Bombay Panthayam
()
About this ebook
ஜீவானந்தத்தின் மகன் சரவணக்குமார், கிஷன்சந்தின் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகிறான். தன் மகனை மீட்பதற்காக ஜீவானந்தம் எடுத்த முயற்சிகள் என்ன? இன்ஸ்பெக்டர் நியூட்டன், பரத், சுசிலாவின் உதவி இவருக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் பம்பாய் பந்தயம் கதையில் காணலாம்...!
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Arjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Naankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5
Related to Bombay Panthayam
Related ebooks
Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Ithu Bharath Style Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Thudippu Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsVarum Varai Kaathiruppean Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Kadaisi Aayutham Rating: 5 out of 5 stars5/5Angey! Ingey! Engey? Rating: 5 out of 5 stars5/5Rajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsOodathey! Thurathathey! Rating: 5 out of 5 stars5/5Mattravai Un Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsEnakkum Thayam Vizhum Rating: 0 out of 5 stars0 ratingsHello Bharath Sugama? Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vaa Thendraley Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsNambathey Nanbaney! Rating: 0 out of 5 stars0 ratingsSithainthavan Varugai Rating: 5 out of 5 stars5/5Oru Aircondition Kutram Rating: 5 out of 5 stars5/5Happy Bharath Day! Rating: 0 out of 5 stars0 ratingsKathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsIni Idhu Porkalam Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsArugil Miga Arugil... Rating: 5 out of 5 stars5/5Thuppakki Munaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Bombay Panthayam
0 ratings0 reviews
Book preview
Bombay Panthayam - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
பம்பாய் பந்தயம்
Bombay Panthayam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
நியூயார்க்.
பார்க்கர் ஸ்மித்தைக் கைது செய்து காவலில் வைத்திருந்த தனியறை மிகச் சிறியதாக இருந்தது. வாசலின் இரும்புக் கதவு தொய்வோ, அசைவோ இல்லாமல் திண் என்று இருந்தது. உயரத்தில் ஒரே ஒரு வெண்ட்டிலேட்டர். கண்ணாடி போடப்பட்டிருந்தது.
பார்க்கர் ஸ்மித் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஓவியக் கல்லூரியில் போஸ் கொடுக்கும் மாடல் போல அப்படியே அமர்ந்திருந்தார்.
முகம் டபுள் சைசில் வீங்கியிருந்தது, உதடு ஒரு ஓரத்தில் கிழிந்து ரத்தம் உலர்ந்திருந்தது, தலை கலைந்து குவித்து வைத்தக் குப்பையாக அமர்ந்திருந்தார்.
மனதில் விரக்தியும், சுய இரக்கமும் சேகரமாகியிருக்க... நினைத்து, நினைத்து மிகவும் நொந்து கொண்டார்.
எவ்வளவு பெரிய நபர் நான்!
சி.ஐ.ஏ.வில் பணி புரிந்தபோது எனக்குக் கீழே எத்தனை அதிகாரிகள். நான் ஒரு அரை இன்ஞ் புன்னகைக்க மாட்டேனா என்று எப்படி ஏங்கியிருக்கிறார்கள்! எத்தனை எத்தனை திட்டங்களில் யோசனைகள் அள்ளி வழங்கியிருக்கிறேன். சிக்கல் என்றால் பார்க்கரைக் கேட்டால் நல்ல வழி சொல்வார் என்று எவ்வளவு பேர் நம்பியிருந்தார்கள்.
ஒரு வகையான தேச சேவை என்கிற எண்ணத்தில் எவ்வளவு நிதானமாக, சந்தேகமில்லாமல் திட்டமிட்டு அந்தப் பொடியனைக் கடத்தி வந்தேன். ஜோ அண்ட் ஜோ என்னும் மிகப் பெரிய ஸ்தாபனத்தையே கண்ணில் விரல் விட்டேன்.
கடைசியில்... எல்லாம் போயிற்று!
இதுவரை நான்கு போலீஸ் அதிகாரிகள் மாறி, மாறி அவரவர்கள் பாணியில் விசாரித்து விட்டுப் போய் விட்டார்கள். மூன்றே கேள்விகள்தான்.
1. இந்தியாவில் உனக்கு உதவியது யார்?
2. எந்த முறையில் கடத்தினாய்?
3. தத்து எடுத்த சிறுவன் கணேசன் எங்கே?
நான் எதற்கும் பதிலே சொல்லாமல் விறைப்பாக இதுவரை இருந்து விட்டது பெரியதல்ல. இனிமேலும் இந்த ஊமைத்தனத்தைத் தொடர முடியுமா?
தொடர்ந்தே ஆக வேண்டும். நடந்தது அனைத்தையும் ஒப்புக்கொண்டு விட்டால் இந்தியாவில் கண்ணபிரானும், அவர் கோஷ்டியும் கைது செய்யப்படுவார்கள்.
எனக்கு ஒத்துழைத்ததற்கு அவர்களுக்கும் தண்டனையா? என் திட்டத்தில் எங்கோ நான் வைத்துவிட்ட துவாரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு என்னைத் தேடி வந்து விட்டார்கள்.
பார்க்கர் ஸ்மித் இனியும் எந்த வகையில் விசாரித்தாலும் இந்திய நண்பர்களைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்தார்.
தான் சொல்லாமல் வேறு வகையில் கண்ணபிரானைக் கண்டுபிடிக்க போலீசுக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று யோசித்தார்.
பயணம் சென்றது ஆனியும், நானும். ஆனி இறந்து விட்டாள். நான் சொல்லப் போவதில்லை. இந்தியாவில் எனக்கு யார் உதவினார்கள் என்று ஜோ அண்ட் ஜோ நபர்களுக்கும் தெரியாது. டிரைவர் வெஸ்லிக்கும் தெரியாது.
ஆக... நானாக ஸ்டேட்மெண்டில் குறிப்பிட்டால்தான் உண்டு.
பதில் சொல்லாமல் தாக்குப் பிடிக்க முடியுமா? இதுவரை வாங்கியிருக்கும் அடிகள் கைகளால் தரப்பட்டவை. ரகம், ரகமாக வலி ஏற்படுத்த எத்தனை இயந்திரங்கள் உள்ளன!
அந்த மாதிரி வலிகள் பிறருக்கு நான் ஏற்படுத்தியிருக்கிறேனே யொழிய... சொந்தமாக அனுபவித்ததில்லை. எப்படியெல்லாம் துடிப்பார்கள், கதறுவார்கள்.
எனக்கு அந்த வலிகள் தேவையா?
வலிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?
பார்க்கர் ஸ்மித் என்றுமே தோற்றதில்லை என்று அடிக்கடி வீர வசனம் பேசின நான் இப்போது சிறையில். முகத்தில் வீக்கம். உதட்டில் ரத்தம்! அவமானம்!
அந்த வலிகளைத் தவிர்க்க... இந்த அவமானங்களைத் தடுக்க...
ஒரு உன்னதமான வழி உண்டு.
பார்க்கர் ஸ்மித் பத்து நிமிடங்கள் அமைதியாகச் சிந்தனையில் இருந்தார். பிறகு மண்டியிட்டு முணுமுணுப்பாக ஏசுவிடம் பிரார்த்தனை செய்தார். எழுந்தார். சிறையின் கதவருகில் வந்து நின்றார்.
வெளியே துப்பாக்கியுடன் ஒரு காவல் போலீஸ் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்க...!
இப்போது நேரம் என்ன?
என்றார்.
பனிரெண்டு இருபது. தூக்கம் வரவில்லையா?
வருகிறது. நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்.
பார்க்கர் ஸ்மித் தன் ஷுவைக் கழற்றினார். சிறையில் இருந்த ஒரே உயர வெண்ட்டிலேட்டரைக் குறி வைத்தார். வீசினார் வேகமாக. சிலுங் என்று அதன் கண்ணாடி உடைந்து உள்ளே சில்லு சில்லாகச் சிதற...
ஏய், என்ன செய்கிறாய்?
என்று காவல் போலீஸ் கதவின் சாவியை எடுத்துத் திறக்க முயன்றான்.
பார்க்கர் ஸ்மித் சற்று பெரிய கண்ணாடி துண்டாகத் தேர்ந்தெடுத்துக் கையில் எடுத்துக் கொண்டு, பார்க்கர் ஸ்மித்திடம் இருந்து ஒரு பிட் உண்மையைக்கூட வரவழைக்க முடியாது என்று உன் மேலதிகாரிகளிடம் சொல்லிவிடு சகோதரா
என்றார்.
அவன் கதவைத் திறந்து உள்ளே வந்த நேரம்...
பார்க்கர் ஸ்மித் ஒரே ஒரு வினாடி தயங்கி, அந்த ஒரு வினாடியில் மனைவி ரெய்ஸாவின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை மன்னித்து விடு ரெய்ஸா!
என்று மனதில் சொல்லிக் கொண்டு...
சரக் என்று கண்ணாடித் துண்டைத் தன் கழுத்தில் ஆழமாக இறக்கிக் கொண்டதும்... எதிரே பாய்ந்து வந்தவனின் யூனிஃபார்ம் முழுக்க ரத்தம் பீய்ச்சி நனைத்தது.
வினோதமாய் சத்தம் எழுப்பி, தரையில் விழுந்து, துடித்து, ரெய்ஸாவை ஒரு மலர் கண்காட்சியில் முதன்முறையாகச் சந்தித்தது, ஹட்சன் நதியில் போட்டிங் போனபோது முதல் முறையாக முத்தமிட்டது, சி.ஐ.ஏ.வில் இருந்து ட்ரைனியாகத் தேர்ந்தெடுத்துக் கடிதம் வந்தது, ஜனாதிபதியின் விருந்துக்கு தம்பதியாய் சென்று கைகுலுக்கினது, என்று இனிய சம்பவங்களாக நினைவு கூர்ந்து கொண்டே சன்ன சன்னமாக இறக்க ஆரம்பித்தார் பார்க்கர் ஸ்மித்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல, அவரைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்தின போது, ஒரு உறைந்த புன்னகையுடன் நூறு சதவிகிதம் மரணமுற்றிருந்தார்.
2
பம்பாய், வொர்லி ஏரியா. தூரம்விட்டுத் தூரம் தொழிற்கூடங்கள்.
தகரக் கூரை வேய்ந்த சற்றுக்