ஒரு புல் புல் பறவை!
By Rajeshkumar
()
About this ebook
செருப்பை உயர்த்தின கை உயர்த்தியபடியே இருக்க - வைசாலி எக்கச்சக்கமான கலோரி கோப வெப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
வேகமாய் சுயிங்கம் அரைக்கும் கடைவாயோடும் - கண்களைக் கவ்வியிருந்த ரேபான் குளிர் கண்ணாடியோடும் உயரமாய் அவன் நின்றிருந்தான். வலது கை கக்கத்தில் கல்லூரிப் புத்தகங்கள்.
"என்ன மேடம் புது செருப்பா...? கலர் அமர்க்களமா இருக்கு. ஆனா கால்ல இருக்க வேண்டியது கையில இருக்கே... நீங்க கையிலதான் நடக்கிற வழக்கமா...? "
"மொதல்ல கையை எடு..."
"நீ முதல்ல செருப்பைப் போடு..."
அவன் வைசாலியின் மணிக்கட்டைப் பிடித்து முறுக்க - செருப்பு தானாய் கீழே உதிர்ந்தது.
"கால்ல போட்டுக்க" என்று சொன்னவன் மாணவர்கள் பக்கம் திரும்பினான்.
"என்னடா அம்மிணி கூட தகராறு...?"
"ஒண்ணுமில்லே தேவு... ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் ரமேஷை புடிச்சு ராகிங் கஸ்ரத் எடுத்திட்டிருந்தோம். அம்மிணியோட ஜாக்கெட்டுக்கு எவ்வளவு சென்டிமீட்டர் துணி எடுக்கிறாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது. அதான் ரமேஷை விட்டு கேட்டுட்டு வரச்சொன்னோம். ரமேஷ் போய்க் கேட்டதுமே அம்மிணிக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடுச்சு..."
அந்த தேவு வைசாலியைப் பார்த்தான்.
"என்ன மேடம்... அதுக்கெல்லாம் கோபப்படலாமா...? அவங்க உங்ககிட்ட வந்து ஜாக்கெட்டையா கழட்டச் சொன்னாங்க. ஜாக்கெட்டுக்கு எவ்வளவு துணி எடுக்கணும்னுதானே கேட்டாங்க... சொல்லிட்டு போறது...""த்தூ... நீங்களும் ஸ்டூடண்ட்ஸா..."
"ரோட்டுல கண்டபடி துப்பினா... சானிடரி இன்ஸ்பெக்டர் பார்த்தா - புடிச்சிக்கிட்டு போயிடுவார்..."
"டேய்ய்..."
"சர்த்தான் போடி..."
"என்னடா சொன்னே...?" வைசாலியின் கோபம் உச்சத்துக்குப் போக - கீழே கிடந்த ஸ்லிப்பரை மறுபடி எடுத்து 'ச்சப்... ச்சப்...' என்று தேவுவின் கன்னத்தில் விளாசினாள்.
ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஜனமும், பஸ், கார்களில் பயணித்துக்கொண்டிருந்த ஜனமும் ஸ்தம்பித்துப் போனார்கள்.
போலீஸ் ஸ்டேஷன்.
இன்ஸ்பெக்டர், எதிரே நின்றிருந்த வைசாலியையும் - தேவுவையும் ஏறிட்டுப் பார்த்தார். "ரெண்டு பேருமே டீஸண்டா இருக்கீங்க... இப்படித்தான் ரோட்ல நடந்துக்கிறதா?"
வைசாலி வாயைத் திறந்தாள்.
"மிஸ்டர் இன்ஸ்பெக்டர். தப்பு பண்ணினவங்களைத்தான் நீங்க விசாரிக்கணும். ஒரு பொண்ணு தனியா நின்னுக்கிட்டிருந்தா... அவகிட்டே வந்து ரௌடிசம் பண்றவங்களை விசாரணை வைக்காம ஜெயில்ல போடணும்..."
"உங்க பேரென்ன?"
"வைசாலி..."
"எங்க வேலை பார்க்கிறீங்க..."
"ஒரு பிரைவேட் கன்சர்ன்ல டைப்பிஸ்டா இருக்கேன்..."
"நேடிவ் பிளேஸ் எது?"
"இதே ஊர்தான்...""எவனாவது உங்ககிட்ட வாலாட்டினா... நீங்க போலீஸ்ல தான் கம்ப்ளைய்ண்ட் பண்ணணுமே தவிர - அவனை தண்டிக்கிறதுக்காக கையில சப்பலை எடுத்துக்கக் கூடாது...! மிஸ்டர் உங்க பேரென்ன?"
"தேவராஜன்... எல்லோரும் தேவுன்னு கூப்பிடுவாங்க..."
"என்ன கோர்ஸ் படிக்கிறீங்க..."
"கம்ப்யூட்டரிங் டெக்னாலஜியில லாஸ்ட் இயர்..."
"உங்க அப்பா பேரென்ன?"
"பூங்குன்றன்..." என்று சொன்ன தேவு மெல்லிய குரலில் மேஜையின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டு "மினிஸ்டர் பூங்குன்றன்" என்றான்.
இன்ஸ்பெக்டர் விதிர்விதிர்த்துப் போய் நிமிர்ந்தார்.
"மினிஸ்டர் பூங்குன்றனோட சன்னா நீங்க? என்ன தம்பி இந்த வார்த்தையை மொதலிலேயே நீங்க சொல்ல வேண்டாமோ! கான்ஸ்டபிள்! அந்த சேரை எடுத்துப்போடய்யா...
தேவு அமைச்சர் பூங்குன்றனுடைய மகன் என்று தெரிந்ததுமே ஸ்டேஷனில் ஒரு அசாதாரண பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு கான்ஸ்டபிள்கள் நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள்
Read more from Rajeshkumar
நயாகரா புயல்...! Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கிருந்தோ ஆசைகள்! Rating: 0 out of 5 stars0 ratingsமதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsமேனகாவின் மே மாதம்! Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsரோஜா முள் துரோகம்! Rating: 0 out of 5 stars0 ratingsஅரை விநாடி அநியாயம் Rating: 0 out of 5 stars0 ratingsநான் நளினா நள்ளிரவு Rating: 0 out of 5 stars0 ratingsநான் கொல்லுவதெல்லாம் பெண்மை Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் ஒரு ஆச்சர்யக்குறி Rating: 0 out of 5 stars0 ratingsஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் வான்ட்டட்! Rating: 0 out of 5 stars0 ratingsகாதலுக்கு கண் இருக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் எடுப்பான் தோழன் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னுடைய ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsநீலம் என்பது நிறமல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsகண்களில் எத்தனை கள்ளமடி Rating: 0 out of 5 stars0 ratingsகாவ்யாவின் கறுப்பு தினங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு நவம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsமெழுகுவத்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsஇப்படிக்கு இறந்துபோன ரமா! Rating: 0 out of 5 stars0 ratingsதப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னைக் கொலையாவது செய் கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsகரைக்கு வராத அலைகள் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாமூச்சி! Rating: 0 out of 5 stars0 ratingsபகை, எனக்கு பகை! Rating: 0 out of 5 stars0 ratingsஅதே நிலா! அதே கலா! Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஒரு புல் புல் பறவை!
Related ebooks
Oru Bull Bull Paravai Rating: 0 out of 5 stars0 ratingsVasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Mannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Oomai Pullaanguzhalgal Rating: 0 out of 5 stars0 ratingsதிகில் காலம் Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Thattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsIravu Mazhai Kolai Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Malligai Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Medhuvaga Sellum Ambulancegal Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5இரும்பு கனவுகள் Rating: 0 out of 5 stars0 ratingsVaa En Muthal Ethiriye Rating: 5 out of 5 stars5/5வா, என் முதல் எதிரியே..! Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Paalaivana Pournami Rating: 0 out of 5 stars0 ratingsபாலைவனப் பௌர்ணமி ! Rating: 0 out of 5 stars0 ratingsOomatham Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநீயா? நானா? & உயிர் உதிர்காலம் Rating: 0 out of 5 stars0 ratingsNeeya Naana? and Uyir Uthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsCyanide Saamraajjiyam Rating: 5 out of 5 stars5/5Idhayathil Idam Irukkiratha? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for ஒரு புல் புல் பறவை!
0 ratings0 reviews
Book preview
ஒரு புல் புல் பறவை! - Rajeshkumar
1
‘கம்ப்யூட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்’
சிமெண்டால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் - சிவப்பு பெயிண்டில் குளித்து காம்பௌண்ட் கேட்டின் மேல் உட்கார்ந்திருக்க - சுவரோரமாய் மாணவர்கள் கூட்டம். கண்களை கவ்விய குளிர் கண்ணாடிகள். வாய்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் சிகரெட்கள். கக்கங்களில் அதக்கப்பட்ட புத்தகங்கள்.
மச்சி...
சொல்லும்மா...
வேதம் புதிது பாத்தியா...
பாக்கலேம்மா... ஊர்லேர்ந்து எங்கப்பன் மணியார்டர் அனுப்பினாத்தான் சினிமாவைப் பத்தியே கனவு காண முடியும்... பணம் வந்ததும் மொத காரியமா ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு போகணும்...
ஏம்மா... அந்தப் படத்துல... என்னயிருக்கு?
அர்ச்சனா ஜாக்கெட் போடாம வர்றாளாம்...
போஸ்டரைப் பார்த்துட்டு ஏமாந்துடாதே...
இல்லேம்மா... நம்ம ஜக்கு சொன்னான்... படம் பூராவும் ஒரே...
ஏதோ சொல்ல வந்த அந்த மாணவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு தன் சக மாணவனைப் பார்த்தான்.
மச்சி... ஒரு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் வர்றான்... ராக்கிங்ல அழுத்திடுவோமா...
ம்... அழுத்து...
அந்த மாணவன் குரல் கொடுத்தான்.
டேய்...!
முதல் வருஷ மாணவன் சிறுமுயல் போல் பயந்த பார்வையோடு ஓடி வந்தான். சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டதால் வியர்த்துப் போயிருந்தான். குழறிக்கொண்டே ‘விஷ்’ செய்தான்.
கு... கு... குட் மார்னிங் சார்...
என்ன சொல்றே... குட் மார்னிங்கா...
ஆ... ஆமா... சார்...
நீ என்ன மவுண்ட்பேட்டன் பிரபு பரம்பரையா... குட் மார்னிங் சொல்றே? காலை வணக்கம்னு தமிழ்ல சொல்லுடா...
காலை வணக்கம் சார்...
உம் பேரென்ன?
ரமேஷ் சார்...
இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா...
ஆர்.ரமேஷ்...
எந்த ஊரு...?
கம்பம்...
உனக்கு பொது அறிவு இருக்கான்னு இப்போ நானும் இவனும் டெஸ்ட் பண்ணப் போறோம். கேக்கிற கேள்விக்கு ‘பளிச், பளிச்’ன்னு பதில் சொல்லணும்...
ச... சரி... ஸார்...
இந்தியாவோட தந்தை யார்?
மகாத்மா காந்தி
இந்தியாவோட அம்மா யாரு?
தெரி... யலை... ஸார்...
இதெல்லாம் தெரிஞ்சுக்காம எதுக்காக கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க வர்றே? சரி, அடுத்த கேள்விக்காவது யோசிச்சு பதில் சொல்லு... பனியனை உள்ளே போட்டு அதுக்கு மேலே நாம சர்ட்டைப் போட்டுக்கறோம். ஏன் சர்ட்டை உள்ளே போட்டுக்கிட்டு பனியனை மேலே போட்டுக்கக்கூடாது?
புது மாணவன் விழித்தான்.
சொல்லுடா...
தெ... தெரியலை... ஸார்.
இதெல்லாம் தெரிஞ்சுக்காமே ஏன்டா கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க வர்றே...! சர்ட்டை உள்ளே போட்டு பனியனை மேலே போட்டுக்கிட்டா பாக்கிறவங்களுக்கு அசிங்கமா இருக்குண்டா... தெரியுதா...
தெரியுது ஸார்...
உனக்கு சாமியாடத் தெரியுமா?
தெரியாது ஸார்...
சிகரெட் குடிப்பியா...?
பழக்கமில்லை ஸார்...
எந்தப் பொண்ணையாவது சைட் அடிச்சிருக்கியா...?
இல்ல ஸார்...
பின்னே எதுக்காகடா இவ்வளவு பெரிய உடம்பை வளர்த்து வெச்சிருக்கே... தினமும் எந்த பிளேடால் ஷேவ் பண்றே...?
செவன்-ஓ-கிளாக்.
இனிமே செவனோ கிளாக் பிளேடிலே ஷேவ் பண்ணாதே. பைவ்-ஓ-கிளாக் பிளேட்லேதான் பண்ணணும்.
சரி... ஸார்...
என்னடா சரி... அப்படியொரு பிளேடே இல்லாதபோது நீ எப்படி ஷேவ் பண்ணுவே...?
மாணவன் விழித்தான். கண்கள் கலங்கிப் போய் நீர் முட்டிக்கொண்டு நின்றது. இன்னும் இரண்டு சீனியர் மாணவர்கள் சேர்ந்துகொள்ளவே ராகிங் சூடு பிடித்தது.
அம்பிகா-ராதாவோட அம்மா பேரென்ன?
"தெரியலை ஸார்...
இதெல்லாம் தெரிஞ்சுக்காமே... எதுக்குடா... கம்ப்யூட்டரிங் சயன்ஸ் படிக்க வந்தே...!
தப்புதான் ஸார்... நாளைக்கு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன் ஸார்...
"சரி இந்நேரம் தியரி பார்த்தோம்... இப்போ ஒரு பிராக்டிகல் கொஸ்டியன்... அதோ எதிர்த்த சைட்ல - பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருக்கா தெரியுதா?
"தெரியுது ஸார்...
அந்தப் பொண்ணுக்கிட்டே போய்... ஜாக்கெட்டுக்கு எவ்வளவு சென்டிமீட்டர் துணி எடுக்கிறான்னு கேட்டுட்டு வா...
அந்த ரமேஷ் தயங்கினான்.
ம்... போடா... போய் கேட்டுட்டு வாடா...
ஸ... ஸார்... ஸ... ஸார்... பயம்மாயிருக்கு ஸார்...
என்னடா... பயம்...? நாட்டுக்கு தேவையான ஒரு முக்கியமான ந்யூஸை தெரிஞ்சுக்கிட்டு வர்றதுக்காக நீ போயிட்டிருக்கே... தைரியமா போய் கேளுடா...
ரமேஷ் நகர்ந்தான்.
வைசாலி தன் மணிக்கட்டில் வெளிச்சமாய் மினுமினுத்த சிட்டிஸன் குவார்ட்ஸில் பார்வையைப் பதித்துவிட்டு - பஸ் வருகிறதாவென்று திரும்பிப் பார்த்தாள்.
பஸ்ஸின் அலுமினிய முகம் தெரியாமல் போகவே லேசாய் சோர்ந்து முணுமுணுத்தாள். "பாழாப்போற