நேற்று நரகம்; இன்று சொர்க்கம்!
By Rajeshkumar
()
About this ebook
ஹைதராபாத்.
கோட்டி போலீஸ் ஸ்டேஷன்.
குருதேவ் அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் ஜீப்பை ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைய, பக்கோடாவைத் தின்றுவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மல்லையா அரக்கப் பரக்க எழுந்து சல்யூட் வைத்தார்.
"ஸ... ஸார்..."
ஏ.சி. குருதேவ் தெலுங்கில் கேட்டார்.
"என்னய்யா... ஸ்டேஷன்ல ஒருத்தரையும் காணோம்...?"
"எஸ்.ஐ. தலைமையில் ரெய்டு போயிருக்காங்க ஸார்..."
"நல்லதா போச்சு... ஸ்டேஷன்ல யாராவது லாக்கப் கைதிகள் இருக்காங்களா...?"
"ஒரே ஒரு பிக்பாக்கெட் பேர்வழி மட்டும் உள்ளே படுத்து தூங்கிட்டிருக்கான் ஸார்..."
ஏ.சி. நாற்காலியொன்றை இழுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். "நீயும் உட்கார்ய்யா..."
மல்லையா பாதி டீ டம்ளரை மேஜைக்கு கீழே வைத்துவிட்டு நுனி நாற்காலியில் உட்கார்ந்தார். ஏ.சி. குரலை தாழ்த்திக் கொண்டார்யோவ்...! நான் இப்போ சொல்லப் போகிற விஷயம் ஒரு ஆஃப் த ரிகார்ட் மேட்டர். கவனமா பார்த்து செய்யணும்..."
"சொல்லுங்க ஸார்..."
"மொதல்ல இந்த லெட்டரைப் படி..." ஏ.சி. ஒரு கடிதக் கவரை எடுத்துக் கொடுக்க மல்லையா அதை பயபக்தியோடு வாங்கிப் பிரித்தார். தெலுங்கில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை படிக்க ஆரம்பித்தார்.
என் இதயத்தில் இடம் பிடித்துக் கொண்ட என் இனிய ஸ்ரேயாவுக்கு,
உன் கல்யாண் எழுதிக் கொண்டது. உனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருப்பதாய் நேற்று நீ டெலிபோனில் சொன்னதிலிருந்து என்னுடைய கண்கள் தூக்கத்தை மறந்து விட்டன. என்னுடைய வயிறு பசியை மறந்து விட்டது. உன்னுடைய அப்பாவும் அம்மாவும் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பது அவர்களுடைய கடமை. அந்தக் கடமையை அவர்கள் செய்யட்டும். நீ அதைப் பார்த்து பயந்து விடாதே! அவர்கள் ஆயிரம் மாப்பிள்ளைகள் பார்த்தாலும் சரி; உன்னுடைய கழுத்தில் தாலி கட்டப் போகிறவன் நான்தான். நம் காதலுக்கு இப்படிப்பட்ட இடையூறுகள் வரும் என்று நாம் காதலிக்க ஆரம்பித்த நிமிஷத்தில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த இடையூறுகள் எல்லாம் சோப்பு நீர்க் குமிழ்கள் போன்றது. நான் இருக்கும்போது நீ யார்க்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டியதே இல்லை. உன்னுடைய அப்பாவின் பணமும், அந்தஸ்தும் நம்முடைய காதலுக்கு குறுக்கே வரத்தான் செய்யும். அவைகளை எதிர்கொள்ள நாம் பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர்தான் துணிச்சல். கடைசி வரைக்கும் துணிச்சல் என்ற ஆயுதம் நம் கைகளில் இருந்தால் அந்தஸ்து என்ற அரக்கன் நம் பக்கத்தில்கூட வரமாட்டான். நீ இப்போது வீட்டில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காதே...! உன் பெற்றோர்களுக்கு கட்டுப்படுவது போல் நடித்துக் கொண்டிரு. சமயம் பார்த்து நாம் சந்திப்போம்.
Read more from Rajeshkumar
நயாகரா புயல்...! Rating: 0 out of 5 stars0 ratingsமெழுகுவத்திகள் Rating: 0 out of 5 stars0 ratingsபோகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை Rating: 0 out of 5 stars0 ratingsஅரை விநாடி அநியாயம் Rating: 0 out of 5 stars0 ratingsநான் நளினா நள்ளிரவு Rating: 0 out of 5 stars0 ratingsகாதலுக்கு கண் இருக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஇப்படிக்கு இறந்துபோன ரமா! Rating: 0 out of 5 stars0 ratingsரோஜா முள் துரோகம்! Rating: 0 out of 5 stars0 ratingsஉயிர் எடுப்பான் தோழன் Rating: 0 out of 5 stars0 ratingsகண்களில் எத்தனை கள்ளமடி Rating: 0 out of 5 stars0 ratingsவிவேக் வான்ட்டட்! Rating: 0 out of 5 stars0 ratingsகரைக்கு வராத அலைகள் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னைக் கொலையாவது செய் கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsமேனகாவின் மே மாதம்! Rating: 0 out of 5 stars0 ratingsஷீலா சிம்லா சிறிது ரத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsநான் கொல்லுவதெல்லாம் பெண்மை Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கிருந்தோ ஆசைகள்! Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு தாரணி தப்பு Rating: 0 out of 5 stars0 ratingsபணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் ஒரு ஆச்சர்யக்குறி Rating: 0 out of 5 stars0 ratingsகாவ்யாவின் கறுப்பு தினங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாமூச்சி! Rating: 0 out of 5 stars0 ratingsநீலம் என்பது நிறமல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsமதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னுடைய ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஎதிரிகள் தேவை Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பூ பூத்தது Rating: 0 out of 5 stars0 ratingsஇன்றே காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு நவம்பர் Rating: 0 out of 5 stars0 ratings
Related to நேற்று நரகம்; இன்று சொர்க்கம்!
Related ebooks
Netru Naragam Indru Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsSorry Wrong Number Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsBullet Chamber Rating: 0 out of 5 stars0 ratingsபுல்லட் சேம்பர் Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Viral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Inaintha Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravai! Rating: 0 out of 5 stars0 ratingsKolai Sei Kadhala Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Sikkiya Minnal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNadamaattam Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Thevathai Rating: 5 out of 5 stars5/5Pon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsIruttai Thedi Rating: 5 out of 5 stars5/5இருட்டைத் தேடி! Rating: 0 out of 5 stars0 ratingsகலையும் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsKalaiyum Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsPoothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsமிஸ். பாரதமாதா Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for நேற்று நரகம்; இன்று சொர்க்கம்!
0 ratings0 reviews
Book preview
நேற்று நரகம்; இன்று சொர்க்கம்! - Rajeshkumar
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பீகாய்ஜி ருஸ்தாம்ஜி.
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்த அங்கயற்கண்ணி மணி எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் 12.40. இனியும் கண் விழித்தால் நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு எழும்போது கண்கள் தூக்கத்துக்காக கெஞ்சும். படுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று யோசித்த விநாடி-
அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
அங்கயற்கண்ணியின் புருவங்கள் உயர்ந்தன. குரல் கொடுத்தாள்.
யாரு...?
நான்தான் மேடம்... காஞ்சனா...
கதவுக்கு வெளியேயிருந்து பதட்டமாய் குரல் வரவும் அங்கயற்கண்ணி எழுந்து போய் கதவின் தாழ்ப்பாளை விலக்கினாள்.
வெளியே அந்த அழகான காஞ்சனா வியர்த்த முகமாய் தெரிந்தாள். உடம்பில் பதட்டம்.
என்ன...?
மேடம்...! ‘இந்துபாலா’வுக்கு மறுபடியும் உடம்புக்கு முடியலை. ஃபிட்ஸ் வந்த மாதிரி உடம்பு தூக்கி தூக்கிப் போட்டது. ‘நான் வரமாட்டேன், நான் வரமாட்டேன்’னு கத்திக்கிட்டே ரூம் மூலையில் போய் முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்துட்டா. அங்கிருந்து அவளை எழுப்ப முடியலை. நீங்க வந்து கொஞ்சம் பாருங்க மேடம்...
டாக்டர் கொடுத்த மருந்துகளையெல்லாம் இந்துபாலா ஒழுங்கா சாப்பிட்டாளா...?
சாப்பிட்டா மேடம்... ரெண்டு ராத்திரி ஒழுங்கா தூங்கி எந்திரிச்சா. இன்னிக்கு சரியா பனிரெண்டு மணிக்கெல்லாம் தூக்கத்துல ஏதோ உளற ஆரம்பிச்சா. அப்புறம் உடம்பை ஒரு மாதிரி முறுக்கிக்கிட்டு உருண்டா. உருளும்போதே ஃபிட்ஸ் வந்தது. இந்தத் தடவை வாய்ல நுரை வரும்போது அதுல ரத்தமும் கலந்து இருந்தது மேடம்...
காஞ்சனா சொல்ல அங்கயற்கண்ணி திடுக்கிட்டாள்.
என்னது... ரத்தமா?
ஆமா... மேடம்...
அப்படீன்னா... டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதான்...
சொன்னவள் மேஜையின் மேல் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டபடி அறையினின்றும் வெளிப்பட்டு வராந்தாவின் மெல்லிய இருட்டில் நடந்தாள். காப்பகத்தின் எல்லா அறைகளும் இருட்டில் இருக்க, வலது கோடியில் இருந்த அறை மட்டும் ட்யூப்லைட் வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது.
அங்கயற்கண்ணி வேகமாய் நடை போட்டு அறைக்குள் நுழைய, அந்த அழகான இருபது வயது இந்துபாலா யார்க்கோ பயந்த மாதிரி அறையின் மூலையில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கண்கள் மிரட்சியோடு அலைபாய்ந்தது. உதட்டோரம் இன்னமும் வலிப்பு நுரை ஒட்டியிருந்தது.
அவளுக்குப் பக்கத்தில் போய் குனிந்தாள் அங்கயற்கண்ணி. மெல்ல இந்துபாலாவின் தோளைத் தொட்டாள். அவள் உடம்பை சிலிர்த்துக் கொண்டு இன்னமும் பின்வாங்கி சுவர்க்கு சாய்ந்தாள். இரண்டு கைகளையும் வேகமாய் ஆட்டிக் கொண்டு கெஞ்சும் குரலில் சொன்னாள்.
மே... மேடம்... வேண்டாம் மேடம்... என்னை அவங்ககூட அனுப்பிடாதீங்க மேடம்... ப்ளீஸ் மேடம்... அவங்களை மொதல்ல இந்த இடத்தை விட்டு போகச் சொல்லுங்க... மேடம்...
இதோ பாரம்மா... இந்து...! ஏன் இப்படி பயப்படறே...? இங்கே உன்னையும் என்னையும் காஞ்சனாவையும் தவிர வேறு யாருமில்லை...
இல்ல மேடம்...! அவங்க வெளியே விடுதி வாசல்ல காரோட வந்து நிக்கிறாங்க... நாலைஞ்சு தடவை ஹார்ன் அடிச்சு கூப்பிட்டாங்க...
வா...! வெளியே வந்து நீயே பாரு... விடுதி வாசலில் யாருமேயில்லை... நீ அநாவசியத்துக்கு பயப்படறே இந்து...! ம்... வா...! வாசலுக்கு வந்து பாரு...
நா... நான்... வரலை மேடம்... நான் வந்தா என்னைத் தூக்கி கார்ல போட்டுக்கிட்டு போயிடுவாங்க மேடம்...
இந்து...! எல்லாம் உன்னோட பிரமை...! நானும் காஞ்சனாவும் உன்கூடவே வாசலுக்கு வர்றோம். அங்கே நீ நினைக்கிற மாதிரி யாரும் இல்லைங்கிறது உண்மை...
அங்கயற்கண்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்துபாலா கண்கள் நிலைத்துப் போய் ஒருக்களித்து விழுந்தாள். உடம்பு வெட்டிக் கொண்டது. வாயில் நுரை தள்ளியது. கூடவே சில துளிகள் ரத்தம்.
காஞ்சனா பதறிப் போய் இந்துபாலாவைப் பிடித்துக் கொள்ள, அங்கயற்கண்ணி தன் கையில் இருந்த செல்போனை உசுப்பி டயலில் சில எண்களை ஒற்றி எடுத்துவிட்டு காதுக்குப் பொருத்தினாள்.
மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது.
ஹலோ...
டாக்டர் மதுசூதனன்...?
எஸ்... ஹோல்டிங்...
டாக்டர்! நான் அங்கயற்கண்ணி. ‘தாய் உள்ளம்’ விடுதி காப்பாளர் பேசறேன்...
ஓ...! நீங்களா... என்ன விஷயம் சொல்லுங்கம்மா...
டாக்டர்...! ஸாரி... ஃபார் த டிஸ்டர்பன்ஸ்... நீங்க உடனே புறப்பட்டு விடுதிக்கு வரணும்...
யார்க்கு என்ன உடம்பு?
டாக்டர்! நீங்க போன வாரம் வந்து பார்த்தீங்களே... இந்துபாலான்னு ஒரு பொண்ணு...
ஆமா...