகிறது. ராமு கௌரியின் வாழ்க்கை மலருமா மணம் வீசுமா என்பதற்கான பதிலைச் சொல்லும்போது வாசகர் உற்சாகமாய் கை தட்டுவதே எழுத்தின் வெற்றி.

சுபாஷிணி ரமணன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளராய் பரிணமித்திருப்பதின் அடையாளமே "அந்தி நேரப் பூக்கள்".

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580153209721
Andhi Nera Pookkal

Read more from R. Subashini Ramanan

Related to Andhi Nera Pookkal

Related ebooks

Related categories

Reviews for Andhi Nera Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andhi Nera Pookkal - R. Subashini Ramanan

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அந்தி நேரப் பூக்கள்

    Andhi Nera Pookkal

    Author :

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    ஒரு விமர்சனம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    முன்னுரை

    (எழுத்தாளர் ரிஷபன்)

    ஒரு தொடருக்கு எது அவசியம்?

    ஒரு நல்ல காபிக்கு எது அவசியம்?

    பால் சர்க்கரை டிகாஷன் அவை மட்டுமல்ல டபரா டம்ளரில் கொண்டு வந்து தரும் அன்பும். நல்ல படைப்பைக் கொண்டு வரும் எழுத்தாளரைப் போல்.

    வாசகரை ஈர்ப்பது மட்டுமே நல்ல எழுத்தாகி விடாது. எழுத்தாளனுக்குக் கூடுதலாய் ஒரு பொறுப்பும் இருக்கிறது. திசை மாற்றி விடாத படைப்பைப்போல திசை காட்டும் பொறுப்பும்.

    அந்தி நேரப் பூக்கள். தலைப்பே அழகு. மாலையில் மலரத் தொடங்கும் பூக்கள் தனி அழகு. முன்னிருட்டில் அதன் வாசம் வா வா என்று அழைக்கும். இத்தொடரும் இப்படித்தான்.

    கதையின் கரு இக்கால அத்தியாவசியம். அதைப் பிரச்சார நெடியில் தராமல் இயல்பான சம்பவங்களில் சொல்லிப் போன விதம் நெஞ்சை அள்ளுகிறது. ராமு கௌரியின் வாழ்க்கை மலருமா மணம் வீசுமா என்பதற்கான பதிலைச் சொல்லும்போது வாசகர் உற்சாகமாய் கை தட்டுவதே எழுத்தின் வெற்றி.

    சுபாஷிணி ரமணன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளராய் பரிணமித்திருப்பதின் அடையாளமே அந்தி நேரப் பூக்கள்.

    நல்வாழ்த்துகள் மேடம். தொடர்ந்து ஜொலிக்கவும் வாழ்த்துகள்.

    ரிஷபன்

    வாழ்த்துரை

    (எழுத்தாளர் ஜி.ஏ. பிரபா)

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    அந்தி நேரப் பூக்கள் அற்புதமாக மலர்ந்து உங்கள் கைகளில் மணம் வீசுகிறது. இயல்பான நடையில் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டு, சுபமாக முடிந்த கதை.

    சராசரி கதையை அசாதரணமாக எழுதிச் சென்றிருக்கிறார் திருமதி சுபாஷிணி. கணவனை இழந்த கெளரி, மனைவியை இழந்த ராமபத்திரன் இருவரும் எப்படி வாழ்வில் இணைகிறார்கள் என்பதே கதை. அதை அழகான சம்பவங்களுடன், சுவாரஸ்யமான எழுத்து நடையில் அருமையாக எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சுபாஷிணி,

    வினிதாவின் தந்தை ராமபத்திரன் மனைவியை இழந்தவர், கிரீஷின் தாய் கெளரிக்கு கணவன் இல்லை. அவர்களின் தயக்கம், அவர்கள் பெற்றோர்களின் விருப்பம், தங்கையின் மீதான அன்பு, அவர்களுக்கு மட்டுமல்ல, அண்ணன் கௌதமின் மனைவி கங்காவும் அன்புடன், குடும்ப ஒற்றுமையை கட்டிக் காப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

    இந்தக் கதையில் எல்லோருமே நல்லவர்கள். அன்பும், மனிதாபிமானமும் நிறைந்து, வாழ்வை இழந்த இருவரும் இணைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படுபவர்கள். அந்த ஆர்வம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அடுத்து என்ன, என்ற எதிர்பார்ப்பை உண்டு செய்கிறது அந்தி நேரப் பூக்கள்.

    புத்திசாலித்தனமாக முதலில் குழந்தைகள் ஒட்டிக் கொள்கின்றன என்பதை எழுதி. மங்கள ஆரம்பம் போட்டு விட்டார். வினிதா கௌரியிடமும், கிரீஷ் ராமபத்ரனிடமும் முதலில் ஒட்டிக் கொள்கின்றன. பெரியவர்களின் வேலை பாதி முடிந்து விடுகிறது. பின் அவர்கள் இருவரும் பேசுவதில் முழுமை ஆகி விடுகிறது.

    கதையை சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்காக அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கும்போது எந்த எதிர்ப்பும் கேட்காமல் நம் மனமும் ஏற்றுக் கொள்கிறது.

    உறுத்தல் இல்லாத கதை. எந்த இடத்திலும், இது சரியில்லை, இது விரசம் என்றில்லாமல் கண்ணியமான வார்த்தைகள், சம்பவங்கள் என்று முழுமையான கதை. கௌரியின் கண்ணீரைப் பார்த்துத் தன் கைக்குட்டையை எடுத்து நீட்டும் அந்த ஒரு செயலின் மூலம் ராமபத்ரனின் அன்பும், பிரியமும், கண்ணியமான குணம், பண்பும் அழகாக வெளிப்படுகிறது.

    அந்த இடத்தில் ஒரு அழகான காதல் கவிதை இருக்கிறது. கதை முழுவதும் அன்பும், பரிவும், பாசமும், மனிதாபிமானமும் நிரம்பி வழிகிறது. அதை சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார் எழுத்தாளர். அவர் வார்த்தையிலேயே சொல்வது என்றால் மனித வாழ்க்கையின் உயிர்நாடியே அன்புதான். அந்த அன்பை பிற உயிர்களிடம் காட்டாத, காட்டத் தெரியாதவர்களாலேயே இந்த உலகில் குற்றங்களும், வன்முறைகளும் நிகழ்கின்றன.

    அன்பு மனதுக்குச் சொந்தக்காரரின் அனுபவ பூர்வ வார்த்தைகள் இது. வருடிச் செல்கிறது ஒரு தென்றல்போல் அவருடைய வார்த்தைகள். அனாவசிய சொற்கள், உவமைகள், கருத்துகள் இல்லாமல், படிக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1