Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gyanaguru Happiness - June 2024
Gyanaguru Happiness - June 2024
Gyanaguru Happiness - June 2024
Ebook102 pages22 minutes

Gyanaguru Happiness - June 2024

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

June 2024 Issue

Languageதமிழ்
Release dateJun 28, 2024
ISBN6580152511249
Gyanaguru Happiness - June 2024

Read more from S.K. Murugan

Related to Gyanaguru Happiness - June 2024

Related ebooks

Related categories

Reviews for Gyanaguru Happiness - June 2024

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gyanaguru Happiness - June 2024 - S.K. Murugan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஞானகுரு மகிழ்ச்சி - ஜூன் 2024

    Gyanaguru Happiness - June 2024

    Author:

    எஸ். கே. முருகன்

    S.K. Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sk-murugan

    பொருளடக்கம்

    வாயை மூடி பேசுவோம்.

    நடுத்தர வர்க்கம் என்பது கற்பனை…

    அம்மா என்றால் பணம்

    தினேஷ் கார்த்திக் என்றொரு ஃபீனிக்ஸ் பறவை

    ஞானகுரு தரிசனம்

    கிறிஸ்தவத்தை உலுக்கிய பாதிரியாரின் மகன்

    மம்முட்டி எனும் தத்துவ ஞானி

    பெண் விரும்பும் பெண்

    மந்திரச்சொல்

    ஞானகுரு பதில்கள்

    கரப்பான் பூச்சி் கோட்பாடு

    கவித்துவம்

    ஆசிரியர் பக்கம்

    வாயை மூடி பேசுவோம்.

    மகிழ்ச்சி தரும் மந்திரம்

    அமைதிக்கு மிகப்பெரிய பலம் உண்டு. இதை காலையில் கண் விழிக்கும் ஒவ்வொரு நபரும் உணர முடியும்.

    தூக்கத்தில் இருந்து நாமாக விழிக்கும் போது உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலுக்குத் தெம்பும் சுறுசுறுப்பும் கிடைத்திருக்கும். குழப்பங்களுக்கு விடை கிடைத்தது போல் இருக்கும். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் வந்திருக்கும். இதற்கெல்லாம் காரணம், உடலுக்கும் மனதுக்கும் கிடைத்த நீண்ட நேர அமைதி. இந்த அமைதியை நாள் முழுவதும் நீட்டிக்கும் போது, இன்னும் நிறைய பலன் கிடைக்கும்.

    பொதுவாகவே, அதிகம் பேசாமல் வேலை செய்பவரை, மிகவும் நல்லவர் என்று இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறது.

    உறவினர் அல்லது நண்பர்களுக்குள் கருத்து மோதல் வரும்போது, அமைதியாக இருப்பவர் யாருக்கும் எதிரியாவதில்லை. அலுவலக பாலிடிக்ஸில் ஈடுபடாமல் விலகி அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பவரை ராஜந்திரி என்று நினைக்கிறார்கள்.

    யாரேனும் கோபத்தில் மிரட்டும்போது அல்லது திட்டும் போதும் அமைதியாக ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என்று அஞ்சுகிறார்கள்.

    எனவே, அமைதி என்பது வரம். முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய சூழலில் குழப்பம் வருகிறதா? மனப்பதட்டம், இனம்புரியாத அச்சம், கவலை வருகிறதா...? கொஞ்ச நேரம் அந்த சூழ்நிலையில் இருந்து விலகி அமைதியாக இருங்கள். நிச்சயம் சரியான முடிவு கிடைத்துவிடும்.

    உங்கள் மீது வீணாக குற்றம் சொல்லும் போதும் அமைதியாக இருங்கள். நிறைய பேசி உங்களை யாருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை புரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் எதுவும் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. புரியாதவர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் தெளிவடையப் போவதில்லை.

    ஆகவே, அமைதியாக உலகத்தை வேடிக்கை பாருங்கள். அமைதியில் இருக்கிறது மகிழ்ச்சி.

    - எஸ்.கே.முருகன்

    நடுத்தர வர்க்கம் என்பது கற்பனை…

    ஏழை என்பதே நிஜம்...!

    பொருளாதார நிபுணர்கள் மக்களை ஏழைகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் என்று மூன்று ஜாதிகளாகப் பிரிக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் ஏழை, பணக்காரர்கள் என இரண்டு வர்க்கம் மட்டுமே உலகில் உள்ளனர் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    ஆம், நடுத்தர வர்க்கம் என்பது ஒரு கற்பனை. அதாவது, தங்களை பணக்காரர்களாக எண்ணிக்கொள்ளும் ஏழைகள் இவர்கள். விரைவில் தாங்கள் பணக்காரர்களாகி விடுவோம் என்று நம்புவார்கள். ஆனால், சம்பளத்துக்கு வேலை செய்வதை விடவே மாட்டார்கள்.

    மாத சம்பளத்துக்காரரால் ஒருபோதும் பணக்காரர் ஆகமுடியாது என்ற தியரி இவர்களுக்கு ஒருபோதும் புரியாது. ஆனாலும், தங்கள் வாழ்க்கை ஏழைகளை விட மேம்பட்டது என்று எண்ணிக்கொள்வதால் அதில் கொஞ்சம் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

    ஆனால், அந்த மகிழ்ச்சி உண்மை அல்ல. நடுத்தர வர்க்கத்தினர் ஒருபோதும் பணக்காரர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1