Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalpatharu - 2
Kalpatharu - 2
Kalpatharu - 2
Ebook422 pages2 hours

Kalpatharu - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல… கதாசிரியரின் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580180011211
Kalpatharu - 2

Read more from Dr. M. K. Krishnamoorthy

Related to Kalpatharu - 2

Related ebooks

Reviews for Kalpatharu - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalpatharu - 2 - Dr. M. K. Krishnamoorthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்பதரு – 2

    ‘கிரகஸ்தம்’

    Kalpatharu – 2

    Author:

    Dr. M. K. கிருஷ்ணமூர்த்தி

    Dr. M. K. Krishnamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-m-k-krishnamoorthy

    DR MK KRISHNAMOORTHY

    கல்பதரு-2

    ‘கிரகஸ்தம்’

    (சிறுகதை தொகுப்பு)

    Yatha Drishti, Tatha Srishti!

    சமர்ப்பணம்

    எண்ணும் எழுத்தும் தந்த தந்தைக்கு,

    &

    எண்ணமும் வண்ணமும் ஊட்டிய தாய்க்கு.

    பொருளடக்கம்

    PREFACE

    என்னுரை:

    இடைநிலை ஆசிரியராக

    1) நீறு பூத்த நெருப்பு

    2) என்றும் குந்தி...

    3) புரியாத புதிர்

    4) அக்கரைச் சிவப்பு

    5) தீக்குளி

    6) பற்றுக்கோல்

    7) மண்ணின் மணம்

    8) நீ மாறிட்டடா சோமு

    9) செங்கோல்

    10) அந்தர்யாத்ரா

    11) அந்தர்யாமி

    12) மத்தளத்துக்கு இரண்டு பக்கம்

    முதுநிலை ஆசிரியராக

    1) குருதட்சனை

    2) காலம் கடந்தாவது...

    3) இறுதிச் சுற்று...

    4) யாதும் ஊரே யாவரும் கேளிர்...

    5) வழித் தெரிந்தாலும் பிள்ளையார்

    6) விபத்து

    7) சீமாட்டுக் கூலி

    8) பகடைக் காய்கள்

    9) நீ என்னை தொடாதே

    10) ஆனால் ஒரு நிபந்தனை

    11) யதா யதா ஹி...

    12) பாலைவனச் சோலை

    பள்ளி முதல்வராக

    1) இந்த உறவுக்கு பெயர் என்ன?

    2) என்று தனியும் இந்த தாகம்?

    3) தீக்கனல்

    4) அலை ஓசை

    5) யாமிருக்க பயமேன்?

    6) ஆணிவேர் ஆகாயத்தில்

    7) ஏர்வையான படையல்...

    8) கூத்தாடி

    9) அசுர வித்து

    10) எதிர்பாரா சந்திப்பு

    11) வாய்மையே வெல்லும்

    12) ஜுகல்பந்தி

    PREFACE

    HI(S)TORY!

    His is a history of rags to riches story. He was born in a village and brought up in a coffee estate. He toiled as a labourer, battled against the apparition of poverty and allowed his dreams soar high. If it is fire that tests steel, the young ten year old must have already become a man. His schooling started in 1960 from class V..., lived in a hut, collected firewood, fetched water, cooked food, walked bare footed to school, studied under the dim light of street lamps, never had even two square meals a day…but he aced all his exams and games.

    He passioned for becoming a doctor but God had nobler things for him in store. For two years he had to discontinue his studies and juggled the roles of labourer, airman, teacher and overseer. Destiny through Dr. U. R. Ananthamurthy (the Gyanpeed Awardee Teacher) brought him to RCE, Mysore where amazingly he opted for the subject which was his weakest spot, English. He excelled there in academics, literature, theatre, editing, sketching and sports. But once again he became a labourer as he could neither muster the cash for theatre nor master the art for others.

    A clarion call from KVS in 1975 took him to North East as a primary teacher and eventually became principal in 1995. The profession has brought out the best in him. The response his students gave him made it evident that he is in this world to brighten the future of humanity. His motto being ‘I Dare... Orchid or Kid, I Care’ heralded many innovations in education and has ‘trodden untrodden path’ with a zeal to make the mass of dust into nebula of a new star.

    Golden opportunities slid through his hands inexorably, not because of the lack of mettle but because of several perfidious plans of vested interests. Scandals, conspiracies and controversies – things which would have made lesser mortals question their own survival, only strengthened his resolute to live and with dignity. God has always helped him in his mission to prove ‘Truth too Triumphs’. I wonder how many other teachers can be such fountain heads of forethought and optimism after being pushed to the limits he has been!

    His idol happens to be Mr. E. R. Braithwaite. Following that exemplary teacher, he strove to metamorphose many deadly caterpillars into breath – taking butterflies. His forte is the domain of juvenile delinquents – he calls them affectionately ‘The Thunderbolts’ and makes them assets to the nation. He has always been a strict disciplinarian and stickler for perfection but with full of compassion. And that’s why he has made indelible differences in so many lives. Countless prayers flow in for him, tearing the barriers of regions, religions… which he acknowledges, ‘Your blessings are the wind beneath my wings’.

    He is a prolific writer (so far eight books) and a polyglot too (so far seven languages). God has blessed him with so many laurels, amongst other honours NCERT Award, KVS Eminent Teacher Award, G. N. Bordoloi Award and National Award from the President of India (1995).

    He ignited the eternity with his sterling attitude…I aspire to inherit his fortitude. He may not be a global icon yet. But to millions of his students, he is more than one. To me he is an unsung legend. What makes me the proudest is that he is my father.

    SRISHTI KRISHNAMOORTHY

    (Extracts from Srishti’s article which won her a Commendation certificate from Commonwealth Essay writing Competition in class X--2004)

    என்னுரை:

    முறைசார் கல்வி முற்றுகையின் வகுப்பறை சிறையில் அடைக்கப்படாமல், பத்தாண்டு கால நீண்ட பிள்ளைப்பருவத்தில், சுதந்திரப் பறவையாய் சிறகு விரித்து காட்டில் மேட்டில் பறந்து, திறந்தவெளி நடைமுறைக் கல்வியைப் பெறும் பெரும் வரம் பெற்றேன்!

    என் படிக்காத பாமரத் தாய், பாலூட்டியக் காலம் போக… ஈராண்டு கீழைச் சமவெளி வயக்காடுகளிலும் ஐந்தாண்டு மேலை மலைத்தொடர் காஃபித் தோட்டங்களிலும், பகல் முழுதும் உழைத்து களைத்து மீண்டு நள்ளிரவு வரை ராமாயண மகாபாரத கதைகளை என்னுள் விதைத்து நெறியாளன் ஆக்கினார்; அரைகுறை படிப்பு படித்த என் தந்தை, எண்ணையும் எழுத்தையும் என் இரு கண்களாக்கி சிறந்த படிப்பாளியாக்கினார்; முன்னிரவில் கூலித்தொழிலாளி தாய்மார்கள் தம் வீட்டு வேலைகளை முடித்து எம் குடிலின் முன் குழுமி வெற்றிலை பாக்கை குதப்பி சிம்னி விளக்கில் என்னை கதைப் புத்தகங்களை படிக்க செய்து, சுற்றிலும் அமர்ந்து ஈடுபாடுடன் கேட்டு... இருப்பதை படித்து இல்லாததை கூட்டி சேர்த்து குரலை உயர்த்தி தாழ்த்தி எல்லாரையும் வசப்படுத்திய என்னை, கதைக்காரன் ஆக்கினர்!

    பள்ளியில் ஒரு சிறு கருவாய் குருகுருத்து கல்லூரியில் ஒரு திருவாய் உருபெற்ற ‘நட்பா தியாகமா?’ என்ற என் முதல் சிறுகதை கதையாவது கத்தரிக்காயாவது! எனவும், ஒரு பரிசோதனை பயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஒரு வாரம் ஏழு நாட்கள்’ என்ற என் முதல் புதினம் நாவலாவது பொடலங்காயாவது! எனவும், என் ‘கல்வியில்’ உண்மையாய் நாட்டம் கொண்ட தமிழ்பேராசிரியரால் பெரிதாய் சிறுமைப் படுத்தப்பட; ‘FLASH’ என்னும் மாதாந்திர ஆங்கில இலக்கிய இதழின் ஆசிரியாரான ஒரு பிரபல மூத்த மாணவரை நான் அணுக, தமிழிலா, யார் படிப்பர்? ஆங்கிலத்தில் எழுத இயலாதோ! என எள்ளி நகையாடி ஏளனப்படுத்த... ‘அரும்பு’ என்ற தமிழ் கைப்பிரதி மாத இலக்கிய இதழைப் பூத்து, பலரையும் எழுதச் செய்து நானும் தொடர்ந்து எழுதி மணம் பெற்றேன்...இப்படியாக முறைசார் கல்வியின் முட்டும் தட்டும் ஏணியாகி என்னை கதாசிரியனாக்கின!

    இயல்பு கல்வி பெரும் முன் பெற்ற பின், பணியில் சேரும் முன் சேர்ந்த பின், காதல் கல்யாணம் இல்வாழ்க்கை இல்லாவாழ்க்கை நரைதிரைமூப்பு... என எல்லா காலகட்டங்களும் தொடர் எதிர்நீச்சல் வாழ்க்கையாகி, நிறைய நெருடல்களை நெகிழ்வுகளை அனுபவங்களை படிப்பினைகளை தந்தன. அவைகள் அவ்வப்போது என் படைப்புகள் ஆயின. தோழர் தோழியர் அன்றும் இன்றும் என் கதைகளை படித்து போற்றி புகழ்ந்து துணையாக, கருத்து தெரிந்த காலம் முதல் மகள் சிருஷ்டி என் வாழ்க்கை கதையை கேட்டு உள்வாங்கி கண்டு வியந்து ஊக்கமாக...நான் எழுதுவதை தொடர்கின்றேன், மகிழ்ந்து.

    என் படைப்புகள்...

    இவைகள் முழுதும் கற்பனை கதைகள் அன்று, அதே நேரத்தில் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியும் அன்று. என் சத்யபோராட்ட வாழ்க்கையில் நான் சந்தித்த பாத்திரங்களும், எதிர்கொண்ட அனுபவங்களும் என் கற்பனையில் பரிணாம மறுமலர்ச்சி அடைகின்றன என்பதுதான் சத்தியம். ஒளியும் தடையும் சேர்ந்து உருவத்துக்கு நிழலை உருவாக்குதல் போல, உண்மைகளும் என் கற்பனையும் சேர்ந்து என் கதைகளாகின்றன. ஆக இது நிழலே நிஜமன்று, எனவே இதில் எது உயர்ந்தது என்ற சர்ச்சை தேவையில்லை. ஒன்று மட்டும் மறுக்க முடியா உண்மை... ஓரளவு எல்லா படைப்புகளிலும், நேரிடையாகவோ மறைமுகமாகவோ நான் வசிக்கிறேன்!

    இவைகள் வெற்று வேதாந்தத்திற்காகவும் வெறும் விளம்பர மோகத்திற்காகவும் பிறந்ததல்ல, அவைகள் உண்மையான மனிதனின் மனதில் அழுந்திக் கிடக்கும் நேர்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடே.

    சமூகத்தின் பெரும் சக்தி அல்ல அதன் ஜீவ ஓட்டம், தனி ஒரு மனத்தின் மென்மையான சிறிய உணர்வுதான் அதன் வளர்ப்பு சக்தி. எனவே அது ஏதாவது ஒரு உள்ளத்தின் ஒரு சிறிய மூலையில் ஒரு சிறிய உணர்வை அசைத்தாலே போதும்.

    இவைகள் புரட்சி கருத்துகளின் சங்கமம் அன்று, புரட்டி எடுத்த வாழ்க்கை போதித்த உண்மைகளின் புகலிடமே.

    இவைகள், கதைகளின் போர்வையில் ‘வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும்’ என்ற உபதேசங்கள் அல்ல, மாறாய் ‘வாழ்க்கை இப்படித்தான் உள்ளது’ என்ற எளிய தத்துவங்களின் உறைவிடமே.

    இவைகளில் என் மனம் கவர்ந்த ஆங்கிலக் கவிஞன் Robert Browning-ன் Dramatic Monologue இலக்கணமாய் அமைய, என் கதை நாயகர்களின் மனதில் முன்னும் பின்னும் பயணித்து ஒரு புது உலகை சிருஷ்டித்துள்ளேன்.

    ...கோலம் அழகாய் இல்லை என்றால் அது மாவின் குறையோ, தரையின் குறைபாடோ, ஏன் போட்டவரின் குற்றமோ கூட அல்ல. குறை அனுபவமே அதன் காரணம்...அது நிறையாகலாம். பூசை அறை வண்ணக்கோலம் கலையாமல் அப்படியே இருக்கும், ஆனால் வீதியில் போட்ட கோலம் பலர் கண்களின் அழகாகி கால்களின் அடியில் அழிதலில்தான் மகிமை. கன்னியின் தெய்வீகம் தாய்மையில், என் மகிழ்வு என் கதைகள் பலரால் அலசுதலில்!

    காலம்தான் எவ்வளவு விரைவில் பறக்கின்றது...மேற்குமலைத்தொடர் குடகு காட்டில் இயற்கையோடு இழைந்த குழந்தைக்காலம், கீழைச்சமவெளி தமிழக வயலூரில் செயற்கை கல்வி கற்ற பள்ளிப்பருவம், மருத்துவ படிப்பு கானல் நீராக ஈராண்டு அக்யாதவாசம், மீண்ட சொர்க்கமாய் இழந்த கல்வி வாலிபத்தின் வசந்தமான இறையருள், வேலையில்லா திண்டாட்டத்தில் விரிசலான உறவுகள், தேடிவந்த வேலையும் சத்யபோராட்டமும், நாடோடி வாழ்க்கையின் நங்கூரமான மனைவி மகள்...எல்லாம் மனதில் நிரந்தர நினைவுகளாய், பெருமையாய்!

    முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல…என் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!

    சில கதைகள் அக்காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சியில் நிறைய நேயர்களை மகிழ்வித்தன. சில கதைகள் துணைவி Bharati மூலம் அஸ்ஸாமியிலும், பல கதைகள் நண்பர் Dr Akilesh Kumar Goswami மூலம் இந்தியிலும், என் குறும் புதினம் தம்பி Dr Haricharan Shenoy மூலம் கன்னடத்திலும், தமக்கை Chini Champa Mahanta மூலம் அஸ்ஸாமியிலும், தங்கை Prasanna S Pillai மூலம் மலையாளத்திலும்...மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின. மகள் Srishti ஆங்கிலத்தில் முயல்கின்றார். தமிழறியா இச்சான்றோர்க்கு என் பன்மொழி சிற்றறிவு பெரிதும் உதவியாய் இருந்தமைக்கு மகிழ்கிறேன்.

    இப்படி சில அண்டைய மொழிகளில் பலரையும் பரவசப்படுத்திய என் தமிழ் படைப்புகள், தாய்மொழியில் மட்டும் பதிப்பாக ஏக்கம் பெரும் தாக்கத்தை தந்த நிலையில்தான்...தம்பி ஜெகன் வலைப்பதிவிலும், தோழர் கவிஞர் சந்தர் வழிவகை தந்தும், முனைவர் ராஜேஷ் புத்தகங்களாக பதிப்பித்தும் உலகறியச் செய்கின்றனர்.

    மனமார்ந்த நன்றி அனைவருக்கும்.

    Dr MK கிருஷ்ணமூர்த்தி

    1) நீறு பூத்த நெருப்பு

    விண்ணில் உயர உயர எழுந்து விரைந்து பறக்கின்றது விமானம். குழந்தைகட்கு எல்லையிலா குதூகலம். அவரோ சாமியாராய் கண்மூடி, உறங்கிவிட்டார் போலுள்ளது. பசிய வயல்களின் காடுகளின் இடையில் வளைந்தோடும் நதிகள் நாளங்களாய் நரம்புகளாய், பள்ளத்தாக்குகளும் மலைகளும் வித்தியாச வேறுபாடின்றி ஒரே சமமாய், அங்குமிங்கும் பூஞ்சைக்காளான் கும்பலாய் ஊர்களும், படர்தாமரைச் சொறியாய் நகர்களும்... ஓ எல்லாம் மறைகின்றன, பஞ்சுப்பொதிகளாய் மேகங்கள், கண்ணாடியில் முட்டி முத்தம் தந்து இன்னும் உயர உயர... அதோ, மேகங்களும் தாழ்ந்து தாழ்ந்து... எங்கும் வெண் பொங்களாய், பஞ்சு மலைகளாய் திரண்டுருண்ட வெண் மேகக் கூட்டங்கள். கண் எட்டும் தூரம் வரை வெண்மேகம். வெண்மேகம், மண்ணிலிருந்து விண்ணைப் பார்க்கையில் கருமேகத்திற்கு வெண்கீற்று விளிம்புகள்... இதோ விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கையில் வெண்மேகத்திற்கு கரும் கோட்டு விளிம்புகள், அட என்ன இது...? விமானம் மேகத்தில் பறக்காமல் ஒரே இடத்தில் மிதப்பது போன்ற, முன் நோக்கிச் செல்லாமல் இராசாளிப் பறவையாய் ஒரே இடத்தில் நிற்பது போன்ற பிரமை! குழந்தைகள் அசைவின்றி செயற்கையின் வெற்றியால் பறவைகளாய்ப் பறக்கின்றனர். உச்சியிலிருந்து மண்ணில் வீழினும் அச்சமில்லை என்ற அந்தாதி கடந்த மோன நிலையில் அவர் கண்மூடி புத்தனாய்... வண்ணத்துப்பூச்சிகளாய் விமானப் பணிப்பெண்கள் வளையம் வருகின்றனர். எல்லாம் அசைவற்ற நிலையில், என் கண்கள் அவரின் மீது பதிந்து நினைவுகள் பறக்கின்றன காலத்தின் பின்னோக்கி...

    நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் இவரை கணவராய் அடைய. ஏழு ஆண்டுகள் என்ன மாயமாய் மறைந்துவிட்டன. கண்ணியம், பொறுமை, நேர்மை, திறமை... இவருக்கு நிகர் இவரே! இத்துனை ஆண்டுகள் வாழ்வில் ஒருநாளாவது ‘சீ’ என்று ஒருவார்த்தை கூறி இருப்பாரா? பேர் சொல்லிகூட இதுவரை கூப்பிட்டது கிடையாதே. ‘குழந்த’... வாஞ்சையில் எப்போதும் அவர் எனை அழைக்கும் பாசம் நிறைந்த வார்த்தை… தந்தைக்கு மகள் மீதுள்ள பாசத்தைவிட, தெய்வத்திற்கு பச்சிளம் குழந்தையிடம் உள்ள உறவைவிட... உயர்ந்த ஏதோ ஒன்று நளினமாய் அதில்.

    நான் எவ்வளவு அறிவீலியாய் இருந்துள்ளேன். வெளுத்ததெல்லாம் பால், இருண்டதெல்லாம் பேய் என்று வாழ்ந்த பேதமை. அசட்டுக குழந்தையாய் அடங்காப் பிடாரியாய் என்னென்ன செய்தேன். எல்லாவற்றையும் எப்படி இவரால் பொறுத்துக் கொள்ள முடிந்தது? மூத்த மகன் ஆறு ஆண்டுகட்கு முன் பிறந்தபோது... குழந்தையை கொஞ்சுவதை விட என்னிடம் வந்து ‘குழந்த, உடம்பு அதிகமாய் வலித்ததா...?’ என்று என்ன இதமாய் கேட்டு மருந்தானார். வலி எல்லாம் பறந்தது. என் மனதுள் இருந்த இருள் எல்லாம் மறைந்து தேவைகள் எல்லாம் தேவை அற்றவைகளாகி விட்டனவே. எல்லாம் மறந்தேன். இவரின் பட்டம், பதவி, செல்வம், செல்வாக்கு, பண்பு, பொறுமை, பாசம் எனை முழுதாய் மாற்றிவிட்டது. வட இந்தியாவில், திருமணத்திற்கு பிறகு வந்தபோது... புது இடம், புதுமக்கள், ஆயின் அதே பாரத மண் என்னுள் மணத்தது, மகிழ்வித்தது. பழமை மறந்து புதுமை என்னுள் பூரிப்பை பூப்பித்தது.

    குழந்த... இது உன் குற்றமல்ல உன் வயதின் குற்றம். இடராது நடப்பவர் ஒருசிலரே. காலம் உண்மையை உணர்த்தும். இளமை எதையும் அறியாது... சாதி, சம்பிரதாயம், மொழி, இனம் என பெரியோர்கள் பேசுகின்றவை பீத்தல்களாக, முள் வேலிகளாக, தகர்க்கப்பட வேண்டிய தடைகளாக தோன்றும். மலை உச்சியினின்று பள்ளத்தாக்கில் குதிக்கும் நீர் வீழ்ச்சி பாறைகளையும் உடைக்கும் ஆயின்... சமன்தரையில் மௌனமாய் மென்னடை நடக்கத்தான் வேண்டும். இளமை வேகம் குறையும் போது முதுமையின் விவேகம் பிறக்கும் போது... அதெல்லாம் போகட்டும், குழந்த நான் உன்ன வற்புறுத்த மாட்டேன். நான் கீழே படுத்துக்கொள்கிறேன்... முதல் இரவில் தலையனை ஒன்றையும் படுக்கை விரிப்பை ஒன்றையும் எடுத்துக்கொண்டு கட்டிலின் அருகில் தரையில் என்னமாய் உறங்கிவிட்டார். நான் கோபக் கண்களோடு இரவு முழுவதும் எவ்வாறு குந்தி இருந்தேன். எத்துனை நாட்கள் பேசாமல் கடத்தினேன். தொட்டாரில்லையே. சோதிக்கமுடியா பெருமைப்பட வேண்டிய, பொறாமைப்பட வேண்டிய பொறுமை. ஆம் அவர் ஒரு மாபெரும் தீர்க்கதரிசியே... பாறைகளையும் உடைத்தெரியும் நீர்வீழ்ச்சியாய் இருந்த நான் அமைதியான ஆறாய் எவ்வாறு ஆகிப்போனேன். இதோ இரு குழந்தைகள், ஆஸ்திக்கும் ஆசைக்கும் ஒவ்வொன்றாய்... இருவரும் இருவரிலும் சங்கமித்து...

    கண்களில் ஏதோ வலி... குழந்தைகள் கூட அயர்ந்துவிட்டுள்ளனர். அவரோ அதே மோனநிலையில்... எல்லாம் கடந்த நிலையில். மௌனம் எங்கும். இமைகள் இணைகின்றன. ஏன் என்றுமில்லாதபடி இன்று என் நினைவுகள் இப்படி பின்னோக்கிப் பறக்கின்றன...

    கல்லூரியில் கால் வைக்கின்றறேன், படபடக்கும் நெஞ்சோடு நாட்கள் நகர்கின்றன. ‘பெண்களா இவர்கள்?’ என காறி துப்பத் தோன்றும் கயமைகள். உடையைக் குறைத்து, புழுக்களாய், குப்பைத் தொட்டியாய் ஆபாசங்களை அடக்கிய அசிங்கங்கள். யாரோடும் நான் பழகிலேன். வகுப்பிலோ மாணவர்கள் வேறு. தான் மட்டுமே எல்லாம் வல்லவன் என இறுமாந்த கதாநாயகர்கள்... மண்டர்கள், குண்டர்கள். படிப்பில் சுமாரான தன்மை, யாரோடும் சேராத என் குணம் என்னுள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்தி நளியச் செய்தது. ஒருநாள் நூலகத்தில் இருந்து வெளியில் வருகையில் ஒரு குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது. ‘நாம் இருவரும் பல வழிகளிலும் ஒன்றாய் உள்ளோம். தாங்கள் ஏதோ தாழ்வு மனப்பான்மையில் நளிகின்றீர் என்று தெரிகின்றது. நானும் ஏழ்மை எனும் தாழ்வு மனப்பான்மையில் நளிபவன். நானும் யாரோடும் பழகுவதில்லை. நீர் விரும்பினால் நாம் இருவரும் நல் நண்பர்களாய் வாழலாமே, வளரலாமே...’ பொருட்செல்வம் நிறைந்த குடும்பத்திலிருந்து நான், அறிவுச்செல்லவம் நிறைந்த குடும்பத்திலிருந்து அவர். படிப்பில் அவர் முதல்வர் ஆயின் கடையவள் அல்ல நான். விருப்பு, வெறுப்பு பலதும் இருவர்க்கும் ஒன்றே. இணை கோடுகளானோம். நட்பு வளர்ந்தது. அவரின் வீரம் விளையாட்டில், தீரம் கதைகளில், பண்பு பழக்கத்தில்... நாளாவட்டத்தில் கல்லூரியில் அவரை அறியாதவர்கள் யாருமிலர் என்றாயினர். பெயர், புகழ்… எல்லா பெண்களும் பொறாமை கொண்டனர், அதிர்ஷ்டகாரி என்றனர். எத்துனை இனிய மாலைகள் பூங்காவில். ஆயின் ஒருமுறையாவது அவரின் விரல்நுனி கூட என்மீது பட்டது கிடையாதே. நட்பு காதலாய் மலர்ந்தது. திருமணத்தைப்பற்றி பேசினேன். ‘நானோ தாழ்ந்த வகுப்பில், ஏழ்மை குடும்பத்தில் பிறந்துவிட்டவன். உன் அடக்கம், அழகு, பண்பு எனை கவர்ந்தது. அதனால் தான் வலிய நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். மனதுள் தெய்வமாய் வணங்குகிறேன். அதனால் தான் தொடுவதற்கும் துணிந்தேனில்லை. திருமணம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. உன் பெற்றோர்கள் ஒருபோதும் அனுமதியார். என் வாழ்வில் உள்ளத்தில் என்றென்றும் நீயிருப்பாய். ‘கோழை, ஆண்மையற்றவன்’ என்று யார் வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆயின் நீ நினைக்கக்கூடாது. உயர் வாழ்வை உனக்கு அமைப்பர். தூர இருந்து வணங்குவேன்...’ என்று கூறினார். உள்ளத்தில் அவர் உயர்ந்து உயர்ந்து...

    காதல் என்ற பெயரால் காமக்களியாட்டம் புரியும் கயவர்களின் இடையில் குப்பையில் மாணிக்கமாய். நான் பெரும் பாக்யசாலி... பெற்றோர்களிடம் மன்றாடி வேண்டி வாழ்க்கையைப் பெறுவேன்.

    கல்லூரி இறுதி ஆண்டு தேர்விற்கு படிப்பதற்கு விடுப்பு விட்டனர். படிப்பில் என் நாட்டம் இல்லை. பெற்றோர்களிடம் சென்றேன். என்றுமில்லா அதிசயமாய் இருந்தது அவர்கட்கு. அன்றிரவு மெல்ல அன்னையிடம் என் உள்ளத்தை திறந்தேன். எதிர்பார்தேனில்லை... இப்படி பூகம்பம் வெடிக்கும் என்று, எரிமலை கொட்டும் என்று. அடிப்பாவி... என்ன காரியம் செய்தாய்,...படிக்கச் சென்றாயா? பாவம் செய்யச் சென்றாயா? தாழ்ந்த சாதிப்பயலை ஏதோ தறுதலையைக் காதலிக்கின்றாளாம். காதலாவது கத்தரிக்காயவது? என்ன துணிச்சலடி... நம் சாதி என்ன? குலம் என்ன? செல்வம் என்ன? செல்வாக்கு எங்கே? ஏதோ பஞ்சப்பயல் ஏதோ மாய்மாலம் செய்து பணத்திற்காய் பசப்பி உள்ளான்… பாவி வீழ்ந்துவிட்டுள்ளாயேடி... காலம் ஒன்னும் முழுகிப் போய்விடவில்லை... படிப்பாவது... மண்ணாங்கட்டியாவது. ஏரக்கட்டுடி எல்லாத்தையும்... உனக்கு விரைவில் கல்யாணம் நடக்கும்.

    தாய்ச்சொல்லைத் தட்டாத தந்தை, விரல் காட்டும் இடமெல்லாம் ஓடினார். தேடினார். என் அரற்றல், பயமுறுத்தல், பிடிவாதம் எல்லாம் யாரையும் ஒன்றும் செய்ய இயலவில்லை. யாரோ நடுத்தர வயதுகாரர் வடக்கே தொலை தூரத்தில் உயர் பதவியில் உள்ளாராம், நல்லவராம், நிறைய சம்பாதிப்பவராம், விரும்புகின்றாராம். அந்த பெரிய மனிதருக்குக் கடிதம் எழுதினேன், காதலைக் காட்டி வாழ்வு தரும்படி. வந்தார், சந்தித்தார் பெற்றோர்களை, கடிதத்தோடு. எதிர்பார்த்தேன் பெற்றோர்களின் வரட்டு கௌரவத்தைக் காரித் துப்பிச் செல்வார் என்று, என் வாழ்வு மலரும் என்று. ஆயின்... இவ உண்மையில் பச்சக் கொழந்த தான். இத்தகை நடப்பு, பருவக்கோளாரால் தான். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாதிங்க... ஏற்பாடுகள் நடக்கட்டும் அவர், பெருந்தன்மையோடு. பெற்றோர்கள், அவர் காலில் வீழாக்குறையாய் வணங்கினர்.

    என் கண்ணீர் வற்றியது, திருமணம் கோலாகலமாய் நடந்;தது. விமானத்தில் விண்ணில் ஒரு வாழ்க்கை முடிந்து மறுவாழ்க்கையின் ஆரம்பநிலையில்.

    ஏதோ குலுக்கல், கண்விழித்துப் பார்க்கின்றேன். எங்கும் அல்லோல கல்லோலம். குழந்தைகள் அரற்றுகின்றன, பயத்தோடு. எங்கும் பயப்பிராந்தி. விமானப் பணிப்பெண்ணின் இனிய குரல் நடுக்கத்தோடு ‘பிரயாணிகள் தயை கூர்ந்து அமைதியாய் இருக்கவும். இறைவனை வேண்டவும் இடர்பாடு நீங்கும். ஏதோ சிறு குறைபாடு. அதை தவிர்க்க முயல்கின்றனர் விமானிகள். அவர்கள் திறமை, இறைவன் கருணை நம் எல்லாரையும் காக்கும். அமைதி."

    அவரைப் பார்க்கின்றேன். அவர் மட்டும் அதே மௌனநிலையில்... குலுக்கி, அவர் சமாதி நிலையை கலைத்தேன். கொழந்த... ஏன் பயப்படற எல்லாம் நன்மைக்கே. நன்முறையில் போய்ச்சேர்ந்தால் உன் தங்கையின் திருமணத்தைப் பார்க்கலாம். இல்லையேல்... நாம் எல்லாரும் ஒன்றாய் இறக்கலாம். அது இல்லது இது... இரண்டிற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மீண்டும் எல்லாம் கடந்த மோன நிலையில், அவர். ‘ஐயோ தெய்வமே என் மனம் இப்படி பழமைக்கு பின்னோக்கி சென்றது. இவர்க்குத் துரோகம் நினைவில் செய்ததாகிவிட்டதோ... அதற்கு இத்தகை தண்டனையா? என் குழந்தைகள், என் கணவர்...’ வேண்டுகிறேன், எங்கும் காணா இறைவனை. குழந்தைகள் இருவரையும், சேர்த்துப் பிடிக்கின்றேன் பெல்டைப் பிணைத்து, நடுங்கும் கரங்களால்.

    பீதி மறைந்தது, பணிப்பெண்ணின் இனிய குரலால்... விபத்து தவிர்க்கப்பட்டது. நம்பிக்கையோடு நாம் சேர்வோம். அம்மா... எல்லாரும் சேர்ந்தோம்... உயிர் வந்தது. அப்பா வந்திருந்தார் காரில். குழந்தைகளைக் சேர்த்தணைத்து முத்த மாரி பொழிந்தார். வீடு சேர்ந்தோம். கருப்பு வெள்ளாட்டை யாரோ கட்டி இழுத்துச் செல்கின்றனர். எங்கும் திருமண கோலாகலம். குண்டாகி உள்ளதாய் கிண்டல், சிவந்துள்ளதாய் சீண்டல், மூன்றாவதும் உண்டோ என்று நிமிண்டல்... குழந்தைகளைத் தாழ விடாமல் எல்லாரும் இழுத்தடிக்கின்றனர். தங்கை என்னமாய் வளர்ந்துவிட்டுள்ளாள். மருத்துவக் கல்லூரி பட்டம் பெற்று வேலை இருமாதமே ஆகின்றது. அதற்குள் காதல், திருமணம், டாக்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1