Kannadi Vinadigal
By Rajeshkumar
()
About this ebook
ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைகள் அடங்கிய ஓர் தொகுப்பு.
இவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.
Related to Kannadi Vinadigal
Related ebooks
Yudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastman Nira Kolai Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Rattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsImaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Inba Athirchi Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsMattravai Un Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsAvaloru Kathanayagi Rating: 5 out of 5 stars5/5Thattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum Aaru Thottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsSaiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Kuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsOru Patchainira Echarikkai Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthithai... Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Kondren Rating: 4 out of 5 stars4/5Sirukathaigal-II Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Kann Yethirey Oru Uyir Rating: 5 out of 5 stars5/5En Iniya Virothiye! Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsMiss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Oru Eastmen Nirak Kolai Rating: 5 out of 5 stars5/5Amirtham Endraal Visham Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kannadi Vinadigal
0 ratings0 reviews
Book preview
Kannadi Vinadigal - Rajeshkumar
https://www.pustaka.co.in
கண்ணாடி விநாடிகள்
(சிறுகதைத் தொகுப்பு)
Kannadi Vinadigal
(Sirukathai Thoguppu)
Author:
ராஜேஷ்குமார்
Rajeshkumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
எழுத்தாளரைப் பற்றி...
அன்பு மகா சமுத்திரம்
வந்தவள்
விலை
யாரைத்தான் நம்புவதோ?
எதற்கும் ஒரு விலையுண்டு
எதிர்ப்பதம்
கண்ணாடி விநாடிகள்
சாகாவரம்
இரை
நான் அவளைக் காதலிக்கிறேன்
கலிபோர்னியாவும் காயத்ரியும்
சேவக்குத்து
நள்ளிரவு வானவில்கள்
அந்த ஒரு வார்த்தை
ஒரு நதியின் மூன்றாவது கரை
ஒரே ஒரு நாள்
வேலி
எழுத்தாளரைப் பற்றி...
ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ஆர்.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை உன்னைவிட மாட்டேன்
1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் வாடகைக்கு ஓர் உயிர்
மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப்
என்ற முதல் தொடர்கதை வெளியானது.
கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் ஸார் ஒரு சந்தேகம்!
, வாவ்! ஐந்தறிவு
, எஸ் பாஸ்
, சித்தர்களா! பித்தர்களா!!
முக்கியமானவை. என்னை நான் சந்தித்தேன்
என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் பல முன்னணி அச்சிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!
வணக்கம்.
இப்போது உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் கண்ணாடி விநாடிகள் - சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுடைய இதயங்களிலும் இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என் ஐம்பத்திமூன்று ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா வார, மாத, தின இதழ்களிலும் வெளிவந்து என்னுடைய எழுத்துப் பசியை தணிய வைத்தன.
மலர்கள் உதிரிகளாக இருப்பதைக் காட்டிலும் மாலையாய் மாறி இருக்கும்போதுதான் அவைகளின் அழகு பன்மடங்காகத் தெரியும். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதிப்பகத்தாரால் என் சிறுகதை மலர்கள் மாலைகளாய் வெளிவந்து வாசகர்களை மகிழ வைத்தது.
இந்த புத்தகத்தில் 17 சிறுகதைகளும் என்னால் கவனமாகப் படிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவை. வெகுஜன இலக்கியம் என்ற பிரிவில் சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், கதையைப் படித்து முடிக்கும்போது அதன் இறுதி வரிகளில் ஒரு பயனுள்ள செய்தியை இந்த சமூகத்துக்கு சொல்பவையாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
மிக்க அன்புடன்,
E:\Priya\Book Generation\Everest\3-min.jpgஅன்பு மகா சமுத்திரம்
கம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து ஒரு கஸ்டமரோடு ‘சாட்டிங்’கில் ஈடுபட்டிருந்த செந்தில் தன்னுடைய மனைவி சுபமதி, அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான்.
சுபமதி அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினாள்.
நம்ம தெருவில் இருக்கிற கைலாஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்... இந்த கொரோனா காலத்துல மனுஷன் எதுக்கு வந்திருக்கார்ன்னு தெரியலை. சிட் அவுட்ல சேர் போட்டு உட்கார வெச்சுட்டு வந்தேன்.
விஷயம் என்னன்னு கேட்டியா...?
நான் எப்படிங்க கேட்க முடியும்...? நீங்களே போய் என்னன்னு கேளுங்க.
செந்தில் சாட்டிங்கில் இருந்த கஸ்டமர்க்கு பிறகு பேசுவதாக செய்தி அனுப்பிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தான். மனதுக்குள் கேள்விகள் முளைத்தன.
‘கைலாஷ் எதற்காக வந்திருப்பார்?’
‘ஒரே தெருவில் இருந்தாலும் நெருக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு இடைவெளிவிட்டு பழகுகிற ரகம் அவர். எதிர் எதிராக பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் நேரும்போது, அது காலை நேரமாக இருந்தால் ‘குட் மார்னிங்’ என்றோ, மாலை நேரமாக இருந்தால் ‘குட் ஈவினிங்’ என்றோ சொல்லி பரஸ்பரம் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதோடு சரி, அப்படி ஏதாவது பேச நேர்ந்தாலும் அந்தப் பேச்சு இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தது இல்லை!’
அப்படிப்பட்டவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்!
மாஸ்க் போட்டுகிட்டு போய் பேசுங்க...!
சுபமதி சொல்லிவிட்டு சமையலறையை நோக்கிப் போய்விட, செந்தில் ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த மாஸ்க்கை எடுத்து முகத்துக்கு மாட்டிக் கொண்டு வீட்டின் ஹாலைக் கடந்து சிட் அவுட்-க்கு சென்றான்.
நீள்வட்ட டீபாயின் மேலிருந்த நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கைலாஷ், அதை பழையபடி மடித்து வைத்துக் கொண்டே ஸாரி... இந்த நேரத்துல வந்து உங்களுக்கு தொந்தரவு தர்றேன்
என்றான்.
செந்தில் சிரித்தபடியே நாற்காலியை சற்றுத் தள்ளிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.
நோ... நோ... எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. இது கொரோனா காலம். ஆபீஸுக்குப் போய் பண்ண வேண்டிய வேலையை வீட்ல இருந்துகிட்டே வொர்க் ஃப்ரம் ஹோம்மோட்ல பண்ணிட்டிருக்கேன். ஆன்லைன்லயே கஸ்டமர்ஸைப் பிடிச்சு சாட்டிங்ல பேசி எப்படியோ அந்தந்த வேலையை சொன்ன நேரத்துக்கு முடிச்சு குடுத்துடறேன்... இந்த கொரோனாவுக்கு எப்பத்தான் ஒரு முடிவு வரும்ன்னு தெரியலை.
அதனோட வீரியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சுட்டு வர்றதாகவும் அடுத்த ரெண்டு மாசத்துக்குள்ளே எல்லாம் சரியாயிடும்ன்னும் WHO சொல்லிட்டானே...!
கொரோனாவை விடுங்க கைலாஷ்... என்னைப் பாக்கிறதுக்காக வீடு தேடி வந்துருக்கீங்க... என்ன விஷயம்... அதை மொதல்ல சொல்லுங்க.
செந்தில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் அந்த சத்தம் கேட்டது.
காம்பௌண்ட் கேட் லேசாய் உலுக்கப்படும் சத்தம். செந்தில் வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.
சுபமதி...! வாசல்ல யார்ன்னு போய்ப் பாரு.
சமையலறையிலிருந்து வெளிப்பட்ட சுபமதி ஈரக் கையை சேலையால் துடைத்தபடியே வாசலை நோக்கிப் போனாள். போனவள் அடுத்த சில விநாடிகளிலேயே குரல் கொடுத்தாள்.
என்னங்க... ஒரு நிமிஷம் இங்கே வாங்க.
என்ன விஷயம் சொல்லு... யாரு வந்திருக்காங்க?
முதல்ல வந்து பாருங்க... வந்து பார்த்தாதானே தெரியும்... ம்...வாங்க.
செந்தில் அவஸ்தையோடு கைலாஷை ஏறிட்டான்.
ஸாரி...! ஒரு நிமிஷம். அது யார்ன்னு பார்த்துவிட்டு வந்துடறேன்.
நோ ப்ராப்ளம் செந்தில்... போய்ப் பார்த்துட்டு வாங்க... யாரோ ஒரு முக்கியமான நபர் வந்திருக்கப் போய்த்தான் உங்க மிஸஸ் அவ்வளவு அவசரமா கூப்பிடறாங்க... நீங்க போங்க. நான் வெயிட் பண்றேன்...
செந்தில் மறுபடியும் கைலாஷிடம் ஒரு ‘ஸாரி’யை உதிர்த்துவிட்டு வாசலை நோக்கிப் போனான்.
மூடப்பட்டிருந்த சிறிய காம்பௌண்ட் கேட் அருகே சுபமதி நின்று வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க அவளை நெருங்கியபடி கேட்டான்.
யார் வந்திருக்கா...?
கேட்டுக்கு வெளியே பாருங்க... தெரியும்.
செந்தில் பார்த்தான்.
அந்த வெள்ளை நிற நாய் முன்னங்கால்களை மடித்து மண்டிபோட்டு உட்கார்ந்திருந்தது. செந்திலைப் பார்த்ததும் எழுந்து வேகமாய் வாலை ஆட்டிக் கொண்டே காம்பௌண்ட் கேட்டின் கம்பிகளுக்கு இடையே கால்களை வைத்தபடி ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே எம்பியது.
செந்தில் வியப்பு பரவிய விழிகளோடு மனைவியைப் பார்த்தான்.
இது நம்ம ஒய்ட்டிதானே?
என்னங்க இப்படி கேட்கறீங்க... இது நம்ம ஒய்ட்டிதான். ஒரு மாசத்துக்கு முன்னாடி காணாமே போனது, இப்ப எப்படியோ வழியைக் கண்டுபிடிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்திருச்சு...
சுபமதி சொல்லிக் கொண்டே காம்பௌண்ட் கேட்டை திறந்துவிட அந்த ஒய்ட்டி துள்ளிக் குதித்து, உள்ளே வந்து செந்திலின் மேல் தாவியது. சந்தோஷ முனகலோடு அங்கும் இங்கும் ஓடிவிட்டு மீண்டும் வந்து அவன் மீதும், சுபமதி மீதும் மோதியது. சந்தோஷத்தில் சன்னமாய் குரைத்தது.
என்னங்க...! ஒயிட்டி சினையாயிருக்கும் போலிருக்கு குட்டி போடற ஸ்டேஜ்...
ஆமா... அப்படித்தான் தெரியுது... இத்தனை நாள் எங்கேயிருந்ததோ தெரியலையே சரியா சாப்பிடாமே கொஞ்சம் இளைச்ச மாதிரியும் இருக்கு... மொதல்ல பால் சாதம் கொண்டு வந்து வைய்யி. அப்புறம் நம்ம வெட்னரி டாக்டர்க்கு போன் பண்ணி போன மாசம் காணாமே போன ஒய்ட்டி வீட்டுக்கு வந்துட்டதா சொல்லிடு... அவர் வந்து பார்த்துட்டு இஞ்செக்ஷன் ஏதாவது போடறதா இருந்தா போடட்டும்...
சொன்ன செந்தில் குனிந்து நாயின் தலையைத் தடவிக் கொடுத்தபடி கொஞ்சலாய் கேட்டான்.
ஒய்ட்டி...! இத்தனை நாள் எங்கடா போயிருந்தே. நீயில்லாமே இந்த வீடு வீடு மாதிரியே இல்லடா...
என்னங்க... ஒய்ட்டிகிட்ட அப்புறமா கொஞ்சலாம். கைலாஷ் உங்களுக்காக உள்ளே உட்கார்ந்து வெயிட் பண்ணிட்டிருக்கார்.
அட... ஆமா... மறந்துட்டேன்...
ஒய்ட்டியை நான் பார்த்துக்கிறேன்... நீங்க போங்க.
***
செந்தில் சிட்அவுட்டில் காத்திருந்த கைலாஷை நெருங்கினான்.
ஸாரி... உங்களை காக்க வெச்சுட்டேன். போன மாசம் காணாம போன எங்களோட ஒய்ட்டி இன்னிக்கு எப்படியோ வீட்டைக் கண்டுபிடிச்சு வந்து சேர்ந்துடுச்சு. அந்த சந்தோஷத்துல ஒரு அஞ்சு நிமிஷம் உங்களை மறந்துட்டேன்...
கைலாஷ் ஒரு புன்னகையோடு கேட்டான்.
அது எப்படி காணாமே போச்சு?
"எப்பவுமே காலை நேரத்துல ஒய்ட்டியை அவுத்து விட்டுருவோம். அது வீட்டுக்கு வெளியே போய் தன்னோட டாய்லெட் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சுதான் வரும். போன மாசத்துல ஒரு நாள் அப்படித்தான் ஒய்ட்டியை வெளியே விட்டோம். வெளியே போனவ ஒரு மணி நேரமாகியும் வரலை... கார்ப்பரேஷன் லாரிக்காரங்க பிடிச்சுட்டு போயிருப்பாங்களோ என்கிற எண்ணத்துல போய் விசாரிச்சுப் பார்த்தோம். அங்கேயும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. போலீஸ்லேயும்