Poo Maalaiyil Oru Poo
By V. Usha
5/5
()
About this ebook
தந்தைக்குப் பின் தன் குடும்ப பாரத்தை தனி ஆளாக சுமக்கும் மீரா, 'ஹார்ட் சர்ஜரி' செய்த கோமளாம்மாவை பார்த்துக்கொள்ள டெல்லியிலிருக்கும் மலானா கிராமத்திற்கு செல்கிறாள். அதன்பின், மீராவின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான திருப்பங்களைக் காண, வாருங்கள் வாசிப்போம்...!
Read more from V. Usha
Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsVandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsNenje Ezhu... Rating: 0 out of 5 stars0 ratingsEthanai Kodi Inbam Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsMele Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Pookkal Thoovum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPennpoove Panpaadu Rating: 0 out of 5 stars0 ratingsVeyilodu Peyyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poo Maalaiyil Oru Poo
Related ebooks
Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsNetru Partha Nilavu Rating: 5 out of 5 stars5/5Viral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vannapparavai Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Poongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsRanjani Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyilla Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavaga Neeyum, Mugilaya Naanum Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Kalathil Vanthaai Rating: 5 out of 5 stars5/5Nilavoliyil Pattaam Poochigal Rating: 5 out of 5 stars5/5Paruva Mogam Rating: 4 out of 5 stars4/5Engey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5
Reviews for Poo Maalaiyil Oru Poo
1 rating0 reviews
Book preview
Poo Maalaiyil Oru Poo - V. Usha
https://www.pustaka.co.in
பூ மாலையில் ஒரு பூ
Poo Maalaiyil Oru Poo
Author:
வி. உஷா
V. Usha
For more books
https://www.pustaka.co.in/home/author/v-usha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
சீக்கிரமே கிளம்பி விட்டாயா மீரா?
என்ற அம்மாவின் வறண்ட குரல் கேட்டு அவள் திரும்பினாள்.
ஆமாம்மா-இன்னிக்கு ஹெல்த் மினிஸ்ட்ரி இன்ஸ்பெக்ஷன் இருக்கு… கொஞ்சம் முன்னாடி போகணும்…
மீரா
சொல்லும்மா
வந்து…
அம்மா இழுத்தபோது அவள் புரிந்து கொண்டாள். பணம் வேணுமா? சசிக்கா இல்லே சுசிக்கா? எவ்வளவு?
ஐநூறு.... ஐநூறு. ரெண்டுத்துக்கும்....
என்று அம்மாவின் குரல் சலிப்புடன் கேட்டது. இவள் சயின்ஸ் எக்ஸிபிஷனுக்காம்… அவள் மாத்ஸ் லேபுக்காம்.... எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டேன்… வேற வழியே இல்லையாம், கொடுத்தான் ஆகணும்னு ரெண்டும் கண்ணை கசக்கிக்கிட்டு நிக்கிது…
சரிம்மா.... இவ்வளவு சொல்லணுமா?
என்று அவள் தன் கைப்பையைத் திறந்தாள்.
ஒரு ஐநூறு ரூபாயும் இரண்டு நூறு ரூபாய்களும் மட்டுமே இருந்தன.
யாருக்கு ரொம்ப அவசரமோ அவளுக்கு மொதல்ல கொடு.... அடுத்தவளுக்கு நாளைக்குத் தரலாம்
நாளைக்கு மட்டும் எப்படி பணம் வரும் மீரா? சம்பளத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே…
போன மாதம் ரத்த தான முகாம் நடந்தது இல்லேம்மா? செங்கல்பட்டுல? அப்போ பாத்த ஸ்பெஷல் டியூட்டிக்காக இன்னிக்கு வேஜஸ் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். கவலைப்படாதே…
அம்மாவின் கண்கள் சட்டென்று படபடத்தன.
உன் உடைகள் எல்லாமே பழசாயிட்டு வருதே மீரா… பெரிய ஆஸ்பத்திரில, பெரிய சூபர்வைசர் நீ… நல்லபடியா உடை அணிய வேண்டாமா? எல்லாத்தையும் குடும்பத்துக்காகவே செலவழிச்சுட்டு நீ கருங்கல் சிலை அம்மன் மாதிரி…
என்று தழுதழுத்தாள்.
மீரா சிரித்தாள்.
இதோ பாரும்மா… இப்படி எமோஷனலா பேசறதை விடு.... பிராக்டிகலா இரு… இது ஒரு காலம்… வேலை, சம்பளம், உழைப்பு எல்லாத்துக்கும் பர்ப்பஸ் இருக்கிற காலம்… இதுல ஒரு திருப்தி இருக்கு எனக்கு சந்தோஷமும் இருக்கு… நீதான் சரியா புரிஞ்சுக்கணும்…
எப்படி மீரா? தியாகம் இது- சிரிச்சுகிட்டே தியாகம் பண்ண முடியுமா? நியாயம்தானா அது?
தியாகமா? யார் சொன்னது அப்படி? இல்லேம்மா.... இதுதான் கச்சிதமான, அர்த்தமுள்ள வாழ்க்கை… என்னால முடிஞ்சதை நான் செய்கிறேன். உன்னால் முடிஞ்சதை நீ செய்கிறாய்.... தங்கைகள் அவர்கள் விரும்புவதை செய்றாங்க… இதுல எதுவும் தியாகமும் இல்லே, வருத்தமும் இல்லே. சரியா?
அதற்கு மேல் பேசமுடியாமல் அம்மா குனிந்தபடி உள்ளே போனாள்.
தங்கைகள் எழுந்து வந்தார்கள்.
குட்மார்னிங் அக்கா…
என்று இரண்டு பேரும் இரண்டு தோள்களையும் பற்றிக் கொண்டார்கள்.
குட்மார்னிங் மை டியர் ட்வின்ஸ்,
என்று மீரா சகோதரிகளை அணைத்துக் கொண்டாள்.
நல்லா தூங்கினீங்களா?
ஆமாம்க்கா… நீ?
நானும் நல்லா தூங்கினேன்.... அம்மாகிட்ட பணம் கொடுத்திருக்கேன்.... யாரோ ஒருத்தருக்கு.... அடுத்தவங்களுக்கு நாளைக்கு தரேன்… சரியா?
சரிக்கா… சசி எடுத்துக்கட்டும். அவ குரூப் ப்ராஜெக்ட் ட்ரோன் தயாரிக்கிறது… நெறைய வேலை இருக்கும்.... இவதான் ஆர்கனைசர் வேற....
என்றாள் சுசி உடனடியாக.
இல்லக்கா.... சுசி எடுத்துக்கட்டும். என் மேத்ஸ் லேப் நிறைய சார்ட் வேலைதான்.... வானத்தில் எவ்வளவு உயரம் வரை ஒரு நாட்டின் ஆகாயப்பரப்பு என்று சர்வதேச சட்டம் இதுவரை இல்லை. அதைப் பத்தி சார்ட் ரெடி பண்ணணும்க்கா.... நாளைக்கு வாங்கிக்கறேன்க்கா…
மீரா இரண்டு தங்கைகளையும் மென்மையாக அணைத்துக் கொண்டாள். நெஞ்சில் ஏதோ ஒன்று அன்பின் இறகுகளை அசைத்தது. விட்டுக் கொடுக்கும்போது உள்ளே சுரக்கும் இன்பத்தின் ஊற்றை இந்தச் சிறுமிகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
சரி… நான் கொஞ்சம் சீக்கிரம் கெளம்பணும் ஆஸ்பிடலுக்கு....
ஓகேக்கா… ராத்திரி பேசலாம். ட்ரோனுக்கும் லாஞ்ச்பேடுக்கும். என்ன சிமிலாரிட்டின்னு நான் சொல்றேன்க்கா....
நானும்க்கா… எக்ஸ்க்ளூசிவ் எகனாமிக் ஸோன் அப்படின்னு கடல்ல எந்தப் பகுதியைச் சொல்கிறோம்னு சொல்றேன்.
உற்சாகத்துடன் சிரித்த சகோதரிகளுக்கு மற்றுமொரு அணைப்பைக் கொடுத்துவிட்டு அவள் கிளம்பினாள்.
வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது.
நந்தவனமா?
பாலைவனமா?
தெரியவில்லை.
அன்புக்குக் குறைவில்லை.
ஆனால், அது மட்டும் போதவில்லை.
அந்தச் சிறுமிகளுக்கு எவ்வளவு அழகிய கண்கள்? அந்தக் கண்களுக்குள் எவ்வளவு அழகிய கனவுகள்?
ஒருத்திக்கு விஞ்ஞானியாக வேண்டும்.
மற்றொருத்திக்கு கணித நிபுணி,
‘வெறும் கை முழம் போடுமா?’
அவள் என்ன செய்யப் போகிறாள்? எப்படி அந்தக் கனவுகளுக்கு வடிவம் தரப் போகிறாள்?
***
ஆஸ்பிடல் உள்ளே நுழையும்போது எஸ்தரும் நளினியும் விரைந்து வந்தார்கள்.
அந்த கோமளாம்மா ரொம்ப பிடிவாதம் பிடிக்குது மீரா.... சாப்பாடு, மருந்து எதுவும் சாப்பிடாம சண்டித்தனம் பண்ணுது.... நீதான் வரணுமாம்....
அவள் விரைந்தாள்.
2
கோமளாம்மா.... குட்மார்னிங்....
என்று அறைக்குள் நுழைந்தபோது கழுத்து, முகம் எல்லாம் மூடிக்கொண்டு படுத்திருந்த முதியவள் பதில் சொல்லவில்லை.
ஹலோ.... கோமளா.... உங்க ஃப்ரெண்ட் லதா மங்கேஷ்கர் வந்திருக்கேன்… குட் மார்னிங்....
என்ன? லதாஜியா? ஆப்? இதர் ஸே?
என்று சடாரென்று போர்வை விலக்கினாள் அந்த வயதான பெண்மணி.
புன்னகையுடன் மீரா நின்றாள்.
"இப்படி முகத்தை மூடிக்கொண்டு தூங்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா