நாளைய தேசம்
By Rajeshkumar
()
About this ebook
ஃபேக்ஸ் தாளில் வரி வரியாய் ஓடியிருந்த எழுத்துக்களின் மேல் மறுபடியும் பார்வையைப் போட்டார் வர்மா.
இது அவசரம் மற்றும் ரகசியச் செய்தி.
சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தோடு வேறு ஒரு நபர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான். அவன் எதற்காகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தீவிரவாதியாக இருக்கக்கூடும். பாராளுமன்ற செக்யூரிடி விங் திறமையாகச் செயல்பட்டு அவனை மடக்க வேண்டும். விபரீதம் நிகழ்வதற்கு முன் விரைந்து செயல்படுவது அவசியம்.
டெல்லி போலீஸ்.
வர்மாவின் முகத்திலும் இப்போது வியர்வை. பக்கத்தில் நின்றிருந்த மார்ஷலை ஏறிட்டார்.
"பாபட்லால்"
"ஸார்..."
"சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலால் மாதிரி உருவத் தோற்றத்தோடு யாரோ ஒருவன் சபைக்குள்ளே போயிருப்பதாகச் செய்தி... நீங்கள் சபை வாசலில் தானே நின்றிருந்தீர்கள்?"
"ஆமாம் ஸார்…"
"பின்னே எப்படி அந்த நபர் உள்ளே போனார்...?
ஸார்... நாங்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாய்க் கவனித்துத்தான் உள்ளே அனுப்பி வைத்தோம். எங்கள் ஸ்கேன் கண்களை ஏமாற்றிவிட்டு யாரும் உள்ளே போயிருக்க முடியாது."
"அப்படியானால் ஃபேக்ஸ் செய்தி பொய் என்று சொல்ல வருகிறீர்களா...?"
"டெல்லி போலீஸ் கொடுத்திருக்கும் ஃபேக்ஸ் செய்தி பொய்யாய் இருக்க முடியாது ஸார். ஏதோ ஒரு குளறுபடி நடந்துள்ளது. அது என்ன என்பதை இப்போது கண்டு பிடித்துவிடலாம். கம்ப்யூட்டர் அறைக்குப் போய் அந்தத் துளசிராம் கன்யாலாலை ஸ்க்ரீனில் மானிட்டர் செய்து பார்க்கலாம். ஐடென்டிஃபிகேஷன் ஃபிளாப்பியை கம்ப்யூட்டர்க்குக் கொடுத்தால் அதுவே சபைக்குள் இருப்பது சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலாலா இல்லையா? என்பதைச் சொல்லி விடும்..."
"சபாநாயகர் உள்ளே போய் விட்டார். சபை இன்னமும் ஐந்து நிமிஷங்களில் ஆரம்பமாகிவிடும்."
"சபை நடந்து கொண்டு இருக்கட்டும், ஸார். நாம் அந்த நபரின் நடவடிக்கைகளைக் கம்ப்யூட்டரில் மானிட்டர் செய்து பார்ப்போம்..."
செக்யூரிடி விங் சீஃப் ஆபீஸர் தேசாயும் மார்ஷல் பாபட்லாலின் பேச்சை ஆமோதிக்க, மூன்று பேரும் கம்ப்யூட்டர் அறைக்குப் போனார்கள்.
சில நிமிஷ நடை...
கம்ப்யூட்டர் செக்ஷன் வந்தது.
'அந்நிய நபர்களுக்கு அனுமதியில்லை' என்ற வாசகம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தெரிய, கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனார்கள். அந்தப் பெரிய அறையின் மூன்று பக்கச் சுவர் ஓரமாய் ஃபைபர் மேஜைகள் தெரிய, அதன் மேல் பெண்டியம் கம்ப்யூட்டர்கள் வரிசையாய் உட்கார்ந்து அதன் மானிட்டர் திரைகளில் பாராளுமன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தன.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரமோத் குழப்பமாய் அவர்களைப் பார்க்க, தேசாய் சொன்னார்.
"மிஸ்டர் பிரமோத்...! சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலாலை மானிட்டர் ஸ்க்ரீனில் க்ளோஸப்புக்குக் கொண்டு வாருங்கள்..."
"ஏன் ஸார்... ஏதாவது பிரச்னையா...? நீங்கள் மூன்று பேருமே இவ்வளவு பதட்டமாய் இருந்து நான் பார்த்தது இல்லை..."
தேசாய் சொன்னார். "பெரிய பிரச்னைதான்! சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலால் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல். ஆனால் பாராளுமன்றச் சபைக்குள்ளே துளசிராம் கன்யாலால் மாதிரியான உருவத் தோற்றத்தோடு யாரோ போயிருக்கிறார்கள். அது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மானிட்டர் திரைக்குத் துளசிராம் கன்யாலால் முகத்தை க்ளோஸ்ப்புக்குக் கொண்டு வாருங்கள், மிஸ்டர் பிரமோத்..."
பிரமோத்தும் பதட்டமாகி கம்ப்யூட்டர்க்கு முன்பாகப் போய் உட்கார்ந்தார். கம்ப்யூட்டரின் ஜூம் பட்டனைத் தட்ட, சபையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ காமிராவின் கோணம் மாறி, எம்.பி.க்களின் முகங்களைப் பெரிது பெரிதாய்க் காட்ட ஆரம்பித்தது.
சமஜ்பூர் எம்.பி.யின் இருக்கை எண் எதுவென்று கம்ப்யூட்டரிடம் பிரமோத் கேட்க, இருக்கை எண் 267 என்று மானிட்டரின் மையத்தில் உற்பத்தியாகி, பின் காமிராவின் கோணம் 267 எண்ணை நோக்கி மெதுவாய் நகர்ந்தது. வர்மா, தேசாய், பாபட்லால் மூன்று பேருமே பார்வைகளைக் கூர்தீட்டிக் கொண்டனர்
Read more from Rajeshkumar
நயாகரா புயல்...! Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsமெழுகுவத்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsநான் கொல்லுவதெல்லாம் பெண்மை Rating: 0 out of 5 stars0 ratingsரோஜா முள் துரோகம்! Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் ஒரு ஆச்சர்யக்குறி Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் வான்ட்டட்! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னுடைய ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஅரை விநாடி அநியாயம் Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsகாதலுக்கு கண் இருக்கு Rating: 0 out of 5 stars0 ratingsமதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகரைக்கு வராத அலைகள் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னைக் கொலையாவது செய் கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் எடுப்பான் தோழன் Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கிருந்தோ ஆசைகள்! Rating: 0 out of 5 stars0 ratingsநான் நளினா நள்ளிரவு Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாமூச்சி! Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsவர்ணாவின் மரணம் Rating: 0 out of 5 stars0 ratingsகண்களில் எத்தனை கள்ளமடி Rating: 0 out of 5 stars0 ratingsஇப்படிக்கு இறந்துபோன ரமா! Rating: 0 out of 5 stars0 ratingsகாவ்யாவின் கறுப்பு தினங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநீலம் என்பது நிறமல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsதப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsமேனகாவின் மே மாதம்! Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு நவம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsXYZ மர்டர்ஸ் Rating: 0 out of 5 stars0 ratings
Related to நாளைய தேசம்
Related ebooks
Nalaiya Thesam Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsஅக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Thazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsPakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Arasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsGlucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsThoodhu Sellaayo Thuppakkiye Rating: 5 out of 5 stars5/5Karuppu Vanakam Rating: 5 out of 5 stars5/5தீர விசாரிப்பதே பொய் Rating: 0 out of 5 stars0 ratingsTheera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Sivappu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsKondraalum Kuttramillai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nizhal Illadhavan Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsThotti Meenagalum Koondu Kiligalum Rating: 0 out of 5 stars0 ratingsAntha Ratha Naatkal Rating: 5 out of 5 stars5/5அந்த ரத்த நாட்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Poiyum Sivappu Unmaiyum! Rating: 4 out of 5 stars4/5Meendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsMuththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Thayangaathey Thakku Rating: 0 out of 5 stars0 ratingsபஞ்சவர்ணக் கி(ளி)லி Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nanalla Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for நாளைய தேசம்
0 ratings0 reviews
Book preview
நாளைய தேசம் - Rajeshkumar
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
Copyright © By Pocket Books
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
1
2005-ஆம் வருடம். டெல்லி. காலை மணி 10.15.
குளிர்காலப் பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இன்னும் அரைமணி நேரம் அவகாசம் இருக்க கார்களிலும், மாருதி வேன்களிலும் வந்த எம்.பி.க்கள் வீடியோ காமிராக்களுக்கும், போட்டோகிராஃபர்களுக்கும் வலுக்கட்டாயச் சிரிப்பைக் கொடுத்தபடி, பாராளுமன்ற முகப்புக் கட்டிடப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.
ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் வார்த்தைகள் சிதறிக் கொண்டிருந்தன.
என்ன யஷ்வந்த்... பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறாய். வழி தவறி வந்து விட்டாயா...?
வீட்டில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியவில்லை. சாயந்தரம் நான்கு மணி வரைக்கும் இங்கே நிம்மதியாய் இருந்து விட்டுப் போகலாமே...
ஹலோ மிஸ்டர் பண்டாரி... நேற்றைய பேப்பர்கள் எல்லாவற்றிலும் நீங்கள்தான் ஹாட் நியூஸ் போல் இருக்கிறதே...!
அது பொய்யான ந்யூஸ். இன்கம்டாக்ஸ் பீப்பிளும் சரி... சி.பி.ஐ. ஆட்களும் சரி, யாருமே என் வீட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்கிற விஷமத்தனமான வேலைகள். இன்றைக்குப் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் நாரகேஸ்வரரை ஒரு பிடி பிடிக்கிறேன், பாருங்கள்.
என்ன, மிஸ்டர் பூபேஷ்வர்மா... தொகுதிப் பக்கம் மும்முரமாய்த் திரிந்து சுற்றுப் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறதே...!
பின்னே...? பாராளுமன்றத்துக்கு எந்த நிமிஷத்திலும் இடைத்தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உருவாகிக் கொண்டு இருக்கிறதே...!
இடைத் தேர்தல் இப்போதைக்கு வராது...
அந்த பூபேஷ்வர்மா தொப்பை குலுங்கப் பகபகவென்று சிரித்துவிட்டுச் சொன்னார்.
இந்தக் கட்சி, ஆட்சியில் இருப்பதும், இல்லாததும் எங்கள் கட்சித் தலைவரின் கையில் இருக்கிறது. அவர் ஆதரவு வாபஸ் என்று சொன்னால் போதும். அடுத்த நிமிடமே பிரதமர் ஆசாத் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
இந்தப் பேச்சுக் குரல்களுக்கு மத்தியில், வாசலில் சின்னதாய் ஒரு பரபரப்பு அரும்பியது. போலீஸ் சார்ஜெண்ட்கள் பூட்ஸ் சத்தம் ஒலிக்க, அந்த வெள்ளை நிற காண்ட்டஸா காரை நோக்கி வேக நடை போட்டுச் சூழ்ந்தார்கள்.
காரின் கதவுகள் ஒரு பூவின் இதழ்கள் மாதிரி திறக்கப்பட, உள்துறை மந்திரி கீர்த்தி பட்டேல் மின்னும் வழுக்கைத் தலையோடு கைகளில் ஒரு தடிமனான ஃபைலோடு கீழே இறங்கினார்.
பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
கேள்விகள் பறந்தன.
பரபரப்பான ஒரு சூழ்நிலையில் இந்தக் குளிர்காலப் பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது, விவாதத்துக்கு என்னென்ன விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்பதைச் சொல்ல முடியுமா...?
கீர்த்தி பட்டேல் தன் நரை மீசைக்குக் கீழே பலமாய்ச் சிரித்தார்.
இது குளிர்காலப் பாராளுமன்றக் கூட்டம். ஆனால் உள்ளே அனல் பறக்கும் சூடான விவாதங்கள் நடைபெற உள்ளன. விவாதங்கள் சூடாக இருந்தாலும் முடிவில் எல்லாமே சுமுகமாகத்தான் இருக்கும்...
எதிர்க் கட்சியில் ஒரு பிரிவினர் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்களே?
அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதே மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசத்தான். அதை அவர்கள் மறந்துவிட்டுப் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தால் இனி வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள். அற்ப விஷயத்திற்கெல்லாம் பாராளுமன்றத்தை ‘பாய்காட்’ செய்தால் அவர்கள் எம்.பி.க்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்.
உங்கள் ஆட்சி நீடிக்குமா...?
ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்...?
இல்லை... ஆளும் கட்சியான உங்களோடு, உங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் நல்ல உறவோடு இருக்கிற மாதிரி தெரியவில்லையே...?
இது எதிர்க் கட்சிகளின் விஷமப் பிரச்சாரம். கூட்டணிக் கட்சிகளோடு எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்த அரசு ஐந்து வருஷம் நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையும், ஏனென்றால் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நாட்டு மக்கள் தயாராக இல்லை...
உங்கள் ஆட்சியில் மந்திரிகளில் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு... அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் ஏதாவது உண்டா...?
அதெல்லாம் கற்பனைக் குற்றச்சாட்டுக்கள். இட்டுக் கட்டிய பொய்கள். அதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் சட்டமும், நீதியும் கேலிக்குரிய விஷயங்கள் ஆகிவிடும்...
கீர்த்தி பட்டேல் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் வாசலில் பரபரப்பு.
ஒரு நிருபர் சொன்னார்.
ஸார்... பிரைம் மினிஸ்ட்டர் வந்துவிட்டார். வழக்கத்தை விட, இன்றைக்குச் சீக்கிரமாகவே வந்து விட்டார்.
வெள்ளை நிற அம்பாசிடர், கும்பலின் நடுவே மிதந்துவர, ஒரே மாதிரியான நிறத்தில் சபாரி அணிந்த பாதுகாப்பு