பாலைவனப் பௌர்ணமி !
By Rajeshkumar
()
About this ebook
ஜாக்கிங் என்ற பெயரில் சில நூறு மீட்டர் தூரம் ஓடிய பதி நின்று மூச்சிரைக்க திரும்பிப்பார்த்தான்.
ஜமுனா கண்ணில் படாமல் போகவே - மூச்சிரைப்போடு கடற்கரை மண்ணில் இறங்கி - சீரணி அரங்கத்தை நோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தான்.
சூரிய வெளிச்சம் கடல் அலைகளின் மேல் குங்குமத்தையும் மஞ்சளையும் தூவியிருந்தது. கடற்பறவைகள் தாழப் பறந்தன."
மணலில் புதைய புதைய நடந்து சீரணி அரங்கை தொட்டு படிகளில் ஏறியபோது முதுகில் ஒரு சின்னக்கல் வந்து விழுந்தது.
கூடவே ஒரு பெண்ணின் குரல்.
"நான் இங்கே இருக்கேன்..."
பதி திரும்பினான்.
படகு மறைவிலிருந்து அந்தப் பெண்ணின் முகம் எட்டிப் பார்த்து பழிப்பு காட்டியது.
பதி சிரித்து அவளை நெருங்கினான்.
"என்ன மேனகா? இங்கே வந்து ஒளிஞ்சிட்டிருக்கே?"
"இன்னிக்கு நாம சீரணி அரங்குக்குள்ளே உட்கார்ந்து பேச முடியாது..."
"ஏன்...?"
"எவனோ ஒருத்தர் குடிச்சுட்டு வந்து... வாந்தி பண்ணி அந்த வாந்தியிலேயே படுத்து தூங்கிட்டிருக்கான்..."
"உவ்வே...! எனக்கே வாந்தி வர்ற மாதிரி இருக்கு. வா... அந்தப் பக்கமா போயிடலாம்...மெல்ல நகர்ந்தார்கள்.
"நீ வந்து நேரமாச்சா...?"
"சுத்தமா பத்து நிமிஷம்..."
"இன்னிக்கும் அந்த ஜமுனாகிட்டே மாட்டிகிட்டேன்...! உதறிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு..."
"பாவங்க அந்தப் பொண்ணு..."
"அவ பாவம் இல்லை... பிசாசு...! தினசரி வந்துடறா. வாக்கிங் போற ரூட்டை மாத்திக்க... வேண்டியதுதான்... இல்லேன்னா..."
"இல்லேன்னா...?"
"எங்க அம்மாகிட்டே உன்னைப் பத்தி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டியதுதான்..."
"ரெண்டாவது சொன்னது உத்தமம்..."
"இன்னிக்கு போனதும் சொல்லிடப்போறேன்..."
"இந்த தைரியம் வீட்டுக்குப் போனதும் காணாமே போயிடும்..."
"இல்லே... மேனகா...! இன்னிக்கு சொல்லிடப் போறேன். இந்த ஜமுனாவோட தொந்தரவு தாங்க முடியலை. என் மூக்கைப் பாரு... நாக்கைப் பாருன்னு ஏகரகளை...! என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் அம்மாவுக்கு விஷயம் தெரியத்தான் போகுது... அதை இன்னிக்கே சொல்லிட்டா என்ன?"
"சரி, எப்படி விஷயத்தை ஆரம்பிப்பீங்க...?"
"அது... வந்து... வந்து..."
"பார்த்தீங்களா பயம் வந்துடுச்சு..."
"இது பயமில்லை..."பின்னே...?"
"விஷயத்தை எப்படி ஓபன் பண்றதுன்னு தெரியலை..."
"சரி... நான்தான் உங்க அம்மான்னு நினைச்சுக்கிட்டு விஷயத்தை ஆரம்பியுங்க பார்க்கலாம்..."
பதி தொண்டையைச் செருமிக் கொண்டான்.
"அ... அம்மா..."
"எ... என்ன... பதி...?"
"உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்..."
"பேசேன்..."
"நான் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்களுக்கு ஆசைதானே?"
"ஆமா..."
"பொண்ணு எனக்கு பிடிச்சவளாயிருந்தா உங்களுக்கு சந்தோஷம்தானே...?"
"ஆமா..."
"எனக்கு ஒரு பொண்ணை புடிச்சிருக்கு..."
"அட... யார்ரா அவ?"
பதி மேனகாவை முறைத்தான்.
"என்ன 'வாடா போடா'ன்னு சொல்றே...?"
"சரியாப் பேச்சு! போடற வேஷத்தை ஒழுங்கா போட வேண்டாமா...? உங்க அம்மா உங்ககிட்ட எப்படி பேசுவாங்களோ அப்படித்தான் பேசிட்டிருக்கேன். ம்... பேச்சை கன்டினியூ பண்ணுங்க..."
"நீ என்ன கேட்டே...?"
"அட யார்ரா அது..."
Read more from Rajeshkumar
நயாகரா புயல்...! Rating: 0 out of 5 stars0 ratingsஅரை விநாடி அநியாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsஇப்படிக்கு இறந்துபோன ரமா! Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsரோஜா முள் துரோகம்! Rating: 0 out of 5 stars0 ratingsகாதலுக்கு கண் இருக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கிருந்தோ ஆசைகள்! Rating: 0 out of 5 stars0 ratingsநான் கொல்லுவதெல்லாம் பெண்மை Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsகாவ்யாவின் கறுப்பு தினங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு நவம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsநான் நளினா நள்ளிரவு Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் ஒரு ஆச்சர்யக்குறி Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாமூச்சி! Rating: 0 out of 5 stars0 ratingsமேனகாவின் மே மாதம்! Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsகண்களில் எத்தனை கள்ளமடி Rating: 0 out of 5 stars0 ratingsமெழுகுவத்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsநீலம் என்பது நிறமல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsநீயா? நானா? & உயிர் உதிர்காலம் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னுடைய ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் எடுப்பான் தோழன் Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் வான்ட்டட்! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னைக் கொலையாவது செய் கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsமதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகரைக்கு வராத அலைகள் Rating: 0 out of 5 stars0 ratingsதப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsதோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா Rating: 0 out of 5 stars0 ratings
Related to பாலைவனப் பௌர்ணமி !
Related ebooks
Paalaivana Pournami Rating: 0 out of 5 stars0 ratingsNIzhal Manithan Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Aalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsThooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Oru Bull Bull Paravai Rating: 0 out of 5 stars0 ratingsஒரு புல் புல் பறவை! Rating: 0 out of 5 stars0 ratingsIllavasam Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsஇலவசம் ஒரு வானவில் Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsNewyork Nila Rating: 0 out of 5 stars0 ratingsEthuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsOru Cup Raththam Rating: 5 out of 5 stars5/5Thee Thithikkum Thee! Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsNandhini 440 Volts Rating: 4 out of 5 stars4/5Iravu Mazhai Kolai Rating: 5 out of 5 stars5/5Mazhaiyum Neeye Maanasi Rating: 0 out of 5 stars0 ratingsமழையும் நீயே மானசி..! Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaikkalla Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Partha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsதிரும்பிப் பார்த்த ஓவியம் Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsசம்சாரப் பூக்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Andre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for பாலைவனப் பௌர்ணமி !
0 ratings0 reviews
Book preview
பாலைவனப் பௌர்ணமி ! - Rajeshkumar
1
விடிகாலை.
கடற்கரைச் சாலை. சாலையின் பேவ் மெண்டில் மேல்மட்ட வர்க்கம் உடம்புகளில் அதிகப்படியாய் சேர்ந்து விட்ட கொழுப்புச் சங்கதிகளை கரைப்பதற்காக வேக வேகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தது. உதடுகளில் அரசியல், சினிமா, ஷேர் மார்ககெட், பிசினஸ், மன்மோகன் சிங், காலை நேரக் கடல் நிறம் மாறியிருக்க - கிழக்கில் துளியூண்டு சூரிய வெளிச்சம். காற்றில் நிறைய ஓசோன்.
காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் பதி. 27 வயது. படிப்பு எம்.பி.ஏ. ரெப்யூட்டட் கம்பெனி ஒன்றின் எம்.டி. அப்பா சேர்த்த சொத்து, இப்போது அவர் வெறும் போட்டோ. அம்மா மட்டும்தான். பெயர் ராஜலட்சுமி. பதிக்கு வாக்கிங் வரும் வயதில்லை, இருந்தாலும் வருகிறான். காரணம்?
குட்மார்னிங் மிஸ்டர் பதி...?
பதி திரும்பினான்.
ஜாக்கிங் சூட்டில் ஜமுனா நின்றிருந்தாள். தலைக்கேசம் கடல் காற்றில் பறக்க அழகாக இருந்தாள். பாலீஷ் பண்ணிய கோதுமை நிறம்.
குட்மார்னிங்...
இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க போலிருக்கு.
ஆமா...
லெட் அஸ். வாக்...!
ஜமுனா சிரித்துக் கேட்க -
நடந்தார்கள்.
இன்னிக்கு ஸீ - ப்ரீஸ் அற்புதம்...
எனக்கு வித்தியாசம் தெரியலை... தினசரி ஒரு மாதிரிதான் இருக்கு...
சரி... இன்னிக்கு என்கிட்ட ஒரு வித்தியாசம் இருக்கு... அதையாவது உங்களாலே கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்...
உன்கிட்டே வித்தியாசமா...?
ம்...
நின்று அவளை ஏறிட்டுப் பார்த்தான். மேலிருந்து கீழ் வரை பார்வையை வழிய விட்டவன் - உதட்டைப் பிதுக்கிப் பின் நடந்து கொண்டே சொன்னான்.
தெரியலையே...?
நிஜமா தெரியலையா...?
ஊ... ஹூ... ம்...
நீங்க என்னிக்கு என்னோட முகத்தை சேர்த்த மாதிரி பத்து செகண்ட் பார்த்திருக்கீங்க...? அப்படி பார்த்திருந்தா இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே...?
பதி புன்னகைத்தான்.
சாரி ஜமுனா... நீ எப்பவும் போலத்தான் என் கண்ணுக்குத் தெரியறே...?
தனக்குள் முனகிக் கொண்டாள் ஜமுனா.
ஏதாவது ரசனை இருந்தாத்தானே...?
என்ன... என்னைத் திட்டறியா?
நோ... நோ...! தூரத்துல தெரியற சாந்தோம் சர்ச்சைப் பார்த்து ஜெபம் பண்ணினேன்.
சரி... நீயே சொல்லு... உன்கிட்டே என்ன வித்தியாசம்...?
என் மூக்கைப் பாருங்க...
பார்த்துவிட்டு விசிலடித்தான் பதி. அட மூக்கு குத்தியிருக்கே...
இப்பவாவது கண்டுபிடிச்சீங்களே...?
ஆமா... இப்ப எதுக்கு திடீர்னு மூக்குத்தி... மூக்குத்தி போட்டுக்கறது இப்ப ஃபேஷனா...?
ஜமுனா சிரித்தாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை... நேத்து அலங்கார்ல ஒரு நூன் ஷோ பார்த்தேன். ஹிந்திப்படம். அதுல வர்ற ஹீரோயின் மூக்குத்தி போட்டுக்கிட்ட ஒரு காரணத்துக்காகவே படம் முழுக்க அழகா இருந்தா...?
ஷோ முடிஞ்சு வெளியே வந்ததும் நீ குத்திக்கிட்டியாக்கும்...
ஆமா...! எப்படியிருக்கு பதி...?
உண்மையைச் சொல்லட்டுமா?
ம்... சொல்லுங்க...
உன்னை மூக்குத்தியோட பார்க்கிறப்போ?
பார்க்கிறப்போ...
ஒரு அஞ்சு வயசு கூடுதலா தெரியுது...
பொய் சொல்லாதீங்க...
அட... நிஜமாத்தான்...
அப்படின்னா இந்த மூக்குத்தியைக் கழட்டிட வேண்டியதுதான்...
நடந்து கொண்டிருந்த பதி நின்றான்.
ஓ... கே... ஜமுனா... நான் கொஞ்சம் வேகமா ஓடி ஜாக்கிங் பண்ணனும்... ஸீ... யூ... டுமாரோ...
சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் கூட காத்துக் கொண்டிருக்காமல் பேவ்மெண்டில் வேகமாய் ஓட ஆரம்பித்தான்.