Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

July Malargale!
July Malargale!
July Malargale!
Ebook128 pages1 hour

July Malargale!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகான வீராப்பான பொண்ணு சீதா. மிகவும் சாதுவான பெற்றோருக்கு கீழ்படியும் பையன்தான் சூர்யா. இந்த எதிரும் புதிருமான ஜோடிகள் இணைந்தார்களா? திருமணம் நடைபெற்றதா? சூர்யாவின் நடத்தை சீதாவின் குணத்தை மாற்றியதா? இந்த மணம் பரப்பும் ஜூலை மலர்களை வாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580100610241
July Malargale!

Read more from Devibala

Related authors

Related to July Malargale!

Related ebooks

Related categories

Reviews for July Malargale!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    July Malargale! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜூலை மலர்களே!

    July Malargale!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 01

    கல்யாணமாகி நாலே நாட்களில் சீதா பெரிய குண்டை தூக்கிப்போட, அப்பா ஈஸ்வரன் கதிகலங்கி போனார். ஆறு மாதங்களாக திட்டம்போட்டு ஒன்பது பொருத்தங்களும் பொருந்திய தகுதியான, நல்ல மாப்பிள்ளையை, தேர்ந்தெடுத்து பல லட்சங்களை கொட்டி செலவழித்து, உடலாலும், மனத்தாலும், பணத்தாலும் பட்டபாடு கொஞ்சமல்ல. சீதா ஒரே மகள். மிகமிக செல்லமாக வளர்ந்த பெண். குறிப்பாக அப்பா செல்லம். அவள் கேட்டு எதையும் இல்லையென்று ஈஸ்வரன் மறுத்ததேயில்லை. இதற்காக அவர் மனைவி லலிதாவுக்கும் அவருக்கும் ஏராளமான உரசல் வரும். சமயத்தில் அது பெரிய சண்டையாக வெடித்து மூன்று நாட்களுக்கு பேசாமல் இருந்து, பிறகு சமாதானமாகும்.

    இதப்பாருங்க! சீதா நமக்கு ஒரே பெண் குழந்தைங்கற செல்லமும், அவமேல வச்ச அளவு கடந்த பாசமும் தப்புன்னு நான் சொல்லலை. நான் பத்துமாசம் சுமந்து பெத்த பொண்ணு அவ. அதுவும் நாலு வருஷங்கள் கழிச்சு பொறந்த பொண்ணு. எனக்கில்லையா அவமேல பாசம்? ஆனா அவ பெண் குழந்தை. என்னிக்கும் இந்த வீடு அவளுக்கு சாசுவதமில்லை. இன்னொரு வீட்டுக்கு அவ வாழ போகணும். அங்கே இதே சலுகைகளை அவ எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, அனுசரிச்சு வாழ அவளுக்கு நாமதான் கத்துக்குடுக்கணும். நான் பல சமயம் அவ பிடிவாதங்களை, சண்டித்தனங்களை, முன்கோபத்தை கண்டிக்கும்போது, நீங்க கண்டுகாம போகணும். அதை செய்யாம அவளை ஆதரிச்சு, என் மேல நீங்க பாயற காரணமா, அவ என்னை சுத்தமா மதிக்கறதில்லை. இது அவளோட வாழ்க்கைக்கு நல்லதில்லை. பொண்ணா பொறந்தா பொறுமை வேணும். சீதான்னு பேரை வச்சிட்டு எப்பவும் சீறிட்டே இருந்தா, அந்த பேருக்கே மரியாதை இல்லை.

    எனக்கு இந்த பேரே பிடிக்கலை. ரொம்ப பழைய பேரு. பாட்டி மாதிரி இருக்கு.

    வாயை மூட்றி. உன் பாட்டி பேருதான் அது. உங்கப்பாவோட அம்மா. ராசிக்கார மனுஷி. சீதான்னா மகாலஷ்மி. பொறுமையோட இலக்கணம். அவ படாத கஷ்டங்களா?

    இப்படியெல்லாம் பேசியும், மகளுக்கு புத்திமதி சொல்லியும் வாய் வலித்ததுதான் மிச்சம். அப்பா வேதாளத்துடன், மகள் வேதாளமும் அடங்கும் ரகமல்ல. ஆனால் நன்றாக படித்தாள் சீதா. என்ஜினியரிங் முடித்து ராங்க் வாங்கி, கல்லூரி வளாகத்தில் பெரிய கம்பெனி அவளை தேர்ந்தெடுக்க, நல்ல பதவியில் எடுத்த எடுப்பில் பெரிய சம்பளத்தில் போய் உட்கார்ந்தாள். அவள் சம்பளத்தை இவர்கள் கேட்கவில்லை. லலிதா அதை ஆதரிக்கவில்லை.

    லட்சங்களை கொட்டி கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கோம். தரட்டுமே. தப்பென்ன?

    எதுக்கு லலிதா? நீயும் நானும் கை நிறைய சம்பாதிச்சு, எல்லா வசதிகளோடயும் வாழறோம். குழந்தை, அவ சம்பாதிக்கறதை அவ விருப்பத்துக்கு செலவழிக்கட்டுமே. அதையும் பறிப்பியா?

    புரியாம பேசாதீங்க. நாளைக்கு வாழப்போற குடும்பத்தோட சூழ்நிலை எப்படியிருக்குமோ? என் சம்பளத்தை பைசா திருத்தமா வாங்கி, டீ சாப்பிடகூட உங்ககிட்ட வாங்கிட்டுத்தானே நான் போவேன். இப்ப நாலு வருஷங்களாத்தானே நான் சுதந்திரமா இருக்கேன். பெண் குழந்தைகளை பக்குவப்படுத்தி வளர்க்கலைன்னா, அ து அவங்களுக்கே பாதகமா முடியும்.

    எல்லாத்துக்கும் உன் உபதேசம் கேட்டு காதுல ரத்தம் வருது.

    தன் வருமானத்தில் புதுப்புது உடைகள், மின்னணு சாதனங்கள் என வாங்கி குவித்தாள். வார கடைசியில் தோழிகளுடன் ஓட்டலுக்கு போய், மால் பிரதேசங்களில் ஷாப்பிங் செய்து வாரம் பத்தாயிரம் செலவு.

    இப்படி செலவழிச்சா தாங்குமாடீ?

    நீ சும்மாரும்மா. எல்லாத்துக்கும் என்னையே வேவு பார்ப்பியா?

    அப்பாவை கிளறிவிட்டு, அடிக்கடி வெளியூர் பயணம். அவரும் சளைக்காமல் அழைத்து போவார்.

    என்னங்க, ஒரு ட்ரிப் போனா, விமான பயணம், ரெசார்ட், சைட் சீயிங், சாப்பாடு, ஷாப்பிங்னு மூணு பேருக்கு ரெண்டு லட்சம் செலவாகுது. இந்த ரேட்ல உங்க செல்ல மகளுக்கு நீங்க தலையாட்டினா, நாம தெருவுல நிப்போம். இவளை சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகுடுத்து அனுப்பணும்.

    முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு மறுத்த சீதா, அவள் தோழிகளுக்கெல்லாம் வரிசையாக கல்யாணம் நடக்க, அவளுக்கும் கல்யாண ஆசை வரும்போது, வயது இருபத்தைந்து. வரன்களை ஆன்லைனில் மும்முரமாகதேட, சீதா போட்ட நிபந்தனைகளில், வந்த வரன்கள் எல்லாம் தெறித்து ஓடியது. மாட்ரிமோனியல் சார்ட் பார்த்து புகைப்படங்களை ஆயிரம் குறைகள் கண்டு தேர்ந்தெடுக்கவே நிறைய அவகாசம் தேவைப்பட்டது. அப்படி தேர்ந்தெடுக்கும்போது, ஜாதகம் பொருந்தவில்லை. அப்படி பொருந்தினால் படிப்பு, உத்யோகம், சம்பள விவகாரங்களில் திருப்தியில்லை. அந்த பையனுக்கு சகோதரிகள் இருக்கக்கூடாது என்றாள்.

    "ஏண்டீ? உங்கப்பாவுக்கு மூணு சிஸ்டர்ஸ். நான் சம்மதிக்கலையா?

    சரி, அத்தைகள் உன்னை படுத்தின பாடு கொஞ்சமா? நான் இந்த வீட்ல வளர்ந்தவதானே? நீ கை நிறைய சம்பாதிப்பே. வேலைக்கும் போய், வீட்ல எல்லா வேலைகளையும் செஞ்சு நீ மாடா உழைச்சும், வேலைக்கு போகாம, ஒக்காந்து தின்ன பெரிய அத்தை, உன்னை டார்ச்சர் பண்ணலையா?

    உங்கப்பா அன்னிக்கு என் பக்கம் நின்னதால, நான் பொழச்சேன். புருஷன் ஆதரவு பொம்பளைக்கு இல்லைன்னா, புகுந்தவீட்டு மனுஷங்க, அவளை வித்துடுவாங்க.

    தெரியுது இல்லை? உன்னை பார்த்து நான் கத்துக்கிட்ட பாடம் கொஞ்சமில்லை. உன்னை மாதிரி வாயிருந்தும் ஊமையா எல்லாத்துக்கும் நான் தலையாட்ட மாட்டேன். இந்த உலகத்துல எந்த நாத்தனாரும் நல்லவ இல்லை. அது ஒரு மாதிரி கெட்ட ஜாதி. அதனால நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை. எனக்கு நாத்தனார் இல்லாத இடமா பாருங்க.

    பல மாமியார்களும் மோசம்தான். மாமியாரும் வேண்டாமா?

    இல்லை அவங்க இருக்கட்டும். ஏன்னா, நான் போனதும் உள்ளே ஒரு பொம்பளைகூட இல்லைன்னா, எல்லா பாரமும் என் தலைல வந்து இறங்கும். நான் ஃப்ரீயா இருக்க முடியாது. வடிச்சு கொட்ட ஒரு மாமியார் தேவைதான்.

    "இந்த மனநிலை உனக்கு கூடாது. எந்த பெண்ணுக்குமே ஆரம்பத்துல புகுந்தவீட்டு சொந்தங்கள் பிடிக்காதுதான். ஆனா சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிட்டா பிடிக்கும் நாளாவட்டத்துல. புகுந்தவீட்டு சொந்தங்கள்கூட இருக்கறது ஒரு பெண்ணுக்கு கௌரவம்டி. அத்தை, சித்தப்பா இதெல்லாம் வேணும்டி. குழந்தைங்க அனாதையா வளரக்கூடாது. என் மேல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் உன் அத்தைகள் மூணு பேருக்கும் உன்னை ரொம்ப

    Enjoying the preview?
    Page 1 of 1