Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharathi Pottri Aayiram - Part 2
Bharathi Pottri Aayiram - Part 2
Bharathi Pottri Aayiram - Part 2
Ebook127 pages31 minutes

Bharathi Pottri Aayiram - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக 51 கவிஞர்கள் இயற்றியுள்ள ஓராயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் 2 கவிஞர்கள் பாடிய 324 பாடல்கள் இடம் பெறுகின்றன. அருட் கவிஞர் அ. காசி மற்றும் கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் ஆகியோரது கவிதைகளை இந்த பாகத்தில் காணலாம். கவிஞர்களைப் பற்றிய அறிமுகமும் நூலில் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் கவிதையில் உள்ள நுட்பமான விஷயங்களை இந்தக் கவிதைகளில் காணலாம். அத்தோடு கவிஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அறியலாம். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய கவிதைகள் இவை. அனைவருக்கும் பரிசாகக் கொடுக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580151011070
Bharathi Pottri Aayiram - Part 2

Read more from S. Nagarajan

Related to Bharathi Pottri Aayiram - Part 2

Related ebooks

Reviews for Bharathi Pottri Aayiram - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharathi Pottri Aayiram - Part 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாரதி போற்றி ஆயிரம் - பாகம் 2

    Bharathi Pottri Aayiram - Part 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    பகுதி 43

    பகுதி 44

    பகுதி 45

    பகுதி 46

    பகுதி 47

    பகுதி 48

    பகுதி 49

    பகுதி 50

    பகுதி 51

    பகுதி 52

    பகுதி 53

    பகுதி 54

    பகுதி 55

    பகுதி 56

    பகுதி 57

    பகுதி 58

    பகுதி 59

    பகுதி 60

    பகுதி 61

    பகுதி 62

    பகுதி 63

    பகுதி 64

    பகுதி 65

    பகுதி 66

    பகுதி 67

    பகுதி 68

    பகுதி 69

    பகுதி 70

    பிற்சேர்க்கை

    கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்

    முன்னுரை

    என்னுடைய குடும்பமே பாரதி பற்றுடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.

    எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் பாரதியார் பாடல்களை ஜெயபாரதியில் வெளியிட்டு பாரதியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்.

    அவர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடும் போது பிரமித்துப் போய் மெய்மறந்து அதைக் கேட்போம். எனது சகோதரர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டவர்கள்.

    அடுத்து சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி.ஜி. சீனிவாசன் சிறந்த பாரதி பக்தர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எங்களை பாரதியார் வழியில் நன்கு ஊக்குவித்தவர்.

    ஆக இயல்பாகவே பாரதியாரைப் போற்றியவர்களை நாங்கள் போற்றி வந்தோம். இந்த வகையில் பாரதியாரைப் போற்றி வெளிவரும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்பொழுது படித்து இவற்றைத் தொகுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவ்வப்பொழுது என் மனதில் எழுவதுண்டு.

    மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)

    அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    (அதிசய மஹாகவி பாரதியார்)

    பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.

    இதனை வெளியிட்ட, www.tamilandvedas.com இணையதளத்தை நடத்தி வரும் திரு ச.சுவாமிநாதனுக்கு எனது நன்றி. பல்வேறு பதிப்பகங்கள், கவிஞர்கள், இணையதளங்கள், ப்ளாக்குகள் அவற்றிற்கான உரிமையாளர்கள் மற்றும் படைப்பாளிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதைத் தொடர்ந்து படித்து ஊக்கமூட்டிய அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

    நூலைத் தொகுப்பதில் நான் பட்ட சிரமங்களை முடிவுரையில் தந்துள்ளேன்.

    இதை வெளியிடுவதில் காபிரைட் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று யோசித்து ஒவ்வொரு பகுதியிலும் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டு வந்தோம்:

    காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

    ஆனால் பல கவிஞர்களும் ஏராளமான அன்பர்களும் இந்த முயற்சியைப் போற்றி வரவேற்றனர். தங்கள் பங்கிற்கு தாங்கள் எழுதி வெளியிட்ட கவிதை நூல்களை அனுப்பி எங்களை பிரமிக்க வைத்தனர்.

    இந்த நூலில் இடம் பெறும் ஏராளமான கவிஞர்களை வெளி உலகம் சரியாக அறிந்து போற்றவில்லை. அவர்களைப் போற்றினால் பாரதி பணி ஆற்றுவதில் சிறந்தவர்களாவோம்.

    பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஆயிரம் கவிதைகளைக் கொண்ட இந்த நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

    முதல் பாகத்தில் 22 கவிஞர்கள் எழுதிய 254 பாடல்கள் இடம் பெற்றன.

    இந்த இரண்டாம் பாகத்தில் இரு கவிஞர்கள் எழுதியுள்ள 324 பாடல்கள் இடம் பெறுகின்றன.

    எனது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள பங்களூர் புஸ்தகா டிஜிடல் மீடியா நிறுவனம் இந்த நூலையும் டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட முன் வந்துள்ளது.

    PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தக்க ஆதரவைத் தந்த அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    பாரதியாரைப் போற்றுவோம்.

    வாழிய பாரதத் திருநாடு!

    பங்களூரு

    ச. நாகராஜன்

    14-4-2024

    ஶ்ரீ குரோதி வருடம் சித்திரை முதல் நாள்

    பகுதி 43

    பாரதி போற்றி ஆயிரம் – 43

    பாடல்கள் 255 முதல் 263

    அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

    மகாகவி பாரதி அந்தாதி

    காப்பு மற்றும் முதல் ஒன்பது பாடல்கள்

    காப்பு

    சகாயமா யிருந்து நமக்கருளும்

    சீல நல்லூர் அனவரதன்

    மகாலய செல்வ விநாயக! நின்

    மலரடி போற்றித் துதிக்கின்றேன்!

    உகாமை பெற்று உயர்சிறப்பு

    ஏற்க இயற்றிய காவியமாம்

    மகாகவி பாரதி அந்தாதி

    மேதினி போற்ற வரந்தருவாய்.

    ***

    இளமைக் கல்வி

    அரசவைப் புலவர் சின்னசாமி - துணைவி

    இலக்குமி அம்மை தவப்பயனாய்

    விரவிய ஆயிரத்து எண்ணூற்று - எண்பத்

    திரண்டு திசம்பர் பதினொன்றில்

    புரட்சிக் கவிஞர் சேயாக - எட்டய

    புரத்தில் பிறப்பெ டுத்தாரே!

    கருவிலே திருவும் பெற்றவராம் - பாரதி

    கண்ணிய சுப்பிர மணியனென்பார்

    மணியெனக் கருவிலே அறிவொளியும் - வீ

    Enjoying the preview?
    Page 1 of 1