Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalpatharu - 4
Kalpatharu - 4
Kalpatharu - 4
Ebook502 pages3 hours

Kalpatharu - 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல… கதாசிரியரின் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580180011213
Kalpatharu - 4

Read more from Dr. M. K. Krishnamoorthy

Related to Kalpatharu - 4

Related ebooks

Reviews for Kalpatharu - 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalpatharu - 4 - Dr. M. K. Krishnamoorthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்பதரு – 4

    ‘சந்நியாசம்’

    (சிறுகதை தொகுப்பு)

    Kalpatharu – 4

    (Sirukadhai Thoguppu)

    Author:

    Dr. M. K. கிருஷ்ணமூர்த்தி

    Dr. M. K. Krishnamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-m-k-krishnamoorthy

    Dr M K. KRISHNAMOORTHY

    கல்பதரு – 4

    ‘சந்நியாசம்’

    (சிறுகதை தொகுப்பு)

    Yatha Drishti, Tatha Srishti!

    சமர்ப்பணம்

    எண்ணும் எழுத்தும் தந்த தந்தைக்கு,

    &

    எண்ணமும் வண்ணமும் ஊட்டிய தாய்க்கு.

    பொருளடக்கம்

    PREFACE

    என்னுரை

    மூத்த குடிமகனாக...

    1) என்றாவது ஒருநாள்…

    2) நவகிரகமும் நானும்

    3) நீதி தேவதை

    4) வழித்துணை

    5) அதிர்ச்சி வைத்தியம்

    6) ஒன்னே ரகுராமா

    7) 10:10

    8) மாதா பிதா குரு தெய்வம்

    9) அவன் கணக்கு…

    10) மந்திரம் பலவிதம்

    11) மறு பிறவி

    முதிர்ந்த மனிதனாக...

    1) கர்ம பலனோ!

    2) என்றும் கடனாளி

    3) கெட்டி மேளம்

    4) பொன் விழா

    5) தொ(ல்)லை பேசி

    6) விதி விலக்கு

    7) நான் பெற்ற தெங்கம் பழம்

    8) கிரகணம் விட்டுடுச்சு

    9) மறுமலர்ச்சி

    10) கோடையில் வசந்தம்

    11) மனசாட்சி

    About The Author

    PREFACE

    HI(S)TORY!

    His is a history of rags to riches story. He was born in a village and brought up in a coffee estate. He toiled as a labourer, battled against the apparition of poverty and allowed his dreams soar high. If it is fire that tests steel, the young ten year old must have already become a man. His schooling started in 1960 from class V..., lived in a hut, collected firewood, fetched water, cooked food, walked bare footed to school, studied under the dim light of street lamps, never had even two square meals a day…but he aced all his exams and games.

    He passioned for becoming a doctor but God had nobler things for him in store. For two years he had to discontinue his studies and juggled the roles of labourer, airman, teacher and overseer. Destiny through Dr. U. R. Ananthamurthy (the Gyanpeed Awardee Teacher) brought him to RCE, Mysore where amazingly he opted for the subject which was his weakest spot, English. He excelled there in academics, literature, theatre, editing, sketching and sports. But once again he became a labourer as he could neither muster the cash for theatre nor master the art for others.

    A clarion call from KVS in 1975 took him to North East as a primary teacher and eventually became principal in 1995. The profession has brought out the best in him. The response his students gave him made it evident that he is in this world to brighten the future of humanity. His motto being ‘I Dare... Orchid or Kid, I Care’ heralded many innovations in education and has ‘trodden untrodden path’ with a zeal to make the mass of dust into nebula of a new star.

    Golden opportunities slid through his hands inexorably, not because of the lack of mettle but because of several perfidious plans of vested interests. Scandals, conspiracies and controversies – things which would have made lesser mortals question their own survival, only strengthened his resolute to live and with dignity. God has always helped him in his mission to prove ‘Truth too Triumphs’. I wonder how many other teachers can be such fountain heads of forethought and optimism after being pushed to the limits he has been!

    His idol happens to be Mr. E. R. Braithwaite. Following that exemplary teacher, he strove to metamorphose many deadly caterpillars into breath – taking butterflies. His forte is the domain of juvenile delinquents – he calls them affectionately ‘The Thunderbolts’ and makes them assets to the nation. He has always been a strict disciplinarian and stickler for perfection but with full of compassion. And that’s why he has made indelible differences in so many lives. Countless prayers flow in for him, tearing the barriers of regions, religions… which he acknowledges, ‘Your blessings are the wind beneath my wings’.

    He is a prolific writer (so far eight books) and a polyglot too (so far seven languages). God has blessed him with so many laurels, amongst other honours NCERT Award, KVS Eminent Teacher Award, G. N. Bordoloi Award and National Award from the President of India (1995).

    He ignited the eternity with his sterling attitude…I aspire to inherit his fortitude. He may not be a global icon yet. But to millions of his students, he is more than one. To me he is an unsung legend. What makes me the proudest is that he is my father.

    SRISHTI KRISHNAMOORTHY

    (Extracts from Srishti’s article which won her a Commendation certificate from Commonwealth Essay writing Competition in class X--2004)

    என்னுரை

    முறைசார் கல்வி முற்றுகையின் வகுப்பறை சிறையில் அடைக்கப்படாமல், பத்தாண்டு கால நீண்ட பிள்ளைப்பருவத்தில், சுதந்திரப் பறவையாய் சிறகு விரித்து காட்டில் மேட்டில் பறந்து, திறந்தவெளி நடைமுறைக் கல்வியைப் பெறும் பெரும் வரம் பெற்றேன்!

    என் படிக்காத பாமரத் தாய், பாலூட்டியக் காலம் போக… ஈராண்டு கீழைச் சமவெளி வயக்காடுகளிலும் ஐந்தாண்டு மேலை மலைத்தொடர் காஃபித் தோட்டங்களிலும், பகல் முழுதும் உழைத்து களைத்து மீண்டு நள்ளிரவு வரை ராமாயண மகாபாரத கதைகளை என்னுள் விதைத்து நெறியாளன் ஆக்கினார்; அரைகுறை படிப்பு படித்த என் தந்தை, எண்ணையும் எழுத்தையும் என் இரு கண்களாக்கி சிறந்த படிப்பாளியாக்கினார்; முன்னிரவில் கூலித்தொழிலாளி தாய்மார்கள் தம் வீட்டு வேலைகளை முடித்து எம் குடிலின் முன் குழுமி வெற்றிலை பாக்கை குதப்பி சிம்னி விளக்கில் என்னை கதைப் புத்தகங்களை படிக்க செய்து, சுற்றிலும் அமர்ந்து ஈடுபாடுடன் கேட்டு... இருப்பதை படித்து இல்லாததை கூட்டி சேர்த்து குரலை உயர்த்தி தாழ்த்தி எல்லாரையும் வசப்படுத்திய என்னை, கதைக்காரன் ஆக்கினர்!

    பள்ளியில் ஒரு சிறு கருவாய் குருகுருத்து கல்லூரியில் ஒரு திருவாய் உருபெற்ற ‘நட்பா தியாகமா?’ என்ற என் முதல் சிறுகதை கதையாவது கத்தரிக்காயாவது! எனவும், ஒரு பரிசோதனை பயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஒரு வாரம் ஏழு நாட்கள்’ என்ற என் முதல் புதினம் நாவலாவது பொடலங்காயாவது! எனவும், என் ‘கல்வியில்’ உண்மையாய் நாட்டம் கொண்ட தமிழ்பேராசிரியரால் பெரிதாய் சிறுமைப் படுத்தப்பட; ‘FLASH’ என்னும் மாதாந்திர ஆங்கில இலக்கிய இதழின் ஆசிரியாரான ஒரு பிரபல மூத்த மாணவரை நான் அணுக, தமிழிலா, யார் படிப்பர்? ஆங்கிலத்தில் எழுத இயலாதோ! என எள்ளி நகையாடி ஏளனப்படுத்த... ‘அரும்பு’ என்ற தமிழ் கைப்பிரதி மாத இலக்கிய இதழைப் பூத்து, பலரையும் எழுதச் செய்து நானும் தொடர்ந்து எழுதி மணம் பெற்றேன்...இப்படியாக முறைசார் கல்வியின் முட்டும் தட்டும் ஏணியாகி என்னை கதாசிரியனாக்கின!

    இயல்பு கல்வி பெரும் முன் பெற்ற பின், பணியில் சேரும் முன் சேர்ந்த பின், காதல் கல்யாணம் இல்வாழ்க்கை இல்லாவாழ்க்கை நரைதிரைமூப்பு... என எல்லா காலகட்டங்களும் தொடர் எதிர்நீச்சல் வாழ்க்கையாகி, நிறைய நெருடல்களை நெகிழ்வுகளை அனுபவங்களை படிப்பினைகளை தந்தன. அவைகள் அவ்வப்போது என் படைப்புகள் ஆயின. தோழர் தோழியர் அன்றும் இன்றும் என் கதைகளை படித்து போற்றி புகழ்ந்து துணையாக, கருத்து தெரிந்த காலம் முதல் மகள் சிருஷ்டி என் வாழ்க்கை கதையை கேட்டு உள்வாங்கி கண்டு வியந்து ஊக்கமாக...நான் எழுதுவதை தொடர்கின்றேன், மகிழ்ந்து.

    என் படைப்புகள்...

    இவைகள் முழுதும் கற்பனை கதைகள் அன்று, அதே நேரத்தில் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியும் அன்று. என் சத்யபோராட்ட வாழ்க்கையில் நான் சந்தித்த பாத்திரங்களும், எதிர்கொண்ட அனுபவங்களும் என் கற்பனையில் பரிணாம மறுமலர்ச்சி அடைகின்றன என்பதுதான் சத்தியம். ஒளியும் தடையும் சேர்ந்து உருவத்துக்கு நிழலை உருவாக்குதல் போல, உண்மைகளும் என் கற்பனையும் சேர்ந்து என் கதைகளாகின்றன. ஆக இது நிழலே நிஜமன்று, எனவே இதில் எது உயர்ந்தது என்ற சர்ச்சை தேவையில்லை. ஒன்று மட்டும் மறுக்க முடியா உண்மை... ஓரளவு எல்லா படைப்புகளிலும், நேரிடையாகவோ மறைமுகமாகவோ நான் வசிக்கிறேன்!

    இவைகள் வெற்று வேதாந்தத்திற்காகவும் வெறும் விளம்பர மோகத்திற்காகவும் பிறந்ததல்ல, அவைகள் உண்மையான மனிதனின் மனதில் அழுந்திக் கிடக்கும் நேர்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடே.

    சமூகத்தின் பெரும் சக்தி அல்ல அதன் ஜீவ ஓட்டம், தனி ஒரு மனத்தின் மென்மையான சிறிய உணர்வுதான் அதன் வளர்ப்பு சக்தி. எனவே அது ஏதாவது ஒரு உள்ளத்தின் ஒரு சிறிய மூலையில் ஒரு சிறிய உணர்வை அசைத்தாலே போதும்.

    இவைகள் புரட்சி கருத்துகளின் சங்கமம் அன்று, புரட்டி எடுத்த வாழ்க்கை போதித்த உண்மைகளின் புகலிடமே.

    இவைகள், கதைகளின் போர்வையில் ‘வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும்’ என்ற உபதேசங்கள் அல்ல, மாறாய் ‘வாழ்க்கை இப்படித்தான் உள்ளது’ என்ற எளிய தத்துவங்களின் உறைவிடமே.

    இவைகளில் என் மனம் கவர்ந்த ஆங்கிலக் கவிஞன் Robert Browning-ன் Dramatic Monologue இலக்கணமாய் அமைய, என் கதை நாயகர்களின் மனதில் முன்னும் பின்னும் பயணித்து ஒரு புது உலகை சிருஷ்டித்துள்ளேன்.

    ...கோலம் அழகாய் இல்லை என்றால் அது மாவின் குறையோ, தரையின் குறைபாடோ, ஏன் போட்டவரின் குற்றமோ கூட அல்ல. குறை அனுபவமே அதன் காரணம்...அது நிறையாகலாம். பூசை அறை வண்ணக்கோலம் கலையாமல் அப்படியே இருக்கும், ஆனால் வீதியில் போட்ட கோலம் பலர் கண்களின் அழகாகி கால்களின் அடியில் அழிதலில்தான் மகிமை. கன்னியின் தெய்வீகம் தாய்மையில், என் மகிழ்வு என் கதைகள் பலரால் அலசுதலில்!

    காலம்தான் எவ்வளவு விரைவில் பறக்கின்றது...மேற்குமலைத்தொடர் குடகு காட்டில் இயற்கையோடு இழைந்த குழந்தைக்காலம், கீழைச்சமவெளி தமிழக வயலூரில் செயற்கை கல்வி கற்ற பள்ளிப்பருவம், மருத்துவ படிப்பு கானல் நீராக ஈராண்டு அக்யாதவாசம், மீண்ட சொர்க்கமாய் இழந்த கல்வி வாலிபத்தின் வசந்தமான இறையருள், வேலையில்லா திண்டாட்டத்தில் விரிசலான உறவுகள், தேடிவந்த வேலையும் சத்யபோராட்டமும், நாடோடி வாழ்க்கையின் நங்கூரமான மனைவி மகள்...எல்லாம் மனதில் நிரந்தர நினைவுகளாய், பெருமையாய்!

    முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல…என் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!

    சில கதைகள் அக்காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சியில் நிறைய நேயர்களை மகிழ்வித்தன. சில கதைகள் துணைவி Bharati மூலம் அஸ்ஸாமியிலும், பல கதைகள் நண்பர் Dr Akilesh Kumar Goswami மூலம் இந்தியிலும், என் குறும் புதினம் தம்பி Dr Haricharan Shenoy மூலம் கன்னடத்திலும், தமக்கை Chini Champa Mahanta மூலம் அஸ்ஸாமியிலும், தங்கை Prasanna S Pillai மூலம் மலையாளத்திலும் ...மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின. மகள் Srishti ஆங்கிலத்தில் முயல்கின்றார். தமிழறியா இச்சான்றோர்க்கு என் பன்மொழி சிற்றறிவு பெரிதும் உதவியாய் இருந்தமைக்கு மகிழ்கிறேன்.

    இப்படி சில அண்டைய மொழிகளில் பலரையும் பரவசப்படுத்திய என் தமிழ் படைப்புகள், தாய்மொழியில் மட்டும் பதிப்பாக ஏக்கம் பெரும் தாக்கத்தை தந்த நிலையில்தான்...தம்பி ஜெகன் வலைப்பதிவிலும், தோழர் கவிஞர் சந்தர் வழிவகை தந்தும், முனைவர் ராஜேஷ் புத்தகங்களாக பதிப்பித்தும் உலகறியச் செய்கின்றனர்.

    மனமார்ந்த நன்றி அனைவருக்கும்.

    Dr MK கிருஷ்ணமூர்த்தி

    1) என்றாவது ஒருநாள்…

    சிட்னியிலிருந்து விமானம் விரைந்தோடி எழுந்து உயர்ந்து விண்ணில் பறந்தது. கீழே மெல்ல மெல்ல விரிந்து பரந்த விமான நிலையம், நகரம், நாடு, ஏன் ஆஸ்திரேலியா கண்டமே சிறுத்து குறுகி புள்ளியாய் மறைந்தது. சிறிது நேரத்தில் மேகத்தின் மீது விமானம் தவழ, ஒரே இடத்தில் அசையாமல் மிதப்பது போன்று தோன்றியது. முப்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த வளர்ந்த மண்ணை நிரந்தரமாக பிரிந்து செல்லும் துக்கமோ, பிணைத்த இணைத்த உறவுகளை ஒரேயடியாய் மறந்து போகும் தாக்கமோ, அங்கு என்ன காத்துள்ளதோ என்ற கலக்கமோ ஏதும் இன்றி முற்றும் துறந்த முனிவனின் மோன நிலையில் நான் சின்னேரம் லயித்திருந்தேன். ஏதோ ஒரு இனம் புரியா பேரானந்தம், விளக்கவொன்னா பேரமைதி என்னுள் வியாபிக்க சித்தார்த்தனின் மன நிலையில் கண் அயர்ந்தேன். ஆயின் உறங்க இயலவில்லை, மாறாய் கடந்துபோன நிகழ்வுகள் திரைப்படமாக நினைவில் படர்ந்தன...

    ‘அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள்...?’ என்று தெரியவில்லை. சில நாட்களாக, அவளை ஏதோ அச்சம் ஆட்டிப்படைக்க, முன்னுக்குப்பின் முரணாக பலதும் செய்தாள்... காரண காரியம் ஏதும் இன்றி திடுதிப்பென உதாசினப்படுத்தி ஒதுக்கித் தள்ளி, ஒட்டி உரசி விகாரமாக அச்சுறுத்தி, அளவுக்கு மீறிய உபசரிப்பில் அலைக்கழித்து, இப்படி பலவாறாக அரற்றி அழுது ஆட்டிப்படைத்தாள்! இந்த திடீர் மாற்றம் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏதும் புரியாமல் தடுமாறினேன். உடன் வந்தது முதல் இப்படி இருந்திருந்தால் இந்த முடிவை எப்போதே எடுத்து இருப்பேனே. இவள் எப்போதும் ஏதோ ஒரு கணக்கு போட்டுதான் வாழ்ந்தாளோ அல்லது நான்தான் தப்பு கணக்கு போட்டு விட்டேனோ?

    பள்ளி காலத்து எப்போதும் முதல் மதிப்பெண் பெற்றேன், எல்லாராலும் தலை சிறந்த மாணவன் என்று போற்றி புகழப்பட்டேன். என்னுள் எப்போதும் ஒரு நல்ல டாக்டராக வேண்டும் என்ற கனவு வளர்ந்தது. நாளாகாக அதுவே ஒரு வெறியாக மாறியது. ஒரு ஒப்புயர்வற்ற டாக்டராகி பல உயிர்களை காக்க வேண்டும் என உத்வேகம் என்னில் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த சிறிய ஊரில் கல்லூரியைக் கூட யாரும் கண்டதில்லை, டாக்டர் படிப்பு என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாய் எதிரிடை எண்ணம் தோன்ற, என் திட்டம் ஆட்டம் கண்டது. ஆயின் மீண்டும் மீண்டும் என்னை நானே ஊக்குவித்துக் கொண்டேன் எப்படியாவது டாக்டராவேன் என. இந்த மனப்போர் அல்லும் பகலும் தொடர்ந்தது. பள்ளி படிப்பு முடிந்தவுடன் என் கனவை நனவாக்க மெல்ல அம்மாவிடம் மனதைத் திறந்தேன். அவர் பல பிரச்சனைகளை என்முன் வைத்தார்...ஈராண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன அப்பா, வளர்ந்து வரும் மூன்று தங்கைகள், ஐந்து வயதான கடைக்குட்டி தம்பி கிருஷ்ணன்...அம்மா, எப்படியாவது என்னை டாக்டர் ஆக்கிவிடு, தம்பிதங்கைகளை நிச்சயம் என்றும் நான் காப்பேன் என நான் உறுதி கூறி அடம் பிடித்து அழுதேன். இளம் விதவையான அவர் திட முடிவெடுக்க இயலா நிலையில் தடுமாறினார். என் ஆசிரியர்கள் என் கனவுக்கு தூபம் போட்டதோடு, அம்மாவையும் துணிந்து செயல்பட செய்தனர், ஊக்கத்தோடு வழிவகையும் தந்து.

    சென்னை வந்தேன், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆரம்ப குறை ஆங்கில அறிவு மறைய கடுமையாய் உழைத்து நிறைய கற்று, அங்கும் உயர்ந்தேன். ஆண்டு தோரும் கல்லூரி, விடுதி கட்டணங்களுக்கு அதிக பணத்தேவை ஏற்பட, அம்மா மனம் தளராமல், பங்காளிகளின் ஏச்சையும் பேச்சையும் பொருட்படுத்தாமல், ஏனையோரின் ஏளனத்தையும் கிண்டலையும் கண்டுகொள்ளாமல், என்மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையால் என் கல்லூரி வாழ்க்கையைத் தொடரச் செய்தார்... நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரைகுறை விலைக்கு விற்று. முழு ஈடுபாடுடன் படித்தேன், டாக்டரானேன்... ஐந்து ஆண்டு படிப்பில் எட்டு ஏக்கர் நிலம் பறிபோக. எஞ்சிய இரண்டு ஏக்கரில், அம்மா ஆட்களை வைத்து நெற்பயிரிட்டு, தம்பி தங்கைகளை வளர்த்தார். தங்கைகளின் படிப்பை பத்தோடு நிறுத்தினார், தம்பி உயர்நிலைப் பள்ளியில் நுழைந்தான்.

    அரசு மருத்துவ மனையில் உடனடியாக பணி கிடைக்க அம்மா பெரும் நிம்மதி அடைந்தார், இன்னல்கள் முடிய விடிவு பிறந்ததாக. ஐந்தாண்டுகள் கடந்தமை கணப்பொழுதாக தோன்றியது. என் பாதி ஊதியத்தை தங்கைகளின் திருமணங்களுக்கு தேவையான நகைநட்டு செய்ய அம்மா செலவழித்தார், மீதி பாதியை என் எதிர்காலத்திற்காக சேர்க்கச்செய்தார். எல்லாம் நலமாக தொடர என்னுள் ஏனோ உயர் படிப்பு வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை எழ, அம்மாவிடம் என் விழைவை முன் வைத்தேன்.படித்தது போதும், பணியைத் தொடர். தங்கைகள் திருமண வயதை அடைகின்றனர், ஒவ்வொருவராய் கைப்பிடித்து தந்து கரை சேர்க்க வேண்டும். தம்பியையும் உன் போல உயர்படிப்பு ஏதேனும் படிக்க வைக்க வேண்டும். எனக்கும் வயதாகி விட்டது, இனி எவ்வளவு காலம் வாழ்வேன் என்று சொல்ல முடியாது. தாய்க்கு தலை மகனான நீ குடும்ப பொறுப்பு ஏற்று எனக்கு முக்தி தா, உன் அப்பாவோடு நான் சேரும் காலம் வந்துவிட்டது... என அம்மா எப்போதும் போல பல தடைகளை முன்வைத்தார். ஆயின் நான் முரண் பிடித்தேன், அம்மா, எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என வாக்குறுதி தந்து. இறுதியில் நான் வென்றேன்.

    அம்மாவின் உதவி இன்றி ஆஸ்திரேலியா வந்தேன். ஈராண்டு ஈடுபாடுடன் படித்தேன், பட்டம் பெற்றேன். உடன் பணியும் கிடைத்தது, குடிமகன் உரிமையும் எளிதாய் பெற்றேன். அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாய் செயல்படுத்த காலம் வந்துவிட்டதை உணர்ந்தேன். ஆயின் எதிர்பாராவிதமாய் ஒரு அழகிய வெள்ளைக்காரப் பெண், ‘இந்திய கலையும் கலாச்சாரமும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் மாணவி, என் வாழ்க்கையில் மிக நளினமாய் நுழைந்தாள். நோயாளியாய் வந்தவள் மாணவியானாள்... அடிக்கடி சந்தித்தோம், ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டாள் இந்திய கலை, கலாச்சாரம், உணவு, உடை, மொழி, மதம், பழக்க வழக்கம், பண்பாடு குறித்து. முக்கியமாக தமிழ்நாட்டின் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் செம்மையான பழமை அவளைப் பெரிதும் ஈர்த்தது. அவளின் ஈடுபாடு, எளிமை, தூய்மை என்னை கவர்ந்தது. எங்கு எப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. நெருங்கிப் பழகினோம், மாணவியானவள் மனைவியாக விழைந்தாள். இணைந்து வாழத் துடித்தேன். ஆயின் அவள் இணங்கவில்லை, தமிழ்நாட்டின் முறைப்படி என்னை மணந்து இல்வாழ்க்கையைத் தொடங்குவோம், அதுவும் அம்மாவின் ஆசியோடு, தம்பிதங்கைகள் முன்னிலையில் என நிபந்தனை விதித்து.

    அம்மாவுக்கு எல்லாம் விளக்கி எழுதினேன். அவளின் பண்பை, விழைவை, அறிவை அம்மா பெருமையோடு புகழ்ந்து மருமகளாக மகிழ்வோடு ஏற்றுக்கொள்வார் என உறுதியாய் நம்பினேன். ஆயின் ஏனோ அவர் எம் ‘கருப்பு-வெள்ளை’ எதிரும் புதிரும் உறவை ஏற்றுக் கொள்ள இயலாமல் தவித்தார்...அவர் செய்த தியாகங்களை, காத்துள்ள பொறுப்புகளை, நான் கொடுத்த வாக்குறுதிகளை, விற்று விட்ட நிலங்களை, வளர்ந்துவிட்ட தங்கைகளை, கல்லூரி செல்ல வேண்டிய தம்பியை... மீண்டும் நினைவு கூறச்செய்து, நம்பிக்கை பறிபோனவாராய் ஏதோ அச்சத்தில் அழுதார், இந்த பொருந்தா உறவு நம்மில் நிரந்தர பிரிவை ஏற்படுத்தும் என.

    அம்மாவின் நியாயமான வேதனைகள், எதிர்பார்ப்புகள் என்னை முள்ளாக தைத்தன. ஆயின் நம் தமிழ் பெண்களைவிட நம் பண்பாட்டை அதிகமாக போற்றும், என்னை உயிரினும் மேலாக நேசிக்கும் இந்த பேரழகியை நேரில் பார்க்காமலே அம்மா வெறுக்கின்றமை அவமானமாக இருந்தது. அதோடு என் வேண்டுதலை ஏற்காமல், என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், எப்போதும் கடமைகளை நினைவுறுத்தி என்னை நன்றிக்கொன்ற குற்றவாளியாக்கும் அம்மாவின் முயற்சி அவரை வெறுக்கச் செய்தது. எப்போதும்போல் என் கட்டுக்கடங்கா உணர்வுகள் தலைதூக்க, அம்மாவின் எதிர்ப்பை பெரிதுபடுத்தி அவளை ஒத்துக்கொள்ளச் செய்தேன், என் முடிவை...இங்கேயே கோயிலில் இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொள்ள.

    நினைத்ததை சாதிக்கும் என் குணம் அம்மாவை மன்னிக்காமல் உறவை துண்டிக்கச் செய்தது...அம்மாவை, தம்பிதங்கைகளை, ஊரை மறந்தேன். எம் திருமணம் எளிமையாய் நடந்தது. இல்வாழ்க்கை இனித்தது. பயனாய் மகன் ஒருவன் பிறந்தான். பூரணத்துவம் அடைந்த திருப்தி என்னில். அவள் தன் ஆய்வை சமர்ப்பித்தாள், உயர் வெற்றி அடைந்தாள். அவளும் ‘டாக்டர்’ ஆனாள். மட்டிலா மகிழ்ச்சி அடைந்தேன், அவளின் உயர்வில், வளர்ச்சியில். ஆயின் நாளாவட்டத்தில் அவளின் நடை உடை பாவனையில் பெரிதாக மாற்றம் கண்டேன். குழந்தை வளர்ப்பிலும் அவளின் ஈடுபாடின்மை அதிர்ச்சியைத் தந்தது. என் நிறத்தை, உருவத்தை, அறிவை, திறமையை, பண்பை, பழக்க வழக்கங்களை வானளவாய் புகழ்ந்தவள்… இதோ அவைகளையே காரணகாரியமின்றி இழித்தும் பழித்தும் சிடுசிடுக்கலானாள். கோபத்தின் உச்சத்தில் ஒருநாள், மகன் என் நிறத்தில் உள்ளதை அருவெறுப்பாக உமிழ்ந்தாள். நீ கிஷ்ணா, நான் ராதா என என்னை காதலித்த அதே அவளா இவள்?

    கொதித்தேன், கொந்தளித்தேன், காட்டுமிராண்டியாகக் கத்தினேன்...அவள் தன்னல நோக்கோடு காதல் வலையில் வீழ்த்தியதை, பொய்யாய் புகழ்ந்து போற்றியதை, எல்லாம் துறந்த என்னை ஏமாற்றியதை, மேற்பூச்சாய் கலாச்சாரத்தை விரும்பியதை, பண்பாட்டின் சாறத்தை உணராததை, இன மாத நிற வேறுபாட்டில் இழிவதை... நான் மோகத்தில் மூழ்கியதை, அம்மாவின் தியாகத்தை மறந்ததை, தம்பி தங்கைகளை அநாதரவாக விட்டதை, கடமை தவறியதை, தன்னல வாழ்க்கையில் இழிந்ததை...குற்ற உணர்வோடு கொட்டினேன். அவள் மௌனியாக எல்லாம் கேட்டு குழந்தையோடு படுக்கை அறை சென்று கதவை அடைத்தாள். நான் இரவு முழுதும் உறங்க இயலாமல்… தாய்ச் சொல்லை தட்டி, தான்தோன்றித் தனத்தில் அகலக்கால் வைத்து, தகாத முடிவுகள் எடுத்து, அதைச் செய்ய அடம் பிடித்து, உறவுகளை உதறி எறிந்து, தியாகங்களை மறந்து இழிந்தமைக்கு ஆண்டவன் தந்த தண்டனை என அழுதேன். எல்லாம் கசந்தது.

    எப்போது எப்படி உறங்கிப்போனேன் என்று தெரியவில்லை. மகனின் அலரி அழும் குரல் கேட்டு கண் விழித்தபோது, சோபாவில் பிணமாய் கிடப்ப்தை உணர்ந்தேன். சூரிய ஒளி காலைப் பொழுதின் நேரத்தைக் காட்ட, மெல்ல எழுந்து மகனிடம் சென்றேன். அவள் அங்கு இல்லை, குழந்தையைத் தூக்கினேன் அமைதிபடுத்த. குழந்தையின் அருகில் ஒரு கடிதம் கண்டேன், எடுத்தேன், படித்தேன்...நீ ராமனும் இல்லை, நான் சீதையும் அல்ல. பிறந்த மகனும் உன் போலவே, கருப்பனாக. உம் வாழ்க்கையை உம்மோடு விட்டு என் புதிய வாழ்க்கையை தேடிப் போகின்றேன். என் தலை சுற்றியது, அழும் மகனை தேற்ற இயலாமல் நெஞ்சில் அணைத்து அழுதேன். என்ன செய்வது என்று அறியாமல் அஞ்சி நடுங்கினேன். அம்மா தீர்க்கதரிசியோ, அவர் கூறியதை கேட்காமல் போனேனே. தனிமையில் வாழ இயலாது, அதுவும் இந்த ஒரு வயது குழந்தையை வளர்ப்பது நினைக்க முடியா செயல். ஆர அமர யோசித்து அமைதி அடைந்தேன். ‘அவளின் ஆய்வுக்கு நான் ஒரு வழிகாட்டி, வாழ்க்கை துணைவன் அல்ல. ஆய்வு பட்டத்திற்காக, நடைமுறைக்காக அல்ல. என் தேவை முடிய கறி வேப்பிலையாக தூக்கி எறிந்துவிட்டாள்!’ என்னுள் ஒரு வெஞ்சினம் எழுந்தது...அந்த வெள்ளைக்காரியை தண்டிக்க, மகனை வளர்க்க மறுமணம் செய்ய தீர்மானித்தேன். முன் செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் ஒரு கருத்த தமிழ் பெண்ணையே மணக்க முடிவெடுத்தேன்.

    வீட்டு பணியாளர்கள் மூலம் குழந்தையை பேணி பாதுகாக்க ஒரு அனுபவமிக்க பெண்ணை ஏற்பாடு செய்தேன். ஈராண்டுகளுக்குப் பிறகு அம்மாவைத் தொடர்பு கொண்டேன்… செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, நடந்த விபரீதங்களை விளக்கி, செய்ய உள்ள மறுமண முடிவை முன்வைத்து. எதிர் பார்த்தேனில்லை அவர் ஒருபோதும் என்னை மன்னிக்கார் என. அவர் எதிர்த்தார், எச்சரித்தார், மீண்டும் பெரிய தவறு செய்கின்றாய். நீ உண்மையில் என் ராமன் தானா? என.

    இல்வாழ்க்கைத் துணையாய் வந்தவளே ஓடிவிட்டாள், இந்த பெற்று வளர்த்த தாய் எப்படி என்னை காப்பார் என மீண்டும் அவரை மறந்து என் முடிவை செயல் படுத்தினேன். தமிழ்நாடு செய்தித் தாள்களில், எல்லாம் விளக்கி விளம்பரம் செய்தேன். குழந்தையைப் பாதுகாக்க தக்க ஏற்பாடுகள் செய்து தாயகம் வந்தேன், நட்சத்திர விடுதியில், தொடர்பு கொண்ட பெண்களை உறவுகளோடு சந்தித்தேன்... தடுமாறினேன், நான் கேட்க வேண்டிய கேள்விகள் வந்தவர்கள் கேட்க. என்னால் சரியாக பதில் ஏதும் கூற இயலாமையால். என் பட்டம் பதவி பணம் வெளிநாட்டு வாழ்க்கை என்ற அலங்காரங்களை விரும்பினரே அன்றி, குழந்தைக்கு தாயாக, எனக்கு மனைவியாக வாழ யாரும் விழைவதாக இல்லை. அம்மாவின் அசரீரி ‘மீண்டும் பெரும் தவறு’ என்னுள் ஒலித்தன.

    ஓடிப் போன மனைவி, வளரும் மகன், வயதான தாய், காத்துள்ள தம்பி தங்கைகள் போன்ற பொறுப்புகள் கை விலங்காய் கால் விலங்காய் உள்ளதாக என்னை ஒதுக்கித் தள்ளினர் சிலர். ‘நமக்கென குழந்தைகள் கூடாது’ என்ற என் முடிவுரையைக் கேட்டு அதிர்ந்து, தரக்குறைவாய் திட்டி சென்றனர் பலர். என்ன செய்வது என்று ஏதும் தெரியாது நின்றபோது, இறுதியாய் ஒரு இளம் பெண் வந்தாள் தமக்கையோடு... இருபது வயதினள், என்னைவிட பதினைந்து வயது இளையவள், செவிலித்தாய் பயிற்சி பெற்றவள், திருமணமாகாத தமக்கை மட்டும் உள்ளவள், பெற்றோர்களை இழந்தவள்...கள்ளம் கபடமில்லா, சூதுவாதற்ற பச்சிளம் குழந்தையாக தோன்றினாள். நான் ஏதோ பெரும் குற்றம் புரிவதாக உள்மனம் உறுத்திற்று... ஓடிப்போன மனைவியின் கணவன், பிஞ்சு மகனின் தந்தை, தாய்க்கு கொடுத்த வாக்கை தவறிய தனயன், உடன்பிறப்புகளை காக்காத கயவன், இளம் பெண்ணின் ஏழ்மையைத் தவராக சூறையாடுபவன்...என பலவித பயங்கர குற்றவாளிகளாக நான் எனக்குள் தோன்றினேன். அவள் எல்லா தியாகங்களையும் மகிழ்வோடு ஏற்றாள். அவளின் தமக்கை தாயாய் துணை நிற்க எம் திருமணம் எளிமையாய் நடந்தேறியது.

    புது மனைவியோடு ஆஸ்திரேலியா மீண்டேன். மகனை கண்களாய் போற்றி வளர்த்தாள், செவிலியாய் தாயாய். என்னை அல்லும் பகலும் நல்ல மனைவியாய் ருசியாய் சமைத்து உண்பித்தாள், கட்டிலில் காமுகியாய் உருட்டிப் புரட்டி எடுத்தாள். இதுதான் உண்மையான இல்வாழ்க்கை என இறுமாந்தேன். முன்னவளோடு வாழ்ந்தமை ஒரு வணிக ஒப்பந்தமாய் தோன்றியது. அவளின் தமக்கைக்கும், இன்னும் பல புதிய உறவுகளுக்கும் நிறைய நிதி உதவி செய்தேன் மகிழ்வோடு. ஆயின் அத்தகைய உதவிகளை அம்மாவுக்கோ தம்பிதங்கைகளுக்கோ நான் செய்யவில்லை, அவளும் செய்யும்படி கூறினாளில்லை.

    ஒருசில ஆண்டுகளில் புதியவள் பழையவள் ஆனாள்... ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என வாழ்க்கை கசக்க ஆரம்பித்தது. நான் இல்லாத போது மகனை அடித்தும் அச்சுறுத்தியும் துன்புறுத்திய அவள், என் எதிரிலேயே ‘சனியனே’ என அதட்ட அடிக்க ஆரம்பித்தாள். இறுதியில் அவனை விடுதியில் விட வேண்டி வந்தது. ஏதும் அறியா வெகுளியாய் வந்தவள், பத்ரகாளியாகி ஆட்டுவித்தாள், என்னை அடிமையாக்கி.

    தாய் தம்பிதங்கைகளை மறந்து, மகனை இழந்து, தானே விரித்த வலையில் விழுந்து நான், எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாதவன் ஆனேன். ஆயின் அவளோ எத்தகைய குற்ற உணர்வும் இன்றி தமக்கையோடு தினம் மணிக் கணக்கில் பேசி மகிழ்ந்தாள். ஆண்டுதோறும் ஊர் சென்று மீண்டாள். நான் குடியனானேன். நல்ல வேளையாய் வீட்டில் குடித்து மயங்கியவன், வெளியில் புகழ் பெற்ற டாக்டராகவே போற்றப் பட்டேன். என் வருமானம் அவளின் அதிகாரத்தை அகங்காரத்தை பல மடங்காகியது... சிறிய வீடு பெரிய வீடாகி, உயர் வண்டிகள் வந்து, பணியாளர்கள் பலர் நுழைந்து...வசதிகள் வளர்ந்தன! தாயை மறந்த மகனால் என்னை மன்னிக்க இயலவில்லை, சித்தியைக் கொண்டுவந்து சித்திரவதை செய்து விடுதியில் விட்டமைக்கு. அவன் வளர்ந்து, தன் வாழ்க்கையில் இருந்து என்னை ஒரேயடியாய் ஒதுக்கி, தன் வழியில் வாழ்ந்தான்.

    நடைபிணமாய் வாழ்ந்த என்னிடம் ஒருநாள் அவள்...உங்கள் தம்பி கிருஷ்ணன் பேச விழைகின்றான் என முன்னறிவிப்பு ஏதுமின்றி கைப்பேசியைத் தந்தாள். நடுங்கும் கைகளில் அத்தொலைபேசியை செவியில் வைத்து, கண்கள் நிறைய, பெருமூச்சு விட்டு, தம்பீ, கிருஷ்ணா என்றேன். பதினைந்து வயதில் அவனைப் பார்த்தது, குரலைக் கேட்டது. இதோ முப்பத்தைந்து ஆண்டுகட்குப் பிறகு அந்த குரலைக் கேட்க துடித்தேன். என் எல்லா குற்றங்களையும் மறந்தவனாய், அண்ணா இளமை ததும்பும் பாசமிக்க அவன் குரல் என்னை வாய்விட்டு அழச் செய்தது. அவன் தொடர்ந்தான், அண்ணிக்கு நன்றி கூற வேண்டும், துண்டிக்கப்பட்ட நம் உறவை மீண்டும் இணைத்தமைக்கு. அவர் முதன் முதலாக எழுதிய கடிதம் இன்று கிடைக்கப் பெற்றேன்...மகன் தறிகெட்டு வளர்ந்து, சண்டை போட்டு, வளர்த்த தாய்க்கு வசவுகள் தந்து, உம்மை இழித்து பழித்து ஓடிப்போனமை வேதனை தருகின்றது. எவ்வளவு உண்மை என யானறியேன். ஆயின் ஒன்றுமட்டும் உண்மை...தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அமைதி இழந்து அல்லல் படுகின்றீர், அண்ணியும் எல்லாம் பறிபோனவராக கவலையில் மூழ்கியுள்ளார். எல்லாவற்றுக்கும் ஒரு நல் முடிவு... தங்களின் சொத்து வங்கி சேமிப்பு வீடு வண்டி என எல்லாம் தானம் செய்து அண்ணியை நடுத்தெருவில் நிற்க விடாமல், அவர் விழைவின்படி அவருக்கே கொடுத்துவிட்டு தாங்கள் இங்கு வந்துவிடவும். தாய்ச் சொல்லைக் கேளாமல் எல்லாம் இழந்து நிற்கும் தாங்கள், தயவுசெய்து தம்பி கூறுவதையாவது செயல்படுத்தவும். சென்றதுபோல் ஏதும் இல்லாமல் தனிமையில் மீளவும், எம்மோடு இறுதி காலத்தை மகிழ்வோடு கழிக்கவும் என அன்புக் கட்டளை இட்டான். நான் கண்மூடி அழுதேன். லேசாய் காற்றில் பறக்கும் உணர்வு என்னில்.

    அவன் தொடர்ந்தான்...இங்கு அனைவரும் நலம். எல்லாம் துறந்து மறந்து உடன் புறப்பட்டு வரவும். புறப்படும் தேதி, சென்னை வந்து சேரும் நேரம் ஆகிய விபரங்களை உடனடியாக தெரியப்படுத்தவும். உம்மை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருப்பேன். ஒரு காலச்சக்கரம் முழுமை அடைகின்றது... தங்களின் பதின்ம வயதின் பொதுச்சேவை செய்யும் கணவுகள் நனவாக நிறைய சந்தர்ப்பங்கள் காத்துள்ளன. அவன் முடித்தான் தன் தொடர்பை, இலைமறை காயாய் எல்லாம் உணர்ந்து, உணர்த்தி. தம்பி சாக்ஷாத் கிருஷ்ணனாய் எனக்கு மோக்ஷம் அளிப்பதாக நெகிழ்ந்தேன். மௌனியானேன்.

    ஆண்டுகள் பலவாக ஆட்டிப்படைத்த அவள், எல்லை கடந்து எல்லாம் பறிபோக உள்ள நிலைமையைத் தவிர்க்க, தம்பியைப் பயன் படுத்தியுள்ளாள்...தன்

    Enjoying the preview?
    Page 1 of 1