Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Santhitha Manithargalil - Jeevi
Naan Santhitha Manithargalil - Jeevi
Naan Santhitha Manithargalil - Jeevi
Ebook110 pages25 minutes

Naan Santhitha Manithargalil - Jeevi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘நான் சந்தித்த மனிதர்களில் - ஜீவி’, தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி அவர்களைப் பற்றி அறியாத பல தகவல்களையும், கடிதங்களையும் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறார் கவிஞர் ப. வெங்கடேசன்.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580167509989
Naan Santhitha Manithargalil - Jeevi

Related to Naan Santhitha Manithargalil - Jeevi

Related ebooks

Reviews for Naan Santhitha Manithargalil - Jeevi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Santhitha Manithargalil - Jeevi - P. Venkatesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் சந்தித்த மனிதர்களில் – ஜீவி

    Naan Santhitha Manithargalil – Jeevi

    Author:

    ப. வெங்கடேசன்

    P. Venkatesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-venkatesan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கொண்டாடத்தக்க கொள்கையாளர் - கவிஞர் ஜீவி

    முன்னுரை

    நான் சந்தித்த மனிதர்களில் கவிஞர் ஜீவி

    தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி

    வெள்ளமென பாயும் வார்த்தைகள்…

    தோழர் ஜீவிக்கு ஒரு கடிதம்

    எமக்குத்தொழில் எழுத்து

    நொய்யல் இலக்கிய வட்டம்

    கவிஞர் ஜீவியுடன் ஒரு சந்திப்பு

    விண்ணை முட்டு

    கொண்டாடத்தக்க கொள்கையாளர் - கவிஞர் ஜீவி

    தோழர் ப. வெங்கடேசன் அவர்களை கவிஞராக அரங்கேற்றியவர் கவிஞர் சு. பீர்முகமது என நான் அவ்வப்போது கூறுவது உண்டு அவரை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி கவித்துவத்தில் ஆழப்படுத்தியவர் எழுத்தாளர் ஜீவி அவர்கள்தான் என்பதை எப்போதும் சொல்லலாம்.

    பிரபலமான ஆளுமை ஒருவர் தம்மைத் தவிர பிறரை வளர்த்து விடுவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் நாடறிந்த எழுத்தாளர் - பேச்சாளர் ஜீவி அவர்கள் யாம் பெற்ற இன்பம் பிறரும் பெருக’ என்று வெங்கடேசன் போன்ற பல எண்ணற்ற கவிஞர்களை முன்னிலைப்படுத்துவதில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பது அவரின் தன்னலமற்ற தனித்துவத்தைக் காட்டுகிறது.

    கவிஞர் ஜீவி என அழைக்கப்பட்டாலும் அவர் கவின்மிகு எழுத்தாளர், கவனத்தை ஈர்க்கும் பேச்சாளர், இடதுசாரி இலக்கியப் படைப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர். அவர் முகம் போலவே அகமும் எந்நேரமும் பொலிவு காட்டிப் பிறரை வயப்படுத்தும். தோழமையை வளப்படுத்தும். சிந்தனையில் தெளிவும் செயல்பாட்டில் துணிவும் உடையவர். அதனால் எதிர்வினையை எளிதில் புறம் காணும் இயல்புடையவர்.

    எம் எழுத்துலகப் பயணத்தில் கலை இலக்கிய நிகழ்வுகளின் மூலம் ஜீவி போன்றவர்களைக் கண்டடைந்ததை எம் ஆவி உள்ளவரை பெரும் மகிழ்வுடன் கொண்டாடுவேன்.

    நன்றி

    தோழமையுடன்

    வாழை.வ.பூ மணிமொழி

    ஆசிரியர் ‘நானிலம்’ இலக்கிய இதழ்

    9442904409

    புதுக்கோட்டை

    முன்னுரை

    ‘நான் சந்தித்த மனிதர்களில் சிலர்’ என்று என் வாழ்க்கையின் நகர்வுகளில் நான் சந்தித்த மனிதர்கள் பற்றி ஒரு சிறு பதிவாக முகநூலில் எழுதினேன். அதில் எனக்குக் கிடைத்த ஆதரவினால், அது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதர்களையும், கவிஞர்களையும், உழைப்பாளிகளையும் பற்றி அறிய விரும்பினேன். அது எனக்குள் ஒரு புத்துணர்ச்சியையும், எழுதும் ஆர்வத்தையும் அதிகரித்தது. முகநூலில் எழுதியதைத் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் தோழா என்றார் கவிஞர் ஜீவி. அதன் முதல் முயற்சியாக, அவரைப் பற்றியே தெரிந்துகொள்ள அறந்தாங்கி சென்றேன். அப்போது கவிஞர் ஜீவி சில கடிதங்களை என்னிடம் காட்டினார்.

    அவற்றின் மூலம் அவரைப் பற்றி நான் அறிந்ததையும், அந்தக் கடிதங்களையும் தொகுத்து வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்!

    நன்றி

    மகிழ்ச்சி

    நான் சந்தித்த மனிதர்களில் கவிஞர் ஜீவி

    தமுஎகச-வின் நகரக்கிளை நடத்திய மகளிர் தினப் படைப்பரங்கத்தில் கவிதை வாசிக்க கவிஞர் சு. பீர்முகமது அவர்கள் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் ஜீவி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    அன்று முதல் கவிஞர் ஜீவி அவர்களுடைய நட்பு தொடர்ந்து வளர்ந்தது.

    நான் இலக்கிய வட்டத்திற்குப் புதியவன். அதனால் என்னை கவிஞர் ஜீவி அவர்கள் பெரும்பாலானவர்களிடம் அறிமுகம் செய்தார்.

    "அதிகம் வாசியுங்கள் தோழா!

    வாசித்ததை நேசியுங்கள்!

    நேசித்ததைப் பேசுங்கள்!

    Enjoying the preview?
    Page 1 of 1