Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Manithanin Kathai
Oru Manithanin Kathai
Oru Manithanin Kathai
Ebook52 pages17 minutes

Oru Manithanin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்கப்பலகையில் கணேஷ் பாலா அண்ணா மூன்று படங்களைக்குடுத்து குறுநாவல் எழுதச் சொன்னபோது தெரியாது. தெருவில் இப்படி அனாதையாய் திரியும் மனிதர்களிடம் இப்படி ஒரு கதை இருக்குமென்று. இந்தக் கதையை ஆரம்பித்தது மட்டும் நான் அறிந்து எழுதினேன் அதன்பின் அந்தக் கதையே தன்னைத் தகவமைத்துக் கொண்டது.

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580142211168
Oru Manithanin Kathai

Read more from Lalitha Shankar

Related to Oru Manithanin Kathai

Related ebooks

Related categories

Reviews for Oru Manithanin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Manithanin Kathai - Lalitha Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு மனிதனின் கதை

    Oru Manithanin Kathai

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    பொருளடக்கம்

    ஒரு மனிதனின் கதை -1

    ஒரு மனிதனின் கதை-2

    ஒரு மனிதனின் கதை-3

    ஒரு மனிதனின் கதை-4

    ஒரு மனிதனின் கதை-5

    ஒரு மனிதனின் கதை -1

    காலையில் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே வெந்நீரில் கஞ்சிமாவைக்கலந்து குடித்த பின்னும் பசி வயிற்றைக்கிள்ளியது. அவரின் கண்கள் தன்னையறியாமல் கடிகாரத்தைப்பார்த்தது. மணி மதியம் இரண்டைத்தொட்டுக்கொண்டு நின்றது.

    வரவர இப்பல்லாம் அகோரமா பசிக்குது. முன்னாடியெல்லாம் இப்படி இருந்ததில்லை. இப்ப எனக்கு என்ன ஆச்சு? காலம்போன காலத்துல நாக்கும் வயிறும் என்னை இப்படிப்பாடாய்ப்படுத்துதே! மெல்ல எழுந்தார். சத்தமில்லாமல் அடுப்படியை எட்டிப்பார்த்தார். அடுப்பில் மீன் குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது. ம்ம்ம்!

    முன்பசியை அடக்க நாய்களுக்குப்போடுவதற்காக தான் வாங்கி வைத்திருந்த மேரி பிஸ்கட்டில் ஒன்றை எடுக்க அந்த டப்பாவைத் தேடினார்.

    ஓ! இதை யாரு மேல வெச்சது? எக்கி அவர் எடுக்க முயலவும், மேலிருந்து பெரிதாய் ஒரு மாவு டப்பாவும் சேர்ந்து விழுந்தது.

    ஏங்க! உங்க கண்ணு என்ன பொடனிலயா இருக்கு?

    பாலாஜி! பார்த்தியாடா? உங்க அப்பா பண்ணி இருக்கற கூத்த?

    என்னம்மா என்ன ஆச்சு?

    எனக்கு இருக்கற வேலை போதாதுன்னு, இந்த வேலையையும் சேர்த்து இழுத்து விட்டிருக்கார் பாரு! மாவு மொத்தத்தையும் கொட்டிட்டு நிக்கறதைப்பாரு! ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி! சே! என் தலையெழுத்து. இன்னும் எவ்வளவு நாள் இந்த மனுஷனோட குப்பை கொட்டணுமோ...!

    யோவ்! பார்த்து நடந்துக்கக்கூடாதா? ஏதாவது வேணும்னா எங்களைக்கேக்கறதுதானே! இப்படித்தானா போய்த்தான் நொட்டணுமாக்கும்...! அதன்பின் நாக்கில் நரம்பில்லாமல் அவன் தொடர்ந்து பேசவும்.

    சிவசாமி தலையில் கைவைத்தபடி அமர்ந்துகொண்டார். இனி அவர்கள் குறைந்தது ஒருமணிநேரத்திற்கு ஓயப்போவதில்லை. இன்னிக்கு மாவு கொட்டிச்சு. அப்படியே கொட்டலைன்னாலும் ஏதாவது ஒரு சாக்கு வைத்து எப்படியாவது அவரைக்கொடுக்கு போல கொட்டுவது இங்கு தினசரி நடக்கும் கதைதான்.

    எல்லாத்திட்டும் திட்டி ஓய்ந்து ஒரு மூணுமணிபோல அவரின் தட்டில் கொஞ்சம் போல சோறும், துவையலும் டங்கென்ற ஓசையுடன் வைக்கப்பட்டது. ஐந்துநாள் முன்பு வைத்த பிரண்டைத்துவையல், வாய்க்குள் போட்டதும் ஜிருஜிருவென்று அதைப் பார்த்தாலே அவருக்கு ஒப்புவதில்லை. பிடிக்கலை என்று சொன்னால் இந்தத்துவையலும்

    Enjoying the preview?
    Page 1 of 1